logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

cell. me. 9787529892

1 hr ago
user_பூபாலன்.9787529892
பூபாலன்.9787529892
Artist Ramanathapuram, Tamil Nadu•
1 hr ago

cell. me. 9787529892

More news from Tamil Nadu and nearby areas
  • Post by பூபாலன்.9787529892
    1
    Post by பூபாலன்.9787529892
    user_பூபாலன்.9787529892
    பூபாலன்.9787529892
    Artist Ramanathapuram, Tamil Nadu•
    1 hr ago
  • தூத்துக்குடி மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் ஏராளமான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மேயர் மற்றும் ஆணையாளர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள் இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சியின் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், துணை ஆணையர்கள் மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடி மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் ஏராளமான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மேயர் மற்றும் ஆணையாளர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள் இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சியின் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், துணை ஆணையர்கள் மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    13 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை. 82 வயதான இவர் தொடர்ந்து 12வது ஆண்டாக தனது அன்பு மகளுக்கு பொங்கல் சீரை சுமார் 17 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே கொண்டு செல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியமும் கலாச்சாரமுமாக உள்ள பொங்கல் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பவர்கள் வீட்டிற்கு பெண் வீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் சீர் வழங்குவது தமிழர்களின் பழக்கமாக உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை -அமிர்தவள்ளி தம்பதியருக்கு சுந்தராம்பாள் என்ற மகளும் முருகேசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சுந்தராம்பாளை சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்ட்டியில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவருக்கு 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரம்பாளுக்கு இரட்டை குழந்தை பிறந்தள்ளது. அதற்கு முன்பு வரை ஆயிரம் ரூபாய் பொங்கல் சீராக வழங்கி வந்த செல்லத்துரை மகளுக்கு குழந்தை பிறந்த தினம் முதல் இன்றைய தினம் வரை தொடர்ச்சியாக 12 ஆண்டு காலமாக பாரம்பரியமும் கலாச்சாரமும் மாறாமல் இருக்கவும் மகள் மீது கொண்ட பாசத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது தலையில் கரும்பு கட்டும், சைக்கில் கேரியரில் சீர் பொருட்க்களையும் எடுத்துக்கொண்டு சைக்கிளில் சுமார் 17 கிமீ பயணம் செய்து பொங்கல் சீர் வழங்கி வருகிறார். குறிப்பாக இவர் 82 வயதிலையும் அவரது சைக்கிளில் விவேகானந்தர் காலண்டர் தேங்காய் பழம் மஞ்சள் கொத்து வேட்டி துண்டு பொங்கல் பூ பச்சரிசி வெள்ளம் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் சீரை வைத்துக்கொண்டு ஐந்து கரும்புகளை தலையில் சுமந்து கொண்டு கரும்பை கையில் வைத்து பிடிக்காமல் அவரது சைக்கிளை ஓட்டி சென்று வருகிறார். வடக்கு கொத்தக்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் 16 வேகத் தடைகளை கடந்து நம்பம்பட்டி வரை சைக்கிளிலேயே அவர் பொங்கல் சீர் கொண்டு செல்வதை சாலை நெடுகிலும் உள்ள மக்கள் கண்டு வியந்து வருவதோடு முதியவருக்கு கைகளை காட்டி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். காலங்கள் கடந்தும் தமிழனின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு சான்றளிக்கும் விதத்திலும் தமிழர்கள் என்றாலே பாசத்துக்கு பெயர் பெற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலும் தனது மகளுக்கு பாரம்பரியமாக சைக்கிளையே சென்று பொங்கல் சீர் வழங்கி வரும் தந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் கொத்தக்கோட்டை வர்த்தகர்கள் சார்பில் மகளுக்கு சீர் எடுத்துச் செல்லும் செல்லத்துரைக்கு விளம்பர பதாகை வைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை. 82 வயதான இவர் தொடர்ந்து 12வது ஆண்டாக தனது அன்பு மகளுக்கு பொங்கல் சீரை சுமார் 17 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே கொண்டு செல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியமும் கலாச்சாரமுமாக உள்ள பொங்கல் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. 
