Shuru
Apke Nagar Ki App…
திருப்பூரில் பாஜக பிரம்மாண்ட வாகன பேரணி - கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பு திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக தங்கராஜ் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகள் வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரம்மாண்ட பேரணி நடத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Vel
திருப்பூரில் பாஜக பிரம்மாண்ட வாகன பேரணி - கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பு திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக தங்கராஜ் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகள் வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரம்மாண்ட பேரணி நடத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக தங்கராஜ் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகள் வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரம்மாண்ட பேரணி நடத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- Post by G.thangarasu1
- 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் சசிகலா மற்றும் மருத்துவர் அய்யா ராமதாஸ், ஸ்ரீ காந்திமதி அறிவித்த 120 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி இன்று பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில், வே. மலைக்கோட்டை தர்மா தலைமையில் பால்குடம் எடுத்து, மாவிளக்கு இட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.1
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக, பிரபல நகைச்சுவை நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது குறித்து நடிகர் பெஞ்சமின் கூறும் போது அமைச்சர் ஈடுபட்ட தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது மருத்துவர்களின் தீவிர முயற்சியால் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முழுவதும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.1
- குளித்தலையில் அண்ணா திமுக சார்பில் கடந்த 30 நாட்களாக வாக்குகள் சேகரிக்க உதவிய பொறுப்பாளர்களுக்கும் கழக நண்பர்களுக்கும் அனைவருக்கும் அண்ணா திமுக சார்பாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் எஸ் கருணாகரன் அவர்கள் நன்றிகளை தெரிவித்து குளித்தலை பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறி குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு பொதுமக்கள் இடையே அண்ணா திமுகவுக்கு அனைவரும் வாக்குகள் அளிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்1
- சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் சர்க்கரை சரவணன் வெளியிட்டுள்ள சமூக வலைதள வீடியோ அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதில் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திரன்,கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் நிர்வாகிகள் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டி வருவதாகவும், இதனால் அமைச்சரின் வெற்றி கேள்விக்குறியாகி? என தெரிவித்துள்ளார்1
- திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அய்யலூரில் இன்று அதிமுக வேட்பாளர் பரமசிவத்திற்கு பொதுமக்கள் பேராதரவு கொடுத்து அவரை வரவேற்று மாலை அணிவித்து மலர்கள் தூவி சிறப்பு செய்தனர். இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் டிசி ராஜமோகன் தலைமையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1