Shuru
Apke Nagar Ki App…
*காரைக்குடி சத்ய சாய் சமிதியில் சாதுக்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானத்துடன் குரு தக்ஷனா குருபூர்ணிமா நாளில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் இரண்டாவது வீதியில் அமைந்து அருள் பாலிக்கும் சத்ய சாய் சமிதியில் நடைபெற்ற குரு பூர்ணிமா விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 1000-கும் மேற்பட்ட காவியுடை தரித்து, ருத்ராட்சம் அணிந்த சாதுக்களுக்கு அன்னதானம், மற்றும் வஸ்திர தானம் வழங்கப்பட்ட காட்சி. முன்னதாக சமிதியில் முதல் நாளில் பஜனை,திருவிளக்கு பூஜை, சாய்பாபா வழிபாடு மங்கள ஆரத்தி உள்ளிட்ட வழிபாட்டு நிகழ்ச்சிகளும் நடந்தன. நிறைவு நாளில் சத்யசாய் சமிதியில் இருந்து சாய் பக்தர்கள் நகர்வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
Devakottaigani news
*காரைக்குடி சத்ய சாய் சமிதியில் சாதுக்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானத்துடன் குரு தக்ஷனா குருபூர்ணிமா நாளில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் இரண்டாவது வீதியில் அமைந்து அருள் பாலிக்கும் சத்ய சாய் சமிதியில் நடைபெற்ற குரு பூர்ணிமா விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 1000-கும் மேற்பட்ட காவியுடை தரித்து, ருத்ராட்சம் அணிந்த சாதுக்களுக்கு அன்னதானம், மற்றும் வஸ்திர தானம் வழங்கப்பட்ட காட்சி. முன்னதாக சமிதியில் முதல் நாளில் பஜனை,திருவிளக்கு பூஜை, சாய்பாபா வழிபாடு மங்கள ஆரத்தி உள்ளிட்ட வழிபாட்டு நிகழ்ச்சிகளும் நடந்தன. நிறைவு நாளில் சத்யசாய் சமிதியில் இருந்து சாய் பக்தர்கள் நகர்வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!” சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார். மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார். உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.1
- ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை சிங்கம்புணரி ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, மஞ்சள் விநாயகர் செய்து பூஜை செய்தனர். பங்கேற்றோருக்கு தாலி கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்1
- கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் சுவாமி வெள்ளி நகை திருட்டு மேல்பனையூர் கிராமத்தில் அருள்மிகு புலிக்குட்டி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் சுவாமியின் கழுத்தில் இருந்த 24 கிராம் வெள்ளிச் சங்கிலியைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும் பூசாரி அறையில் இருந்த பீரோ உடைத்து திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாடானை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் Kபுதுக்குடி கிராமத்தில் திருவிழாவை முன்னிட்டு கும்மி திருவிழா நடைபெற்றது1
- திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு,பிடாரி அம்மனுக்கு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.இதில் திருமயம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிடாரியம்மனை வழிபாடு செய்தனர்.தொடர்ந்து கோவில் வளாகத்தின் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது1
- மானாமதுரை அருகே இரவில் தொடரும் ஆற்று மணல் திருட்டு – நடவடிக்கை எடுக்குமா கனிமவளத்துறை? சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயே வைகை ஆற்றில் இரவு நேரங்களில் நடைபெற்று வரும் ஆற்று மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நீர்வழித்தடமாக விளங்கும் வைகை ஆறு, மானாமதுரை வழியாக செல்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்று மணல் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கப்படாத நிலையில், வைகை ஆற்றுப் படுகையில் அவ்வப்போது மணல் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் கனிமவளத்துறை, கனிம வள கொள்ளைகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மானாமதுரை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள முத்தனேந்தல் அருகாமையிலான வைகை ஆற்றின் இணைப்புக் கால்வாய் பகுதியில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பை மீறி மணல் திருட்டு நடைபெற்று வருவதால், இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதுடன் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு நேரடியாக தலையிட்டு, மணல் திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வைகை ஆற்றுப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.1
- *மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* *தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு* *மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* *தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விசிகவினர் அப்பகுதியில் கொடி மரம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விசிக கொடி கம்பம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடி கம்பம் நடப்பட்டதாகவும், இதற்கு விசிக மற்றும் பொது மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இரு கொடி மரங்களையும் அகற்றுவது என வருவாய்த்துறையினர் முடிவு செய்து இன்று நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கொடி மரம் அகற்ற வந்த நிலையில் கொடி மரத்தை அகற்ற அப்பகுதி விசிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விசிகவினர் போலீசாரிடமிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விசிக நிர்வாகியை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி செல்ல முயன்ற போது அவரின் சட்டை கிழிந்ததாக கூறப்படுகிறது, இதில் போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயக்கமடைந்தார், பின்னர் கொடிமரம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்த விசிகவினர் பொது மக்கள் என 94 பேரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து ஆண்டிபட்டி பங்களா பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்துள்ளனர். தவெக கூட்டணி கட்சியான விசிக கொடி கம்பம் அகற்றுவது தொடர்பாக விசிக போலீசாரிடமிடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1