logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக பிள்ளை தோப்பு கடற்கரை கிராமத்தில் உள்ள கால்வாய் தூர் வாரப்படாததால், அந்தக் கால்வாயின் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கால்வாய் தூர்வாரப்படாததால் தொடர்ந்து தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட கிராம மக்கள், இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தினர். கால்வாயை உடனடியாகத் தூர்வாரி, ஊருக்குள் தண்ணீர் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.

6 hrs ago
user_Magson jones
Magson jones
அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
6 hrs ago

குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக பிள்ளை தோப்பு கடற்கரை கிராமத்தில் உள்ள கால்வாய் தூர் வாரப்படாததால், அந்தக் கால்வாயின் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கால்வாய் தூர்வாரப்படாததால் தொடர்ந்து தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட கிராம மக்கள், இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தினர். கால்வாயை உடனடியாகத் தூர்வாரி, ஊருக்குள் தண்ணீர் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், இன்று காலை பணிக்கு வந்த தினக்கூலி ஊழியர் ஒருவரை நாய் கடித்தது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அந்த ஊழியர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்களைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    1
    நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், இன்று காலை பணிக்கு வந்த தினக்கூலி ஊழியர் ஒருவரை நாய் கடித்தது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அந்த ஊழியர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்களைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பெருமையுடன் நடத்தப்பட்ட சத்யா கோப்பைக்கான 27-வது அகில இந்திய கைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உற்சாகமாக நடைபெற்றன. இந்த போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் சென்னை அணிகளே சத்யா கோப்பையை தட்டிச் சென்றன. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணியும், கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சத்யா கோப்பையை கைப்பற்றியது. முதல் இடம் பெற்ற எஸ்.டி.ஏ.டி. சென்னை அணிக்கு 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை வருமானவரித்துறை அணியும், கே.எஸ்.இ.பி. கேரளா அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் வருமானவரித்துறை சென்னை அணி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் சத்யா கோப்பையையும் வென்றது. ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வருமானவரித்துறை சென்னை அணிக்கு 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கே.எஸ்.இ.பி. கேரளா அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் ஜான் வசீகரன் வரவேற்புரை ஆற்றினார். சத்யா மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ஜான் ரோஷன், வி.ஓ.சி. துறைமுக ஆணையத்தின் செயலர் எஸ்.பி. மோகன் குமார், முதன்மை பொறியாளர் சீனிவாச ராவ் சில்லி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி துணைத் தலைவர் லட்சுமி பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இந்த போட்டிகள் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. போட்டிகள் நடைபெற்ற நாட்களில் விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர். இப்போட்டிகள் மாவட்ட அளவில் கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
    1
    தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பெருமையுடன் நடத்தப்பட்ட சத்யா கோப்பைக்கான 27-வது அகில இந்திய கைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உற்சாகமாக நடைபெற்றன. இந்த போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் சென்னை அணிகளே சத்யா கோப்பையை தட்டிச் சென்றன.

பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணியும், கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சத்யா கோப்பையை கைப்பற்றியது. முதல் இடம் பெற்ற எஸ்.டி.ஏ.டி. சென்னை அணிக்கு 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை வருமானவரித்துறை அணியும், கே.எஸ்.இ.பி. கேரளா அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் வருமானவரித்துறை சென்னை அணி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் சத்யா கோப்பையையும் வென்றது. ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வருமானவரித்துறை சென்னை அணிக்கு 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கே.எஸ்.இ.பி. கேரளா அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் ஜான் வசீகரன் வரவேற்புரை ஆற்றினார். சத்யா மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ஜான் ரோஷன், வி.ஓ.சி. துறைமுக ஆணையத்தின் செயலர் எஸ்.பி. மோகன் குமார், முதன்மை பொறியாளர் சீனிவாச ராவ் சில்லி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி துணைத் தலைவர் லட்சுமி பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

இந்த போட்டிகள் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. போட்டிகள் நடைபெற்ற நாட்களில் விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர். இப்போட்டிகள் மாவட்ட அளவில் கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • மீன்களின் இனப்பெருக்கத்திற்காக அரசு விதித்திருந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து, தூத்துக்குடியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதால், மீனவர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது. இந்தத் தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 5 மணிக்குத் தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். 61 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்வதால், இந்த முறை அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற பலத்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் அவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
    1
    மீன்களின் இனப்பெருக்கத்திற்காக அரசு விதித்திருந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து, தூத்துக்குடியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதால், மீனவர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது.

