logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்தின் முக்கிய வீதிகள், பள்ளிக்கூடம், பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை அருகே கேபிள் டிவி நெட்வொர்க் ஒயர்கள் மிகவும் தாழ்வாகத் தொங்கி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஒயர்கள் பல இடங்களில் தலையில் உரசும் நிலையில் இருப்பதால், சரக்கு லாரிகள், பள்ளிப் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த ஒயர்களில் தண்ணீர் பட்டு மின் அதிர்ச்சி ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதை உடனடியாகச் சரிசெய்ய நகராட்சி நிர்வாகமும், கேபிள் நிறுவனங்களும் ஆய்வு மேற்கொண்டு, குளித்தலை பகுதியில் தாழ்வாகத் தொங்கும் ஒயர்களை முறையாகச் சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளித்தலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

19 hrs ago
user_கருணாநிதி
கருணாநிதி
Kulithalai, Karur•
19 hrs ago

கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்தின் முக்கிய வீதிகள், பள்ளிக்கூடம், பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை அருகே கேபிள் டிவி நெட்வொர்க் ஒயர்கள் மிகவும் தாழ்வாகத் தொங்கி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஒயர்கள் பல இடங்களில் தலையில் உரசும் நிலையில் இருப்பதால், சரக்கு லாரிகள், பள்ளிப் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த ஒயர்களில் தண்ணீர் பட்டு மின் அதிர்ச்சி ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதை உடனடியாகச் சரிசெய்ய நகராட்சி நிர்வாகமும், கேபிள் நிறுவனங்களும் ஆய்வு மேற்கொண்டு, குளித்தலை பகுதியில் தாழ்வாகத் தொங்கும் ஒயர்களை முறையாகச் சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளித்தலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாநகராட்சி, ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தில் பிரேதங்களை தகனம் செய்வது மற்றும் பராமரிப்புப் பணிகளை ஓராண்டு காலத்திற்கு, கடந்த 15.06.2026 முதல் கோவையைச் சேர்ந்த 'ஈஷா பவுண்டேஷன் காயநத்ஸ்தானம்' என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளோடும், இறந்தவர்களுக்குச் செலுத்தப்படும் இறுதி மரியாதையோடும் தொடர்புடைய இத்தகைய முக்கியமான பொதுச்சேவையை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்திருப்பது மிகுந்த கவலையளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போதைய ஒப்பந்தத்தின்படி, ஒரு பிரேதத்தை தகனம் செய்ய ரூ. 2,500 கட்டணமாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் வெறும் ரூ. 100 மட்டுமே மாநகராட்சிக்குச் செலுத்தப்படும் என்றும், மீதமுள்ள தொகையை தனியார் நிறுவனமே வைத்துக்கொண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிய வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுவதாகவும், இது பொதுச்சேவையை லாப நோக்கமிக்க வணிக நடவடிக்கையாக மாற்றும் அபாயத்தை உருவாக்குவதாகவும் கட்சி சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களது உறவினர்களின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளும்போது கூடுதல் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே கடந்த காலத்தில் கருமண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த நவீன எரிவாயு தகன மேடையின் பராமரிப்புப் பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தபோது, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் அஸ்திகள் முறையாக வழங்கப்படாததும், எரிவாயு செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரேதங்களை ஒரே நேரத்தில் தகனம் செய்ததும் போன்ற மனிதநேயமற்ற செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட்டங்களின் விளைவாகவே, அந்த பொறுப்புகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து மீட்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக தகன மேடைகளை பராமரித்து வந்தது. இத்தகைய கசப்பான அனுபவங்கள் இருந்தும் மீண்டும் அதே தவறை மாநகராட்சி நிர்வாகம் செய்வது அதிர்ச்சியளிப்பதாகவும், இது பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், இறந்தவர்களின் உடல்களுக்கு உரிய மரியாதை மற்றும் கண்ணியம் வழங்கப்படுமா என்ற கேள்வியையும் எழுப்புவதாகவும் கட்சி வலியுறுத்தியுள்ளது. பொது சேவை என்பது லாப நோக்கத்திற்காக நடத்தப்பட வேண்டிய துறை அல்ல என்றும், குறிப்பாக, மருத்துவம், குடிநீர், சுகாதாரம், இடுகாடு போன்ற அத்தியாவசிய சேவைகள் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நேரடிப் பொறுப்பிலேயே இருக்க வேண்டும் என்றும், இவற்றை தனியாருக்கு தாரைவார்ப்பது சமூக நீதி மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தை தனியாருக்கு வழங்கியுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, தகனம் மற்றும் பராமரிப்புப் பணிகளை திருச்சி மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி, அவர்களுக்கான பணிப்பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியத்தை உறுதி செய்து, மக்களுக்குத் தரமான மற்றும் நம்பகமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பொதுமக்களைத் திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஓயாமரி இடுகாட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா. லெனின் மற்றும் வி. சந்தானம், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
