Shuru
Apke Nagar Ki App…
சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
SKYN MEDIA LIVE...
சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
More news from Tirupathur and nearby areas
- நாட்றம்பள்ளி அடுத்த தமிழக - ஆந்திர எல்லையான கொத்தூர் பகுதியில் இன்று (18) கனிம வளத்துறையினர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றி வந்த ஒரு லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினர். லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிய நிலையில், அதிகாரிகள் அந்த லாரியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரியை நாட்றம்பள்ளி போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், தப்பியோடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரச மர பிள்ளையார் கோயிலில் இன்று ஜூன் 18 காலை ஆனி மாதம் 4 ஆம் தேதி சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்தப் பூஜையில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்குப் பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.1
- கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் உத்திராம்பாள் தலைமையில் போலீசார், சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெண்கள் தங்களின் பாதுகாப்பில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.1
- Post by Eresha Nayaka1
- சென்னை காசிமேடு பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 20 நாட்களாகியும் கரைக்குத் திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கவலையில் உள்ளனர். காணாமல் போன மீனவர்கள் குறித்த எந்த தகவலும் இதுவரையில் இல்லை.1
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம், ஆலாங்குப்பம், காட்டுக்கொல்லை, அய்யனூர், கன்னடிகுப்பம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.1
- உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். பேராலயத்திற்குச் செல்லும் முக்கிய சாலையான ஆர்ச் பகுதி கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. மூன்று வழி சந்திப்பான இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், ஆர்ச் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, கணக்கில் வராத ₹1 லட்சத்திற்கும் அதிகமான பணம் பிடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.1