இந்தத் தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 5 மணிக்குத் தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். 61 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்வதால், இந்த முறை அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற பலத்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் அவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு கப்பல் மாலுமி ஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரை திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சூழலில், அப்பகுதி மக்கள் மற்றும் உயிரிழந்த மாலுமியின் உறவினர்கள், அவரது உடலைத் திரும்பக் கொண்டுவர அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
    1
    தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு கப்பல் மாலுமி ஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரை திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த சூழலில், அப்பகுதி மக்கள் மற்றும் உயிரிழந்த மாலுமியின் உறவினர்கள், அவரது உடலைத் திரும்பக் கொண்டுவர அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜர் நகரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரன் மீது புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோவிலின் வைகாசி பொங்கல் விழாவின் போது, காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் இந்நிகழ்ச்சி தொடர்ந்ததால் ஏற்பட்ட தொந்தரவை அடுத்து, கிராமப் பெண்கள் புதிய தமிழகம் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணனிடம் நிகழ்ச்சி நிறுத்தக் கோரி முறையிட்டுள்ளனர். ஆனால், மாரிக்கண்ணன் அதனை ஏற்க மறுத்ததுடன், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காவல்துறையின் அவசர உதவி எண் 100க்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை விழா நடைபெறும் இடத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 'நீங்கள் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது' என்று கூறியதுடன், 'ஏ போலே போ.. மயி*' என ஒருமையில் பேசி தள்ளிவிட்டு தாக்கியதால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இந்தச் சம்பவத்தையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட 8 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முனீஸ்வரன் மற்றும் அழகுமுத்து ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    1
    சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜர் நகரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரன் மீது புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோவிலின் வைகாசி பொங்கல் விழாவின் போது, காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் இந்நிகழ்ச்சி தொடர்ந்ததால் ஏற்பட்ட தொந்தரவை அடுத்து, கிராமப் பெண்கள் புதிய தமிழகம் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணனிடம் நிகழ்ச்சி நிறுத்தக் கோரி முறையிட்டுள்ளனர். ஆனால், மாரிக்கண்ணன் அதனை ஏற்க மறுத்ததுடன், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காவல்துறையின் அவசர உதவி எண் 100க்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை விழா நடைபெறும் இடத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 'நீங்கள் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது' என்று கூறியதுடன், 'ஏ போலே போ.. மயி*' என ஒருமையில் பேசி தள்ளிவிட்டு தாக்கியதால் அங்கு பதட்டமான சூழல் உருவானது.

இந்தச் சம்பவத்தையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட 8 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முனீஸ்வரன் மற்றும் அழகுமுத்து ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    user_K. Arun pandian
    K. Arun pandian
    Photographer Sattur, Virudhunagar•
    13 hrs ago
  • 👬👩‍❤️‍💋‍👨 ஆவதும் பெண்ணாலே🌹அழிவதும் பெண்ணாலே 👍💞👩‍❤️‍💋‍👨
    1
    👬👩‍❤️‍💋‍👨 ஆவதும் பெண்ணாலே🌹அழிவதும் பெண்ணாலே 👍💞👩‍❤️‍💋‍👨
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • மதுரையில் போக்குவரத்து போலீசார் இன்று (ஜூன் 15) காலை தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையம், ஜான்சி ராணி பூங்கா உள்ளிட்ட பத்து இடங்களில் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நம்பர் பிளேட்டுகள் விதிமுறைக்கு உட்பட்டு அமைக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு முகாமை நடத்தினர். இந்த முகாமில், முறையாக நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை நிறுத்தி, அதன் நோக்கம் குறித்து ஓட்டுநர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் இரண்டு நாட்களுக்குள் நம்பர் பிளேட்டை சரிசெய்து, அதன் புகைப்படத்தை போக்குவரத்து போலீசார் வழங்கிய வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு செய்யாத வாகனங்கள் மீது உரிய அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இன்றும் நாளையும் என இரு தினங்களுக்கு இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெறும் என்றும், அதன் பிறகு விதிமுறையை மீறி சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்கள் மீதும் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
    1
    மதுரையில் போக்குவரத்து போலீசார் இன்று (ஜூன் 15) காலை தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையம், ஜான்சி ராணி பூங்கா உள்ளிட்ட பத்து இடங்களில் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நம்பர் பிளேட்டுகள் விதிமுறைக்கு உட்பட்டு அமைக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு முகாமை நடத்தினர். இந்த முகாமில், முறையாக நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை நிறுத்தி, அதன் நோக்கம் குறித்து ஓட்டுநர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

வாகன ஓட்டிகள் இரண்டு நாட்களுக்குள் நம்பர் பிளேட்டை சரிசெய்து, அதன் புகைப்படத்தை போக்குவரத்து போலீசார் வழங்கிய வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு செய்யாத வாகனங்கள் மீது உரிய அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இன்றும் நாளையும் என இரு தினங்களுக்கு இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெறும் என்றும், அதன் பிறகு விதிமுறையை மீறி சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்கள் மீதும் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    14 hrs ago
  • குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக பிள்ளை தோப்பு கடற்கரை கிராமத்தில் உள்ள கால்வாய் தூர் வாரப்படாததால், அந்தக் கால்வாயின் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கால்வாய் தூர்வாரப்படாததால் தொடர்ந்து தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட கிராம மக்கள், இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தினர். கால்வாயை உடனடியாகத் தூர்வாரி, ஊருக்குள் தண்ணீர் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
    1
    குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக பிள்ளை தோப்பு கடற்கரை கிராமத்தில் உள்ள கால்வாய் தூர் வாரப்படாததால், அந்தக் கால்வாயின் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கால்வாய் தூர்வாரப்படாததால் தொடர்ந்து தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட கிராம மக்கள், இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தினர். கால்வாயை உடனடியாகத் தூர்வாரி, ஊருக்குள் தண்ணீர் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.