    1
    திருச்சி மாநகராட்சி, ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தில் பிரேதங்களை தகனம் செய்வது மற்றும் பராமரிப்புப் பணிகளை ஓராண்டு காலத்திற்கு, கடந்த 15.06.2026 முதல் கோவையைச் சேர்ந்த 'ஈஷா பவுண்டேஷன் காயநத்ஸ்தானம்' என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளோடும், இறந்தவர்களுக்குச் செலுத்தப்படும் இறுதி மரியாதையோடும் தொடர்புடைய இத்தகைய முக்கியமான பொதுச்சேவையை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்திருப்பது மிகுந்த கவலையளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போதைய ஒப்பந்தத்தின்படி, ஒரு பிரேதத்தை தகனம் செய்ய ரூ. 2,500 கட்டணமாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் வெறும் ரூ. 100 மட்டுமே மாநகராட்சிக்குச் செலுத்தப்படும் என்றும், மீதமுள்ள தொகையை தனியார் நிறுவனமே வைத்துக்கொண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிய வருகிறது.

இதனால் மாநகராட்சிக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுவதாகவும், இது பொதுச்சேவையை லாப நோக்கமிக்க வணிக நடவடிக்கையாக மாற்றும் அபாயத்தை உருவாக்குவதாகவும் கட்சி சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களது உறவினர்களின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளும்போது கூடுதல் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே கடந்த காலத்தில் கருமண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த நவீன எரிவாயு தகன மேடையின் பராமரிப்புப் பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தபோது, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் அஸ்திகள் முறையாக வழங்கப்படாததும், எரிவாயு செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரேதங்களை ஒரே நேரத்தில் தகனம் செய்ததும் போன்ற மனிதநேயமற்ற செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட்டங்களின் விளைவாகவே, அந்த பொறுப்புகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து மீட்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக தகன மேடைகளை பராமரித்து வந்தது.

இத்தகைய கசப்பான அனுபவங்கள் இருந்தும் மீண்டும் அதே தவறை மாநகராட்சி நிர்வாகம் செய்வது அதிர்ச்சியளிப்பதாகவும், இது பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், இறந்தவர்களின் உடல்களுக்கு உரிய மரியாதை மற்றும் கண்ணியம் வழங்கப்படுமா என்ற கேள்வியையும் எழுப்புவதாகவும் கட்சி வலியுறுத்தியுள்ளது. பொது சேவை என்பது லாப நோக்கத்திற்காக நடத்தப்பட வேண்டிய துறை அல்ல என்றும், குறிப்பாக, மருத்துவம், குடிநீர், சுகாதாரம், இடுகாடு போன்ற அத்தியாவசிய சேவைகள் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நேரடிப் பொறுப்பிலேயே இருக்க வேண்டும் என்றும், இவற்றை தனியாருக்கு தாரைவார்ப்பது சமூக நீதி மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தை தனியாருக்கு வழங்கியுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, தகனம் மற்றும் பராமரிப்புப் பணிகளை திருச்சி மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி, அவர்களுக்கான பணிப்பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியத்தை உறுதி செய்து, மக்களுக்குத் தரமான மற்றும் நம்பகமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பொதுமக்களைத் திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஓயாமரி இடுகாட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா. லெனின் மற்றும் வி. சந்தானம், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, தனது நகை அடகு கடையில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகக் கூறி ஓர் இளம் பெண்ணிடம் ₹22 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், பிரேம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மணப்பாறை கல்லாத்துபட்டியைச் சேர்ந்த மகாலெட்சுமி, லட்சுமி நாராயணன் நகரில் வசிக்கும் பிரேம்குமார் என்பவருடன் நட்பு கொண்டிருந்தார். பிரேம்குமார் மணப்பாறை மதுரை ரோட்டில் செல்வம் பேங்கர்ஸ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். மகாலெட்சுமி அவ்வப்போது பிரேம்குமாரிடம் அவசரத் தேவைக்காக பணம் கொடுத்து பெற்றுத் திருப்பி வந்துள்ளார். இந்நிலையில், 