logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கும்பகோணத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ரவி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய அவர், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். அலுவலக திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, துப்புரவு மற்றும் களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. அத்துடன், அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சந்திரன், மாநகர செயலாளர் முருகானந்தம், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமரன், முன்னாள் தலைவர் லோகநாதன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அரசு முதல்வன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வினோத் ரவி, கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு புரட்சி நடந்தது போல கும்பகோணம் தொகுதி முக்கியமானதாக மாறியுள்ளதாகவும், கடந்த 30 ஆண்டுகளாக இத்தொகுதியில் திமுக மட்டுமே வெற்றி பெற்று வந்ததாகவும் குறிப்பிட்டார். தனக்கு வாய்ப்பளித்த கழகத் தலைவருக்கும், தன்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த கும்பகோணம் தொகுதி மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மேலும், தன்னை மக்களின் வீட்டுப் பிள்ளையாகக் கருதி எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றும், மக்களுக்குச் சேவை செய்ய மட்டுமே தான் வந்துள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். தனி மாவட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக உள்ளதாகவும், அதற்கான ஆலோசனைகளும் ஆய்வுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். பல்வேறு தரப்பினரும், அமைப்பினரும் பல ஆண்டுகளாக கும்பகோணம் மாவட்டமாக வேண்டும் எனப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என்றும், பல திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் குறித்த கேள்விக்கு, அந்தப் பகுதியில் கல்லூரி கேட்டிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். விவசாயக் கடன் தள்ளுபடி குறித்துப் பேசுகையில், எந்தவொரு அரசாங்கமும் முதல்வர்கள் விவசாயிகளுக்கான முழு கடன் தள்ளுபடி பற்றி ஆலோசனை செய்து அறிவிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார். காவிரி நீர் கண்டிப்பாக வரும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். இறுதியாக, பல வருடங்களாக கும்பகோணம் தொகுதிக்குக் கிடைக்காத அடிப்படைத் தேவைகள் மற்றும் தொகுதிக்கு அங்கீகாரம் பெற்றுத் தரத் தேவையான அனைத்து விஷயங்களையும் விரைவில் முதல்வரிடம் எடுத்துரைத்து, கும்பகோணம் தொகுதியின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் உறுதியாக இருப்பேன் என்றும் அமைச்சர் வினோத் ரவி தெரிவித்தார்.

10 hrs ago
user_Ramesh sarangan
Ramesh sarangan
கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
10 hrs ago

கும்பகோணத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ரவி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய அவர், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். அலுவலக திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, துப்புரவு மற்றும் களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. அத்துடன், அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சந்திரன், மாநகர செயலாளர் முருகானந்தம், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமரன், முன்னாள் தலைவர் லோகநாதன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அரசு முதல்வன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வினோத் ரவி, கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு புரட்சி நடந்தது போல கும்பகோணம் தொகுதி முக்கியமானதாக மாறியுள்ளதாகவும், கடந்த 30 ஆண்டுகளாக இத்தொகுதியில் திமுக மட்டுமே வெற்றி பெற்று வந்ததாகவும் குறிப்பிட்டார். தனக்கு வாய்ப்பளித்த கழகத் தலைவருக்கும், தன்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த கும்பகோணம் தொகுதி மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மேலும், தன்னை மக்களின் வீட்டுப் பிள்ளையாகக் கருதி எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றும், மக்களுக்குச் சேவை செய்ய மட்டுமே தான் வந்துள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். தனி மாவட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக உள்ளதாகவும், அதற்கான ஆலோசனைகளும் ஆய்வுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். பல்வேறு தரப்பினரும், அமைப்பினரும் பல ஆண்டுகளாக கும்பகோணம் மாவட்டமாக வேண்டும் எனப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என்றும், பல திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் குறித்த கேள்விக்கு, அந்தப் பகுதியில் கல்லூரி கேட்டிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். விவசாயக் கடன் தள்ளுபடி குறித்துப் பேசுகையில், எந்தவொரு அரசாங்கமும் முதல்வர்கள் விவசாயிகளுக்கான முழு கடன் தள்ளுபடி பற்றி ஆலோசனை செய்து அறிவிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார். காவிரி நீர் கண்டிப்பாக வரும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். இறுதியாக, பல வருடங்களாக கும்பகோணம் தொகுதிக்குக் கிடைக்காத அடிப்படைத் தேவைகள் மற்றும் தொகுதிக்கு அங்கீகாரம் பெற்றுத் தரத் தேவையான அனைத்து விஷயங்களையும் விரைவில் முதல்வரிடம் எடுத்துரைத்து, கும்பகோணம் தொகுதியின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் உறுதியாக இருப்பேன் என்றும் அமைச்சர் வினோத் ரவி தெரிவித்தார்.

