logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பெருமையுடன் நடத்தப்பட்ட சத்யா கோப்பைக்கான 27-வது அகில இந்திய கைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உற்சாகமாக நடைபெற்றன. இந்த போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் சென்னை அணிகளே சத்யா கோப்பையை தட்டிச் சென்றன. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணியும், கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சத்யா கோப்பையை கைப்பற்றியது. முதல் இடம் பெற்ற எஸ்.டி.ஏ.டி. சென்னை அணிக்கு 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை வருமானவரித்துறை அணியும், கே.எஸ்.இ.பி. கேரளா அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் வருமானவரித்துறை சென்னை அணி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் சத்யா கோப்பையையும் வென்றது. ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வருமானவரித்துறை சென்னை அணிக்கு 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கே.எஸ்.இ.பி. கேரளா அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் ஜான் வசீகரன் வரவேற்புரை ஆற்றினார். சத்யா மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ஜான் ரோஷன், வி.ஓ.சி. துறைமுக ஆணையத்தின் செயலர் எஸ்.பி. மோகன் குமார், முதன்மை பொறியாளர் சீனிவாச ராவ் சில்லி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி துணைத் தலைவர் லட்சுமி பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இந்த போட்டிகள் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. போட்டிகள் நடைபெற்ற நாட்களில் விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர். இப்போட்டிகள் மாவட்ட அளவில் கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

9 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
9 hrs ago

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பெருமையுடன் நடத்தப்பட்ட சத்யா கோப்பைக்கான 27-வது அகில இந்திய கைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உற்சாகமாக நடைபெற்றன. இந்த போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் சென்னை அணிகளே சத்யா கோப்பையை தட்டிச் சென்றன. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணியும், கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சத்யா கோப்பையை கைப்பற்றியது. முதல் இடம் பெற்ற எஸ்.டி.ஏ.டி. சென்னை அணிக்கு 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை வருமானவரித்துறை அணியும், கே.எஸ்.இ.பி. கேரளா அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் வருமானவரித்துறை சென்னை அணி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் சத்யா கோப்பையையும் வென்றது. ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வருமானவரித்துறை சென்னை அணிக்கு 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கே.எஸ்.இ.பி. கேரளா அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் ஜான் வசீகரன் வரவேற்புரை ஆற்றினார். சத்யா மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ஜான் ரோஷன், வி.ஓ.சி. துறைமுக ஆணையத்தின் செயலர் எஸ்.பி. மோகன் குமார், முதன்மை பொறியாளர் சீனிவாச ராவ் சில்லி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி துணைத் தலைவர் லட்சுமி பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இந்த போட்டிகள் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. போட்டிகள் நடைபெற்ற நாட்களில் விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர். இப்போட்டிகள் மாவட்ட அளவில் கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகப் பகுதியிலிருந்து சிறு வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை கோயில் வளாகத்திற்குள் உள்ள கடைகள் மீது எடுக்கப்பட்டுள்ளது.
    1
    திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகப் பகுதியிலிருந்து சிறு வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை கோயில் வளாகத்திற்குள் உள்ள கடைகள் மீது எடுக்கப்பட்டுள்ளது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக பிள்ளை தோப்பு கடற்கரை கிராமத்தில் உள்ள கால்வாய் தூர் வாரப்படாததால், அந்தக் கால்வாயின் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கால்வாய் தூர்வாரப்படாததால் தொடர்ந்து தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட கிராம மக்கள், இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தினர். கால்வாயை உடனடியாகத் தூர்வாரி, ஊருக்குள் தண்ணீர் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
    1
    குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக பிள்ளை தோப்பு கடற்கரை கிராமத்தில் உள்ள கால்வாய் தூர் வாரப்படாததால், அந்தக் கால்வாயின் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கால்வாய் தூர்வாரப்படாததால் தொடர்ந்து தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட கிராம மக்கள், இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தினர். கால்வாயை உடனடியாகத் தூர்வாரி, ஊருக்குள் தண்ணீர் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அம்மா உணவகத்தில், கடந்த 15 நாட்களாக கை கழுவும் இடம் செயல்படாததால், அங்கு உணவருந்திச் செல்லும் மக்கள் நடைபாதையில் கை கழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த கழிவுநீர் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் தேங்கி, அப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இந்த உணவகத்திற்கு சாப்பிட வந்த ஒரு பெண், கெட்டுப்போன சாம்பாரை ஊற்றி அதை வெண் பொங்கல் என்று கூறி பரிமாறுவதாகக் குறை கூறினார். இது உணவின் தரம் குறித்த கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வரும் இந்த அம்மா உணவகத்தை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து வலுவான கோரிக்கை எழுந்துள்ளது, ஏனெனில் மக்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அம்மா உணவகத்தில், கடந்த 15 நாட்களாக கை கழுவும் இடம் செயல்படாததால், அங்கு உணவருந்திச் செல்லும் மக்கள் நடைபாதையில் கை கழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த கழிவுநீர் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் தேங்கி, அப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், இந்த உணவகத்திற்கு சாப்பிட வந்த ஒரு பெண், கெட்டுப்போன சாம்பாரை ஊற்றி அதை வெண் பொங்கல் என்று கூறி பரிமாறுவதாகக் குறை கூறினார். இது உணவின் தரம் குறித்த கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வரும் இந்த அம்மா உணவகத்தை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து வலுவான கோரிக்கை எழுந்துள்ளது, ஏனெனில் மக்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    15 hrs ago
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியின் 18 வார்டுகளில் இருந்து தினசரி குவியும் குப்பைகள் ஆண்டிபட்டி சுடுகாடு அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது இந்தக் குப்பை கிடங்கில் சுமார் 15 அடி உயரத்திற்குக் குப்பைகள் குவிந்து மலைபோல் காட்சியளிக்கின்றன. ஆரம்பத்தில் குப்பை கிடங்குகள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் குடியிருப்புகள் எதுவும் இல்லாத நிலையில், தற்போது அந்தப் பகுதி முழுவதும் குடியிருப்புப் பகுதியாக மாறி உள்ளது. அரசு அறிவித்தபடி குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் அனைத்து வகைக் குப்பைகளையும் ஒரே இடத்தில் குவித்து தீவைப்பதால், அப்பகுதியில் எந்த நேரமும் புகைமூட்டமாகவும் துர்நாற்றமாகவும் உள்ளது. இதனால் இந்தக் குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதே பகுதியில் தொடர்ந்து குப்பைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக குப்பைகள் குவிந்துள்ளதால் நிலத்தடி நீரும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. குடிப்பதற்கும் சுத்திகரிப்பு செய்வதற்கும் வழி இல்லாததால் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி குப்பை கிடங்கால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் உடனடியாகக் குவிந்திருக்கும் குப்பைகளை வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லவும், ஆண்டிப்பட்டி நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு புதிய குப்பை கிடங்கை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    3
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியின் 18 வார்டுகளில் இருந்து தினசரி குவியும் குப்பைகள் ஆண்டிபட்டி சுடுகாடு அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது இந்தக் குப்பை கிடங்கில் சுமார் 15 அடி உயரத்திற்குக் குப்பைகள் குவிந்து மலைபோல் காட்சியளிக்கின்றன.

ஆரம்பத்தில் குப்பை கிடங்குகள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் குடியிருப்புகள் எதுவும் இல்லாத நிலையில், தற்போது அந்தப் பகுதி முழுவதும் குடியிருப்புப் பகுதியாக மாறி உள்ளது. அரசு அறிவித்தபடி குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் அனைத்து வகைக் குப்பைகளையும் ஒரே இடத்தில் குவித்து தீவைப்பதால், அப்பகுதியில் எந்த நேரமும் புகைமூட்டமாகவும் துர்நாற்றமாகவும் உள்ளது. இதனால் இந்தக் குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதே பகுதியில் தொடர்ந்து குப்பைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

பல ஆண்டுகளாக குப்பைகள் குவிந்துள்ளதால் நிலத்தடி நீரும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. குடிப்பதற்கும் சுத்திகரிப்பு செய்வதற்கும் வழி இல்லாததால் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி குப்பை கிடங்கால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் உடனடியாகக் குவிந்திருக்கும் குப்பைகளை வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லவும், ஆண்டிப்பட்டி நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு புதிய குப்பை கிடங்கை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் முன்னாள் படை வீரர் பழனி வேல் சக்கரம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது.