2023ஆம் ஆண்டில் தனது நகை அடகு கடையில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வதாகக் கூறி, பிரேம்குமார் மகாலெட்சுமியிடம் ₹25 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனை நம்பிய மகாலெட்சுமி தன்னிடமிருந்த ₹12 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொடுத்துள்ளார். மீதி பணம் இல்லாததால், அவர் தனது 30 பவுன் நகையையும் பிரேம்குமாரிடம் ஒப்படைத்துள்ளார். பிரேம்குமார் அந்த நகையைத் தன் பெயரில் அடகு வைத்து ₹10,50,000/- பெற்றுக்கொண்டுள்ளார். பலமுறை கேட்டும் பிரேம்குமார் தன்னை அடகு கடையில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ளாததால், மகாலெட்சுமி தனது பணத்தையும் நகையையும் திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். ஆனால், பிரேம்குமார் பணம் மற்றும் நகையைத் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, மகாலெட்சுமி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பிரேம்குமார் மற்றும் சிதம்பரம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, பிரேம்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் தப்பி ஓடிய சிதம்பரம் என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, தனது நகை அடகு கடையில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகக் கூறி ஓர் இளம் பெண்ணிடம் ₹22 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், பிரேம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மணப்பாறை கல்லாத்துபட்டியைச் சேர்ந்த மகாலெட்சுமி, லட்சுமி நாராயணன் நகரில் வசிக்கும் பிரேம்குமார் என்பவருடன் நட்பு கொண்டிருந்தார். பிரேம்குமார் மணப்பாறை மதுரை ரோட்டில் செல்வம் பேங்கர்ஸ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். மகாலெட்சுமி அவ்வப்போது பிரேம்குமாரிடம் அவசரத் தேவைக்காக பணம் கொடுத்து பெற்றுத் திருப்பி வந்துள்ளார். இந்நிலையில், 2023ஆம் ஆண்டில் தனது நகை அடகு கடையில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வதாகக் கூறி, பிரேம்குமார் மகாலெட்சுமியிடம் ₹25 லட்சம் பணம் கேட்டுள்ளார்.

இதனை நம்பிய மகாலெட்சுமி தன்னிடமிருந்த ₹12 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொடுத்துள்ளார். மீதி பணம் இல்லாததால், அவர் தனது 30 பவுன் நகையையும் பிரேம்குமாரிடம் ஒப்படைத்துள்ளார். பிரேம்குமார் அந்த நகையைத் தன் பெயரில் அடகு வைத்து ₹10,50,000/- பெற்றுக்கொண்டுள்ளார். பலமுறை கேட்டும் பிரேம்குமார் தன்னை அடகு கடையில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ளாததால், மகாலெட்சுமி தனது பணத்தையும் நகையையும் திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். ஆனால், பிரேம்குமார் பணம் மற்றும் நகையைத் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, மகாலெட்சுமி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பிரேம்குமார் மற்றும் சிதம்பரம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, பிரேம்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் தப்பி ஓடிய சிதம்பரம் என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி போதைப்பொருள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
    1
    திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி போதைப்பொருள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    16 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், அம்மாபட்டினம் பகுதியில் தொடர்ந்து சீரான மின்சாரம் கிடைக்காததால் பொதுமக்கள் பெரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகினர். இப்பிரச்சினை குறித்து அப்பகுதி மக்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் புகார் அளித்திருந்தபோதிலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று அம்மாபட்டினத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், அம்மாபட்டினம் பகுதியில் தொடர்ந்து சீரான மின்சாரம் கிடைக்காததால் பொதுமக்கள் பெரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகினர். இப்பிரச்சினை குறித்து அப்பகுதி மக்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் புகார் அளித்திருந்தபோதிலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று அம்மாபட்டினத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் காரணமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
    user_P.Senthilvelan
    P.Senthilvelan