More news from Karur and nearby areas
  • கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வைகநல்லூர் தெற்கு கிராமம் தாளியாம்பட்டியில் அமைந்துள்ள விநாயகர், மாசி பெரியண்ணசாமி, காமாட்சி அம்மன், காத்தவராயன், மதுரை வீரன் மற்றும் பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை ஏழு முப்பது மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கவும், மங்கள மேளதாளங்கள் ஒலிக்கவும், கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கருவறையில் உள்ள மாசி பெரியண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இக்கும்பாபிஷேக விழாவில் பல பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    1
    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வைகநல்லூர் தெற்கு கிராமம் தாளியாம்பட்டியில் அமைந்துள்ள விநாயகர், மாசி பெரியண்ணசாமி, காமாட்சி அம்மன், காத்தவராயன், மதுரை வீரன் மற்றும் பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை ஏழு முப்பது மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கவும், மங்கள மேளதாளங்கள் ஒலிக்கவும், கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கருவறையில் உள்ள மாசி பெரியண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இக்கும்பாபிஷேக விழாவில் பல பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    18 hrs ago
  • திருச்சி மாநகராட்சி, ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தில் பிரேதங்களை தகனம் செய்வது மற்றும் பராமரிப்புப் பணிகளை ஓராண்டு காலத்திற்கு, கடந்த 15.06.2026 முதல் கோவையைச் சேர்ந்த 'ஈஷா பவுண்டேஷன் காயநத்ஸ்தானம்' என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளோடும், இறந்தவர்களுக்குச் செலுத்தப்படும் இறுதி மரியாதையோடும் தொடர்புடைய இத்தகைய முக்கியமான பொதுச்சேவையை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்திருப்பது மிகுந்த கவலையளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போதைய ஒப்பந்தத்தின்படி, ஒரு பிரேதத்தை தகனம் செய்ய ரூ. 2,500 கட்டணமாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் வெறும் ரூ. 100 மட்டுமே மாநகராட்சிக்குச் செலுத்தப்படும் என்றும், மீதமுள்ள தொகையை தனியார் நிறுவனமே வைத்துக்கொண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிய வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுவதாகவும், இது பொதுச்சேவையை லாப நோக்கமிக்க வணிக நடவடிக்கையாக மாற்றும் அபாயத்தை உருவாக்குவதாகவும் கட்சி சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களது உறவினர்களின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளும்போது கூடுதல் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே கடந்த காலத்தில் கருமண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த நவீன எரிவாயு தகன மேடையின் பராமரிப்புப் பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தபோது, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் அஸ்திகள் முறையாக வழங்கப்படாததும், எரிவாயு செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரேதங்களை ஒரே நேரத்தில் தகனம் செய்ததும் போன்ற மனிதநேயமற்ற செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட்டங்களின் விளைவாகவே, அந்த பொறுப்புகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து மீட்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக தகன மேடைகளை பராமரித்து வந்தது. இத்தகைய கசப்பான அனுபவங்கள் இருந்தும் மீண்டும் அதே தவறை மாநகராட்சி நிர்வாகம் செய்வது அதிர்ச்சியளிப்பதாகவும், இது பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், இறந்தவர்களின் உடல்களுக்கு உரிய மரியாதை மற்றும் கண்ணியம் வழங்கப்படுமா என்ற கேள்வியையும் எழுப்புவதாகவும் கட்சி வலியுறுத்தியுள்ளது. பொது சேவை என்பது லாப நோக்கத்திற்காக நடத்தப்பட வேண்டிய துறை அல்ல என்றும், குறிப்பாக, மருத்துவம், குடிநீர், சுகாதாரம், இடுகாடு போன்ற அத்தியாவசிய சேவைகள் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நேரடிப் பொறுப்பிலேயே இருக்க வேண்டும் என்றும், இவற்றை தனியாருக்கு தாரைவார்ப்பது சமூக நீதி மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தை தனியாருக்கு வழங்கியுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, தகனம் மற்றும் பராமரிப்புப் பணிகளை திருச்சி மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி, அவர்களுக்கான பணிப்பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியத்தை உறுதி செய்து, மக்களுக்குத் தரமான மற்றும் நம்பகமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பொதுமக்களைத் திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஓயாமரி இடுகாட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா. லெனின் மற்றும் வி. சந்தானம், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