    1
    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் முன்னாள் படை வீரர் பழனி வேல் சக்கரம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது.
    user_Namma Ooru Adanai
    Namma Ooru Adanai
    Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    21 hrs ago
  • தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரப் பகுதியில், இரவு நேரத்தில் கடைக்குச் சென்ற மதுரா என்ற பெண்மணியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் செயின் பறிக்க முயன்றனர். மதுரா சத்தமிட்டதால் மர்ம நபர்கள் தப்பியோடினர். இந்தச் சம்பவத்தில் கழுத்தில் காயமடைந்த மதுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜா என்பவரது மனைவி மதுரா, வீட்டின் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது திடீரென அவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினைப் பறிக்க முயன்றதால் அதிர்ச்சியடைந்த மதுரா, உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு தனது செயினைப் பலமாகப் பிடித்துக்கொண்டு சத்தமிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்ததைக் கண்ட மர்ம நபர்கள், தங்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. காவல்துறையினர் மாலை மற்றும் இரவு நேரங்களில் போதிய ரோந்துப் பணியில் ஈடுபடாததே இதற்குக் முக்கியக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க இனிமேலாவது ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
    1
    தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரப் பகுதியில், இரவு நேரத்தில் கடைக்குச் சென்ற மதுரா என்ற பெண்மணியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் செயின் பறிக்க முயன்றனர். மதுரா சத்தமிட்டதால் மர்ம நபர்கள் தப்பியோடினர். இந்தச் சம்பவத்தில் கழுத்தில் காயமடைந்த மதுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜா என்பவரது மனைவி மதுரா, வீட்டின் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது திடீரென அவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினைப் பறிக்க முயன்றதால் அதிர்ச்சியடைந்த மதுரா, உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு தனது செயினைப் பலமாகப் பிடித்துக்கொண்டு சத்தமிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்ததைக் கண்ட மர்ம நபர்கள், தங்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. காவல்துறையினர் மாலை மற்றும் இரவு நேரங்களில் போதிய ரோந்துப் பணியில் ஈடுபடாததே இதற்குக் முக்கியக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க இனிமேலாவது ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேர்தலுக்குப் பிறகு அதிருப்தி அணியாக உருவெடுத்துள்ள 20 திரிணாமுல் காங்கிரஸ் (TMC) எம்பிக்கள், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒரு கடிதம் அளித்துள்ளனர். இந்தக் கடிதத்தில், பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்குத் தாங்கள் ஆதரவளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். மேலும், தங்களுக்கு 3-ல் 2 பங்கு எம்பிக்களின் பலம் உள்ளதாகக் குறிப்பிட்ட அந்த எம்பிக்கள், லோக்சபாவில் தங்களுக்குத் தனி இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், திரிபுராவைச் சேர்ந்த NCPI கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    1
    தேர்தலுக்குப் பிறகு அதிருப்தி அணியாக உருவெடுத்துள்ள 20 திரிணாமுல் காங்கிரஸ் (TMC) எம்பிக்கள், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒரு கடிதம் அளித்துள்ளனர். இந்தக் கடிதத்தில், பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்குத் தாங்கள் ஆதரவளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். மேலும், தங்களுக்கு 3-ல் 2 பங்கு எம்பிக்களின் பலம் உள்ளதாகக் குறிப்பிட்ட அந்த எம்பிக்கள், லோக்சபாவில் தங்களுக்குத் தனி இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், திரிபுராவைச் சேர்ந்த NCPI கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார், குமரி மாவட்டத்தில் பொதுமக்களை யானைகள் தாக்கும் சம்பவங்களைத் தடுக்க அரசு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என உறுதியளித்தார். மேலும், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்கனவே மின்வேலிகள் அமைக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யானைகள் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
    1
    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார், குமரி மாவட்டத்தில் பொதுமக்களை யானைகள் தாக்கும் சம்பவங்களைத் தடுக்க அரசு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என உறுதியளித்தார். மேலும், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்கனவே மின்வேலிகள் அமைக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யானைகள் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தைச் சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து வேதனை தெரிவித்த வியாபாரிகள், பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தொழில் செய்து வருவதாகவும், 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த சிறு வியாபாரத்தை நம்பியே வாழ்ந்து வருவதாகவும் கூறினர். தற்போது கடைகள் அகற்றப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவித்தனர். மேலும், தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு மற்றும் கோயில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தைச் சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து வேதனை தெரிவித்த வியாபாரிகள், பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தொழில் செய்து வருவதாகவும், 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த சிறு வியாபாரத்தை நம்பியே வாழ்ந்து வருவதாகவும் கூறினர். தற்போது கடைகள் அகற்றப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு மற்றும் கோயில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.