    Insurance Agent அறந்தாங்கி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • கும்பகோணத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ரவி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய அவர், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். அலுவலக திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, துப்புரவு மற்றும் களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. அத்துடன், அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சந்திரன், மாநகர செயலாளர் முருகானந்தம், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமரன், முன்னாள் தலைவர் லோகநாதன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அரசு முதல்வன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வினோத் ரவி, கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு புரட்சி நடந்தது போல கும்பகோணம் தொகுதி முக்கியமானதாக மாறியுள்ளதாகவும், கடந்த 30 ஆண்டுகளாக இத்தொகுதியில் திமுக மட்டுமே வெற்றி பெற்று வந்ததாகவும் குறிப்பிட்டார். தனக்கு வாய்ப்பளித்த கழகத் தலைவருக்கும், தன்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த கும்பகோணம் தொகுதி மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மேலும், தன்னை மக்களின் வீட்டுப் பிள்ளையாகக் கருதி எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றும், மக்களுக்குச் சேவை செய்ய மட்டுமே தான் வந்துள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். தனி மாவட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக உள்ளதாகவும், அதற்கான ஆலோசனைகளும் ஆய்வுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். பல்வேறு தரப்பினரும், அமைப்பினரும் பல ஆண்டுகளாக கும்பகோணம் மாவட்டமாக வேண்டும் எனப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என்றும், பல திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் குறித்த கேள்விக்கு, அந்தப் பகுதியில் கல்லூரி கேட்டிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். விவசாயக் கடன் தள்ளுபடி குறித்துப் பேசுகையில், எந்தவொரு அரசாங்கமும் முதல்வர்கள் விவசாயிகளுக்கான முழு கடன் தள்ளுபடி பற்றி ஆலோசனை செய்து அறிவிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார். காவிரி நீர் கண்டிப்பாக வரும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். இறுதியாக, பல வருடங்களாக கும்பகோணம் தொகுதிக்குக் கிடைக்காத அடிப்படைத் தேவைகள் மற்றும் தொகுதிக்கு அங்கீகாரம் பெற்றுத் தரத் தேவையான அனைத்து விஷயங்களையும் விரைவில் முதல்வரிடம் எடுத்துரைத்து, கும்பகோணம் தொகுதியின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் உறுதியாக இருப்பேன் என்றும் அமைச்சர் வினோத் ரவி தெரிவித்தார்.
    1
    கும்பகோணத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ரவி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய அவர், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். அலுவலக திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, துப்புரவு மற்றும் களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. அத்துடன், அன்னதானமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சந்திரன், மாநகர செயலாளர் முருகானந்தம், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமரன், முன்னாள் தலைவர் லோகநாதன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அரசு முதல்வன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வினோத் ரவி, கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு புரட்சி நடந்தது போல கும்பகோணம் தொகுதி முக்கியமானதாக மாறியுள்ளதாகவும், கடந்த 30 ஆண்டுகளாக இத்தொகுதியில் திமுக மட்டுமே வெற்றி பெற்று வந்ததாகவும் குறிப்பிட்டார். தனக்கு வாய்ப்பளித்த கழகத் தலைவருக்கும், தன்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த கும்பகோணம் தொகுதி மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மேலும், தன்னை மக்களின் வீட்டுப் பிள்ளையாகக் கருதி எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றும், மக்களுக்குச் சேவை செய்ய மட்டுமே தான் வந்துள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

தனி மாவட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் நிச்சயமாக உள்ளதாகவும், அதற்கான ஆலோசனைகளும் ஆய்வுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். பல்வேறு தரப்பினரும், அமைப்பினரும் பல ஆண்டுகளாக கும்பகோணம் மாவட்டமாக வேண்டும் எனப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என்றும், பல திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் குறித்த கேள்விக்கு, அந்தப் பகுதியில் கல்லூரி கேட்டிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். விவசாயக் கடன் தள்ளுபடி குறித்துப் பேசுகையில், எந்தவொரு அரசாங்கமும் முதல்வர்கள் விவசாயிகளுக்கான முழு கடன் தள்ளுபடி பற்றி ஆலோசனை செய்து அறிவிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார். காவிரி நீர் கண்டிப்பாக வரும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.