    1
    திருச்சி மாநகராட்சி, ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தில் பிரேதங்களை தகனம் செய்வது மற்றும் பராமரிப்புப் பணிகளை ஓராண்டு காலத்திற்கு, கடந்த 15.06.2026 முதல் கோவையைச் சேர்ந்த 'ஈஷா பவுண்டேஷன் காயநத்ஸ்தானம்' என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளோடும், இறந்தவர்களுக்குச் செலுத்தப்படும் இறுதி மரியாதையோடும் தொடர்புடைய இத்தகைய முக்கியமான பொதுச்சேவையை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்திருப்பது மிகுந்த கவலையளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போதைய ஒப்பந்தத்தின்படி, ஒரு பிரேதத்தை தகனம் செய்ய ரூ. 2,500 கட்டணமாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் வெறும் ரூ. 100 மட்டுமே மாநகராட்சிக்குச் செலுத்தப்படும் என்றும், மீதமுள்ள தொகையை தனியார் நிறுவனமே வைத்துக்கொண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிய வருகிறது.

இதனால் மாநகராட்சிக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுவதாகவும், இது பொதுச்சேவையை லாப நோக்கமிக்க வணிக நடவடிக்கையாக மாற்றும் அபாயத்தை உருவாக்குவதாகவும் கட்சி சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களது உறவினர்களின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளும்போது கூடுதல் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே கடந்த காலத்தில் கருமண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த நவீன எரிவாயு தகன மேடையின் பராமரிப்புப் பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தபோது, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் அஸ்திகள் முறையாக வழங்கப்படாததும், எரிவாயு செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரேதங்களை ஒரே நேரத்தில் தகனம் செய்ததும் போன்ற மனிதநேயமற்ற செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட்டங்களின் விளைவாகவே, அந்த பொறுப்புகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து மீட்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக தகன மேடைகளை பராமரித்து வந்தது.

இத்தகைய கசப்பான அனுபவங்கள் இருந்தும் மீண்டும் அதே தவறை மாநகராட்சி நிர்வாகம் செய்வது அதிர்ச்சியளிப்பதாகவும், இது பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், இறந்தவர்களின் உடல்களுக்கு உரிய மரியாதை மற்றும் கண்ணியம் வழங்கப்படுமா என்ற கேள்வியையும் எழுப்புவதாகவும் கட்சி வலியுறுத்தியுள்ளது. பொது சேவை என்பது லாப நோக்கத்திற்காக நடத்தப்பட வேண்டிய துறை அல்ல என்றும், குறிப்பாக, மருத்துவம், குடிநீர், சுகாதாரம், இடுகாடு போன்ற அத்தியாவசிய சேவைகள் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நேரடிப் பொறுப்பிலேயே இருக்க வேண்டும் என்றும், இவற்றை தனியாருக்கு தாரைவார்ப்பது சமூக நீதி மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தை தனியாருக்கு வழங்கியுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, தகனம் மற்றும் பராமரிப்புப் பணிகளை திருச்சி மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி, அவர்களுக்கான பணிப்பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியத்தை உறுதி செய்து, மக்களுக்குத் தரமான மற்றும் நம்பகமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பொதுமக்களைத் திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஓயாமரி இடுகாட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா. லெனின் மற்றும் வி. சந்தானம், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, தனது நகை அடகு கடையில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகக் கூறி ஓர் இளம் பெண்ணிடம் ₹22 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், பிரேம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மணப்பாறை கல்லாத்துபட்டியைச் சேர்ந்த மகாலெட்சுமி, லட்சுமி நாராயணன் நகரில் வசிக்கும் பிரேம்குமார் என்பவருடன் நட்பு கொண்டிருந்தார். பிரேம்குமார் மணப்பாறை மதுரை ரோட்டில் செல்வம் பேங்கர்ஸ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். மகாலெட்சுமி அவ்வப்போது பிரேம்குமாரிடம் அவசரத் தேவைக்காக பணம் கொடுத்து பெற்றுத் திருப்பி வந்துள்ளார். இந்நிலையில், 2023ஆம் ஆண்டில் தனது நகை அடகு கடையில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வதாகக் கூறி, பிரேம்குமார் மகாலெட்சுமியிடம் ₹25 