தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியின் 18 வார்டுகளில் இருந்து தினசரி குவியும் குப்பைகள் ஆண்டிபட்டி சுடுகாடு அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது இந்தக் குப்பை கிடங்கில் சுமார் 15 அடி உயரத்திற்குக் குப்பைகள் குவிந்து மலைபோல் காட்சியளிக்கின்றன. ஆரம்பத்தில் குப்பை கிடங்குகள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் குடியிருப்புகள் எதுவும் இல்லாத நிலையில், தற்போது அந்தப் பகுதி முழுவதும் குடியிருப்புப் பகுதியாக மாறி உள்ளது. அரசு அறிவித்தபடி குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் அனைத்து வகைக் குப்பைகளையும் ஒரே இடத்தில் குவித்து தீவைப்பதால், அப்பகுதியில் எந்த நேரமும் புகைமூட்டமாகவும் துர்நாற்றமாகவும் உள்ளது. இதனால் இந்தக் குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதே பகுதியில் தொடர்ந்து குப்பைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக குப்பைகள் குவிந்துள்ளதால் நிலத்தடி நீரும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. குடிப்பதற்கும் சுத்திகரிப்பு செய்வதற்கும் வழி இல்லாததால் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி குப்பை கிடங்கால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் உடனடியாகக் குவிந்திருக்கும் குப்பைகளை வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லவும், ஆண்டிப்பட்டி நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு புதிய குப்பை கிடங்கை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியின் 18 வார்டுகளில் இருந்து தினசரி குவியும் குப்பைகள் ஆண்டிபட்டி சுடுகாடு அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது இந்தக் குப்பை கிடங்கில் சுமார் 15 அடி உயரத்திற்குக் குப்பைகள் குவிந்து மலைபோல் காட்சியளிக்கின்றன. ஆரம்பத்தில் குப்பை கிடங்குகள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் குடியிருப்புகள் எதுவும் இல்லாத நிலையில், தற்போது அந்தப் பகுதி முழுவதும் குடியிருப்புப் பகுதியாக மாறி உள்ளது. அரசு அறிவித்தபடி
குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் அனைத்து வகைக் குப்பைகளையும் ஒரே இடத்தில் குவித்து தீவைப்பதால், அப்பகுதியில் எந்த நேரமும் புகைமூட்டமாகவும் துர்நாற்றமாகவும் உள்ளது. இதனால் இந்தக் குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதே பகுதியில் தொடர்ந்து குப்பைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக குப்பைகள் குவிந்துள்ளதால் நிலத்தடி நீரும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள குடியிருப்புப்
பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. குடிப்பதற்கும் சுத்திகரிப்பு செய்வதற்கும் வழி இல்லாததால் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி குப்பை கிடங்கால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் உடனடியாகக் குவிந்திருக்கும் குப்பைகளை வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லவும், ஆண்டிப்பட்டி நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு புதிய குப்பை கிடங்கை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியின் 18 வார்டுகளில் இருந்து தினசரி குவியும் குப்பைகள் ஆண்டிபட்டி சுடுகாடு அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது இந்தக் குப்பை கிடங்கில் சுமார் 15 அடி உயரத்திற்குக் குப்பைகள் குவிந்து மலைபோல் காட்சியளிக்கின்றன. ஆரம்பத்தில் குப்பை கிடங்குகள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் குடியிருப்புகள் எதுவும் இல்லாத நிலையில், தற்போது அந்தப் பகுதி முழுவதும் குடியிருப்புப் பகுதியாக மாறி உள்ளது. அரசு அறிவித்தபடி குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் அனைத்து வகைக் குப்பைகளையும் ஒரே இடத்தில் குவித்து தீவைப்பதால், அப்பகுதியில் எந்த நேரமும் புகைமூட்டமாகவும் துர்நாற்றமாகவும் உள்ளது. இதனால் இந்தக் குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதே பகுதியில் தொடர்ந்து குப்பைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக குப்பைகள் குவிந்துள்ளதால் நிலத்தடி நீரும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. குடிப்பதற்கும் சுத்திகரிப்பு செய்வதற்கும் வழி இல்லாததால் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி குப்பை கிடங்கால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் உடனடியாகக் குவிந்திருக்கும் குப்பைகளை வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லவும், ஆண்டிப்பட்டி நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு புதிய குப்பை கிடங்கை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.3
- தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள விவசாய சங்க மண்டபத்தில், தென் மண்டல வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பாக இன்று முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. 2025–2026ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் படித்து, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு இவ்விழாவில் பாராட்டுக்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. பெரியகுளம் வட்டாட்சியர் மருதுபாண்டி மற்றும் தேனி மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் சிதம்பர சூரிய வேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கி கௌரவித்தனர். குறிப்பாக, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற கீர்த்தி, தாரணி ஸ்ரீ, பிரியதர்ஷினி ஆகிய மாணவிகளும், 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சாம்பவி, ஹர்ஷிணி கோபிகா, வைஷ்ணவி ஆகிய மாணவிகளும் மாணவர் விஜய்யும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். மேலும், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் விதமாகவும், உயர்கல்வி வழிகாட்டியாகவும் விளங்கும் “என்ன படிக்கலாம்?” என்ற சிறப்புப் புத்தகம் இவ்விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கருப்பையா, அறங்காவலர் முத்தையா, இணை நிர்வாக அறங்காவலர் குமரன், நிர்வாக பொருளாளர் பாலமுருகன், அறங்காவலர் பிச்சையம்மாள் ஆறுமுகம் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.1
- 👬👩❤️💋👨 ஆவதும் பெண்ணாலே🌹அழிவதும் பெண்ணாலே 👍💞👩❤️💋👨1
- ராஜராஜ சோழனின் பொற்காலம் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு காணொலிப் பதிவு பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை தவறாமல் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.1
- மதுரையில் போக்குவரத்து போலீசார் இன்று (ஜூன் 15) காலை தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையம், ஜான்சி ராணி பூங்கா உள்ளிட்ட பத்து இடங்களில் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நம்பர் பிளேட்டுகள் விதிமுறைக்கு உட்பட்டு அமைக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு முகாமை நடத்தினர். இந்த முகாமில், முறையாக நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை நிறுத்தி, அதன் நோக்கம் குறித்து ஓட்டுநர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் இரண்டு நாட்களுக்குள் நம்பர் பிளேட்டை சரிசெய்து, அதன் புகைப்படத்தை போக்குவரத்து போலீசார் வழங்கிய வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு செய்யாத வாகனங்கள் மீது உரிய அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இன்றும் நாளையும் என இரு தினங்களுக்கு இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெறும் என்றும், அதன் பிறகு விதிமுறையை மீறி சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்கள் மீதும் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.1
- சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜர் நகரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரன் மீது புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோவிலின் வைகாசி பொங்கல் விழாவின் போது, காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் இந்நிகழ்ச்சி தொடர்ந்ததால் ஏற்பட்ட தொந்தரவை அடுத்து, கிராமப் பெண்கள் புதிய தமிழகம் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணனிடம் நிகழ்ச்சி நிறுத்தக் கோரி முறையிட்டுள்ளனர். ஆனால், மாரிக்கண்ணன் அதனை ஏற்க மறுத்ததுடன், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காவல்துறையின் அவசர உதவி எண் 100க்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை விழா நடைபெறும் இடத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 'நீங்கள் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது' என்று கூறியதுடன், 'ஏ போலே போ.. மயி*' என ஒருமையில் பேசி தள்ளிவிட்டு தாக்கியதால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இந்தச் சம்பவத்தையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட 8 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முனீஸ்வரன் மற்றும் அழகுமுத்து ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிக விளம்பர பதாகைகள் (பிளக்ஸ் போர்டுகள்) வைப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் நலச்சங்கம் மற்றும் அமைப்பாளர்கள் நலச்சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட சங்கத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மனுவை சமர்ப்பித்தனர். பிளக்ஸ் தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளதைக் கண்டித்து அப்பகுதிப் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்காரனின் சொந்த ஊர் இந்த கீழவடகரை ஊராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அழகர்சாமிபுரம், கல்லார் ரோடு, இந்திரா காலனி, காளியம்மன் கோவில் தெரு மற்றும் ஒத்தமரம் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகம் தடைப்பட்டதோடு, அப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் நீண்ட நாட்களாகத் தூர்வாரப்படாமலும், குப்பைகள் அகற்றப்படாமலும் உள்ளதால் கடும் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்கள், இன்று காலிக்குடங்களுடன் அழகர்சாமிபுரம் சாலையில் திரண்டு, தரையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் போராட்டம் நீடித்ததுடன் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினரோ அல்லது ஊராட்சி அதிகாரிகளோ நேரில் வந்து உறுதியளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் பெண்கள் உறுதியாகத் தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்குப் பின்பாக போராட்டம் கைவிடப்பட்டது.1