இறுதியாக, பல வருடங்களாக கும்பகோணம் தொகுதிக்குக் கிடைக்காத அடிப்படைத் தேவைகள் மற்றும் தொகுதிக்கு அங்கீகாரம் பெற்றுத் தரத் தேவையான அனைத்து விஷயங்களையும் விரைவில் முதல்வரிடம் எடுத்துரைத்து, கும்பகோணம் தொகுதியின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் உறுதியாக இருப்பேன் என்றும் அமைச்சர் வினோத் ரவி தெரிவித்தார்.
    user_Ramesh sarangan
    Ramesh sarangan
    கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா அவர்கள், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களைச் சந்தித்தார்.
    1
    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா அவர்கள், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களைச் சந்தித்தார்.
    user_மணிகண்டன்
    மணிகண்டன்
    News Anchor பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்தின் முக்கிய வீதிகள், பள்ளிக்கூடம், பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை அருகே கேபிள் டிவி நெட்வொர்க் ஒயர்கள் மிகவும் தாழ்வாகத் தொங்கி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஒயர்கள் பல இடங்களில் தலையில் உரசும் நிலையில் இருப்பதால், சரக்கு லாரிகள், பள்ளிப் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த ஒயர்களில் தண்ணீர் பட்டு மின் அதிர்ச்சி ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதை உடனடியாகச் சரிசெய்ய நகராட்சி நிர்வாகமும், கேபிள் நிறுவனங்களும் ஆய்வு மேற்கொண்டு, குளித்தலை பகுதியில் தாழ்வாகத் தொங்கும் ஒயர்களை முறையாகச் சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளித்தலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்தின் முக்கிய வீதிகள், பள்ளிக்கூடம், பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை அருகே கேபிள் டிவி நெட்வொர்க் ஒயர்கள் மிகவும் தாழ்வாகத் தொங்கி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஒயர்கள் பல இடங்களில் தலையில் உரசும் நிலையில் இருப்பதால், சரக்கு லாரிகள், பள்ளிப் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த ஒயர்களில் தண்ணீர் பட்டு மின் அதிர்ச்சி ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

இதை உடனடியாகச் சரிசெய்ய நகராட்சி நிர்வாகமும், கேபிள் நிறுவனங்களும் ஆய்வு மேற்கொண்டு, குளித்தலை பகுதியில் தாழ்வாகத் தொங்கும் ஒயர்களை முறையாகச் சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குளித்தலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    19 hrs ago
  • #chanakasava #ana_d_armas #rashmika_mandanna #sydney_sweeney 🥺🥺🥺🥺🥺💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💗💗💗
    1
    #chanakasava #ana_d_armas #rashmika_mandanna #sydney_sweeney 🥺🥺🥺🥺🥺💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💗💗💗
    user_Chanakasava44
    Chanakasava44
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள சிவகிரிபட்டி இடும்பன் கோவில் பைபாஸ் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பூச்செடிகள் தண்ணீர் இல்லாமல் கருகி வாடிக் கொண்டிருக்கின்றன. இதனால், அப்பகுதியில் உள்ள இச்செடிகள் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் செடிகளை வாடவிடாமல் பராமரிக்க, இத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என அவ்வழியே செல்லும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள சிவகிரிபட்டி இடும்பன் கோவில் பைபாஸ் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பூச்செடிகள் தண்ணீர் இல்லாமல் கருகி வாடிக் கொண்டிருக்கின்றன. இதனால், அப்பகுதியில் உள்ள இச்செடிகள் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் செடிகளை வாடவிடாமல் பராமரிக்க, இத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என அவ்வழியே செல்லும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_மணிகண்டன்
    மணிகண்டன்
    News Anchor பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.