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனை நம்பிய மகாலெட்சுமி தன்னிடமிருந்த ₹12 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொடுத்துள்ளார். மீதி பணம் இல்லாததால், அவர் தனது 30 பவுன் நகையையும் பிரேம்குமாரிடம் ஒப்படைத்துள்ளார். பிரேம்குமார் அந்த நகையைத் தன் பெயரில் அடகு வைத்து ₹10,50,000/- பெற்றுக்கொண்டுள்ளார். பலமுறை கேட்டும் பிரேம்குமார் தன்னை அடகு கடையில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ளாததால், மகாலெட்சுமி தனது பணத்தையும் நகையையும் திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். ஆனால், பிரேம்குமார் பணம் மற்றும் நகையைத் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, மகாலெட்சுமி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பிரேம்குமார் மற்றும் சிதம்பரம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, பிரேம்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் தப்பி ஓடிய சிதம்பரம் என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, தனது நகை அடகு கடையில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகக் கூறி ஓர் இளம் பெண்ணிடம் ₹22 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், பிரேம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மணப்பாறை கல்லாத்துபட்டியைச் சேர்ந்த மகாலெட்சுமி, லட்சுமி நாராயணன் நகரில் வசிக்கும் பிரேம்குமார் என்பவருடன் நட்பு கொண்டிருந்தார். பிரேம்குமார் மணப்பாறை மதுரை ரோட்டில் செல்வம் பேங்கர்ஸ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். மகாலெட்சுமி அவ்வப்போது பிரேம்குமாரிடம் அவசரத் தேவைக்காக பணம் கொடுத்து பெற்றுத் திருப்பி வந்துள்ளார். இந்நிலையில், 2023ஆம் ஆண்டில் தனது நகை அடகு கடையில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வதாகக் கூறி, பிரேம்குமார் மகாலெட்சுமியிடம் ₹25 லட்சம் பணம் கேட்டுள்ளார்.

இதனை நம்பிய மகாலெட்சுமி தன்னிடமிருந்த ₹12 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொடுத்துள்ளார். மீதி பணம் இல்லாததால், அவர் தனது 30 பவுன் நகையையும் பிரேம்குமாரிடம் ஒப்படைத்துள்ளார். பிரேம்குமார் அந்த நகையைத் தன் பெயரில் அடகு வைத்து ₹10,50,000/- பெற்றுக்கொண்டுள்ளார். பலமுறை கேட்டும் பிரேம்குமார் தன்னை அடகு கடையில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ளாததால், மகாலெட்சுமி தனது பணத்தையும் நகையையும் திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். ஆனால், பிரேம்குமார் பணம் மற்றும் நகையைத் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, மகாலெட்சுமி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பிரேம்குமார் மற்றும் சிதம்பரம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, பிரேம்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் தப்பி ஓடிய சிதம்பரம் என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • திருவண்ணாமலை மாநகராட்சிக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குப்பை சேகரிக்கும் வாகனங்கள் இரவு நேரத்தில் குப்பையை அகற்றினால், பள்ளி வாகனங்களின் போக்குவரத்து சீரமைப்பைக் கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தெருமுனைகளில் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படாததால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் குப்பையை சாலைகளில் கொட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    2
    திருவண்ணாமலை மாநகராட்சிக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குப்பை சேகரிக்கும் வாகனங்கள் இரவு நேரத்தில் குப்பையை அகற்றினால், பள்ளி வாகனங்களின் போக்குவரத்து சீரமைப்பைக் கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தெருமுனைகளில் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படாததால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் குப்பையை சாலைகளில் கொட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Thanish Waran
    Thanish Waran
    Tiruvannamalai, Tamil Nadu•
    6 hrs ago
  • நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், பனந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள திருநங்கைகளின் குலதெய்வமாக விளங்கும் நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில், இன்று ஜூன் 26 வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்றன. இந்த வழிபாடுகளில், அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது வேண்டுதல்களை முன்வைத்து பிரார்த்தனை செய்தனர்.