குறிப்பாக பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பவர்கள் வீட்டிற்கு பெண் வீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் சீர் வழங்குவது தமிழர்களின் பழக்கமாக உள்ளது. 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை -அமிர்தவள்ளி தம்பதியருக்கு சுந்தராம்பாள் என்ற மகளும் முருகேசன் என்ற மகனும் உள்ளனர். 
இந்நிலையில் சுந்தராம்பாளை சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்ட்டியில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவருக்கு 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரம்பாளுக்கு இரட்டை குழந்தை பிறந்தள்ளது. அதற்கு முன்பு வரை ஆயிரம் ரூபாய் பொங்கல் சீராக வழங்கி வந்த  செல்லத்துரை மகளுக்கு குழந்தை பிறந்த தினம் முதல் இன்றைய தினம் வரை தொடர்ச்சியாக 12 ஆண்டு காலமாக பாரம்பரியமும் கலாச்சாரமும் மாறாமல் இருக்கவும் மகள் மீது கொண்ட பாசத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது தலையில் கரும்பு கட்டும், சைக்கில் கேரியரில் சீர் பொருட்க்களையும் எடுத்துக்கொண்டு சைக்கிளில் சுமார் 17 கிமீ பயணம் செய்து பொங்கல் சீர் வழங்கி வருகிறார். 
குறிப்பாக இவர் 82 வயதிலையும் அவரது சைக்கிளில் விவேகானந்தர் காலண்டர் தேங்காய் பழம் மஞ்சள் கொத்து வேட்டி துண்டு பொங்கல் பூ பச்சரிசி வெள்ளம் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் சீரை வைத்துக்கொண்டு ஐந்து கரும்புகளை தலையில் சுமந்து கொண்டு கரும்பை கையில் வைத்து பிடிக்காமல் அவரது சைக்கிளை ஓட்டி சென்று வருகிறார். வடக்கு கொத்தக்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் 16 வேகத் தடைகளை கடந்து நம்பம்பட்டி வரை சைக்கிளிலேயே அவர் பொங்கல் சீர் கொண்டு செல்வதை சாலை நெடுகிலும் உள்ள மக்கள் கண்டு வியந்து வருவதோடு முதியவருக்கு  கைகளை காட்டி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
காலங்கள் கடந்தும் தமிழனின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு சான்றளிக்கும் விதத்திலும் தமிழர்கள் என்றாலே பாசத்துக்கு பெயர் பெற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலும் தனது மகளுக்கு பாரம்பரியமாக சைக்கிளையே சென்று பொங்கல் சீர் வழங்கி வரும் தந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் கொத்தக்கோட்டை வர்த்தகர்கள் சார்பில் மகளுக்கு சீர் எடுத்துச் செல்லும் செல்லத்துரைக்கு விளம்பர பதாகை வைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார் திருமதி லீமா ரோஸ் மார்டின்! இந்திய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுசெயலாளர் திருமதி லீமா ரோஸ் மார்டின் அவர்கள் கடந்த (09.01.2026) வெள்ளிக்கிழமை அன்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களையும், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.
    1
    முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார் திருமதி லீமா ரோஸ் மார்டின்!
இந்திய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுசெயலாளர் திருமதி லீமா ரோஸ் மார்டின் அவர்கள் கடந்த (09.01.2026) வெள்ளிக்கிழமை அன்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களையும், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 day ago
  • தேனி மதுரை சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் ஆதாயமாக விளங்கும் முல்லைப் பெரியார் அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் போற்றும் விதமாக நாளை தை முதல் நாள் தைப்பொங்கலை முன்னிட்டு லோயர் கேம்பில் உள்ள ஜான் பென்னிகுயிக் மணி மண்டபத்தில் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது
    1
    தேனி மதுரை சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் ஆதாயமாக விளங்கும் முல்லைப் பெரியார் அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் போற்றும் விதமாக நாளை தை முதல் நாள் தைப்பொங்கலை முன்னிட்டு லோயர் கேம்பில் உள்ள ஜான் பென்னிகுயிக் மணி மண்டபத்தில் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    15 min ago
  • முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185 வது பிறந்தநாளையொட்டி, நாளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில், நடைபெற உள்ள பொங்கல் விழாவை முன்னிட்டு, முல்லைப் பெரியாறு அணையும் அதை கட்டிய பென்னிகுவிக் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபமும் இரவில் அலங்கார விளக்கு ஒளியில் மின்னும் காட்சி.
