பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆண்டிபட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுசந்தையில் 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனை மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து இறைச்சி ஆடுகளை ஆர்வமாக வாங்கிசென்ற வியாபாரிகள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை ஆட்டுசந்தை நடைபெறுகிறது. இங்கு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில் தேனி மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் விவசாயிகள் ஆடுகளை வாங்குவதற்கு வருவர். இந்நிலையில் இன்னும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் ஆண்டிபட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுசந்தையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானது. 10 கிலோ எடை கொண்ட ஆடு 6 ஆயிரம் ரூபாய்க்கும்,25 கிலோ எடை கொண்ட ஆடு 15 ஆயிரம் ரூபாய்க்கும், 10 கிலோ எடை கொண்ட கிடாய் ஆடு 8 ஆயிரம் ரூபாய் வரையிலும், 25 கிலோ எடை கொண்ட கிடாய் ஆடு 17 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது. மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை இறைச்சிக்காக ஆர்வமாக வாங்கி சென்றதால் இன்று மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானது. ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆண்டிபட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுசந்தையில் 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனை மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து இறைச்சி ஆடுகளை ஆர்வமாக வாங்கிசென்ற வியாபாரிகள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை ஆட்டுசந்தை நடைபெறுகிறது. இங்கு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில் தேனி மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் விவசாயிகள் ஆடுகளை வாங்குவதற்கு வருவர். இந்நிலையில் இன்னும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் ஆண்டிபட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுசந்தையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானது. 10 கிலோ எடை கொண்ட ஆடு 6 ஆயிரம் ரூபாய்க்கும்,25 கிலோ எடை கொண்ட ஆடு 15 ஆயிரம் ரூபாய்க்கும், 10 கிலோ எடை கொண்ட கிடாய் ஆடு 8 ஆயிரம் ரூபாய் வரையிலும், 25 கிலோ எடை கொண்ட கிடாய் ஆடு 17 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது. மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை இறைச்சிக்காக ஆர்வமாக வாங்கி சென்றதால் இன்று மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானது. ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
- பாமக சார்பில் பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இன்று மகளிர் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டார் செளமியா அன்புமணி செல்லும் இடமெல்லாம் பெண்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறப்பான வரவேற்பு அளித்தனர் #PMK #sowmiyaanbumani #AnbumaniRamadoss #ForAllWomenAndGirls #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா1
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய காவல் நிலையம் எதிரே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் இன்று முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு 16 வகை அனைத்து திரவியங்கள் பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முருகன் கடவுளை ஏராளமான பக்தர்கள் அருள் பெற்று சென்றனர்1
- பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பேசும்போது கரூர் துயரச் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணம் என கூறியது குறித்து கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஏழு மணி நேரம் கால தாமதமாக வந்தது யார்? விளக்கு அணைத்தது யார்? இந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருவதால் விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ, மாணவர்களுக்கான மணிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளரிடம் தெரிவித்தார்.1
- நாம் வாங்கும் காலண்டர் எவ்வளவு பேர் உழைப்பில் எவ்வாறு உருவாகிறது என்று பாருங்கள்.1
- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் வீதி அருகே உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டில், தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த லட்சுமி என்ற தூய்மை பணியாளரை பூக்கடை உரிமையாளர் நல்லசாமி என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தூய்மை பணியாளர்கள், கடையை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.1
- திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்ப கவுண்டம் பாளையம்பகுதியில் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து 30 பேர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு லேசான காயம்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை* விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் சாலையில் சாய்ந்தது. எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்பகவுண்டம்பாளையம் அருகில் TN 01 Y 3448 என்ற எண் கொண்ட விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் செலம்பகவுண்டம்பாளையம் அருகில் வரும்போது வாகனத்தில் பட்டைஎதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாகஉடைந்து போனதால் வண்டி ரோட்டிலேயே வலது புறமாக சாய்ந்து விட்டது. நல்வாய்ப்பாக பின் பகுதியில் எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக வரும் என்று வாகனம் பழுதானதால் மாற்று வாகனமாக வந்த வாகனம் பட்டை உடைந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் 30 பள்ளி குழந்தைகள் சென்றதில் 5 ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பினார்கள்.சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.1
- *சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் குரும்ப கவுண்டர் சமுதாயத்தையும், அதன் தலைவரையும் இழிவாகப் பேசிய நபரை கைது செய்ய வலியுறுத்தி* *மக்கள் சமூக நீதிப் பேரவை சமூக நல்லிணக்க பாதுகாப்பு குழு சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்* குரும்ப கவுண்டர் சமுதாயத்தை பற்றியும் அதன் தலைவர் கிருஷ்ணசாமி குறித்தும் கோவையைச் சேர்ந்த பரமசிவம் என்ற நபர் இழிவாக பேசி சமுதாயத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வாட்ஸ்அப் பதிவு மூலம் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சமூகநீதி பேரவை சமூக நல்லிணக்க பாதுகாப்பு குழு சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் குரும்ப கவுண்டர் சமுதாய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது இதனால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் குரும்ப கவுண்டர் சமுதாயத்தையும் அதன் தலைவரையும் மிரட்டி ஆடியோ பதிவை வெளியிட்ட கோவையைச் சேர்ந்த நபரை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்1
- கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கணபதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆலயம் வந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.1
- ஆலங்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு (VIDEO) பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் பனிப் பொழிவுடன் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடும் பனி நிலவியதால் அதிகாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாலையை மறைத்தவாறு பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்புவிளக்கை எரிய விட்டவாறு சென்றனர்.1