    1
    நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், பனந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள திருநங்கைகளின் குலதெய்வமாக விளங்கும் நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில், இன்று ஜூன் 26 வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்றன. இந்த வழிபாடுகளில், அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது வேண்டுதல்களை முன்வைத்து பிரார்த்தனை செய்தனர்.
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்தின் முக்கிய வீதிகள், பள்ளிக்கூடம், பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை அருகே கேபிள் டிவி நெட்வொர்க் ஒயர்கள் மிகவும் தாழ்வாகத் தொங்கி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஒயர்கள் பல இடங்களில் தலையில் உரசும் நிலையில் இருப்பதால், சரக்கு லாரிகள், பள்ளிப் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த ஒயர்களில் தண்ணீர் பட்டு மின் அதிர்ச்சி ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதை உடனடியாகச் சரிசெய்ய நகராட்சி நிர்வாகமும், கேபிள் நிறுவனங்களும் ஆய்வு மேற்கொண்டு, குளித்தலை பகுதியில் தாழ்வாகத் தொங்கும் ஒயர்களை முறையாகச் சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளித்தலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்தின் முக்கிய வீதிகள், பள்ளிக்கூடம், பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை அருகே கேபிள் டிவி நெட்வொர்க் ஒயர்கள் மிகவும் தாழ்வாகத் தொங்கி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஒயர்கள் பல இடங்களில் தலையில் உரசும் நிலையில் இருப்பதால், சரக்கு லாரிகள், பள்ளிப் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த ஒயர்களில் தண்ணீர் பட்டு மின் அதிர்ச்சி ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

இதை உடனடியாகச் சரிசெய்ய நகராட்சி நிர்வாகமும், கேபிள் நிறுவனங்களும் ஆய்வு மேற்கொண்டு, குளித்தலை பகுதியில் தாழ்வாகத் தொங்கும் ஒயர்களை முறையாகச் சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளித்தலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    18 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையில், உதயம் தியேட்டருக்குப் பின்புறம் உள்ள குடியிருப்புப் பகுதி அருகே ஒரு நல்ல பாம்பு தென்பட்டதை அப்பகுதி மக்கள் கண்டனர். இதனையறிந்த பொதுமக்கள் உடனடியாக மணப்பாறை தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில், நிலை அலுவலர் ரமேஷ் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வீட்டின் அருகே இருந்த சுமார் ஆறடி நீளமுள்ள நல்ல பாம்பை, பாம்பு பிடிப்பவர் உதவியுடன் லாவகமாகப் பிடித்து சாக்குப்பையில் அடைத்தனர். பிடிக்கப்பட்ட அந்த மலை பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்தப் பாம்பை அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையில், உதயம் தியேட்டருக்குப் பின்புறம் உள்ள குடியிருப்புப் பகுதி அருகே ஒரு நல்ல பாம்பு தென்பட்டதை அப்பகுதி மக்கள் கண்டனர். இதனையறிந்த பொதுமக்கள் உடனடியாக மணப்பாறை தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில், நிலை அலுவலர் ரமேஷ் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வீட்டின் அருகே இருந்த சுமார் ஆறடி நீளமுள்ள நல்ல பாம்பை, பாம்பு பிடிப்பவர் உதவியுடன் லாவகமாகப் பிடித்து சாக்குப்பையில் அடைத்தனர்.

பிடிக்கப்பட்ட அந்த மலை பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்தப் பாம்பை அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ள அரசூர் கிராமத்தில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோவிலில் கும்மி பாட்டு நிகழ்வு நடைபெற்றது.
    1
    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ள அரசூர் கிராமத்தில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோவிலில் கும்மி பாட்டு நிகழ்வு நடைபெற்றது.
    user_Namma Ooru Adanai
    Namma Ooru Adanai
    Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    15 hrs ago
  • சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டம் ஆத்தூரின் மையப்பகுதியில் உள்ள சாரதா பங்க் முன்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று ஒரு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், பங்கேற்றவர்கள் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். இந்த பேரணியை ஆத்தூர் டிஎஸ்பி சத்யராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார், இதன் மூலம் சேலம் ஆத்தூரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    1
    சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டம் ஆத்தூரின் மையப்பகுதியில் உள்ள சாரதா பங்க் முன்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று ஒரு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், பங்கேற்றவர்கள் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். இந்த பேரணியை ஆத்தூர் டிஎஸ்பி சத்யராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார், இதன் மூலம் சேலம் ஆத்தூரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.