    1
    முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185 வது பிறந்தநாளையொட்டி, நாளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில், நடைபெற உள்ள பொங்கல் விழாவை முன்னிட்டு, முல்லைப் பெரியாறு அணையும் அதை கட்டிய பென்னிகுவிக் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபமும் இரவில் அலங்கார விளக்கு ஒளியில் மின்னும் காட்சி.
    user_Theni Godwin
    Theni Godwin
    Journalist தேனி, தேனி, தமிழ்நாடு•
    58 min ago
  • வேடசந்தூர் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் கரும்பு , மஞ்ச கொத்து,பூழப்பூ , பழங்கள், பூ என பல்வேறு ஜாமான்கள் வாங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .
    1
    வேடசந்தூர் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு  தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் கரும்பு , மஞ்ச கொத்து,பூழப்பூ , பழங்கள், பூ என பல்வேறு ஜாமான்கள் வாங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .
    user_Gowthaman T
    Gowthaman T
    Farmer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • உலகம் முழுவதும் நாளை மறு தினம் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாட பொதுமக்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், அந்தத் திருநாளை நம்பி வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தற்போது கவலையில் ஆழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான கரும்பு, பானை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகள் லட்சக்கணக்கில் முதலீடு செய்து வியாபாரத்திற்காக சாலையோரம் கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆலங்குடி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் வீட்டின் உள்ளையே முடங்கி இருக்கின்றனர். இதனால் வருடத்தில் ஒரு நாளை நம்பி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் பொதுமக்களின் வருகை இன்றி விற்பனைக்காக வாங்கி வைத்த பொருட்கள் விற்பனையாகாமல் இருப்பதால் இந்த பொங்கல் தங்களுக்கு கசப்பு பொங்கலாக மாறிவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர். மழை ஒரு காரணமாக அமைந்தாலும் இதில் முக்கிய காரணமாக இருப்பது பொதுமக்களின் நாகரீக மாற்றமே, தைப்பொங்கல் திருநாளில் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது பாரம்பரியமாக இருந்தாலும் பொதுமக்களின் மாற்றத்தால் எவர்சில்வர் பாத்திரங்களையே அதிகமாக விரும்புவதாகவும் மண்பானை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். மண்பானை உற்பத்தியில் ஈடுபடும் தொழிளாலர்கள்உள்ளூரில் பானை செய்வதற்கு மூலப்பொருளான களிமண் பற்றாக்குறையாலும் ஒரு சில இடங்களில் முற்றிலும் களிமண் கிடைக்காத காரணத்தாலும் மண்பாண்ட தொழிலாளர்கள் பல தங்களது தொழிலையே விட்டு விட்ட நிலையில் ஒரு சிலர் பணம் கொடுத்து களிமன்களை வாங்கி பானைகள் செய்து வருகின்றனர். இன்னும் சில மண்பான தொழிலாளர்கள் மண்பாண்டம் செய்வதை விட்டாலும் மண்பாண்டங்களை விலை கொடுத்து வாங்கி வந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வளவு சிரமத்திற்கு இடயே மண்பான தொழிலாளர்கள் தங்களது தொழிலை தொடர்ந்தாலும் பொதுமக்கள் மண்பாண்டங்களில் வாங்குவதில் ஆர்வம் காட்டாததாலும் காரணத்தாலும் மண்பாண்ட வியாபாரிகள் தங்கள் கொண்டு வந்த பாணிகளை விற்பனை செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர். தை திருநாளில் பொதுமக்களுக்கு கரும்பு, பொங்கல், கொண்டாட்டம் என ஏராளமான தித்திப்புக்கள் இருக்கும் நிலையில் அந்த தித்திப்பான பொங்கலை பாரம்பரிய முறைப்படி மண்பானையில் வைத்து கொண்டாடினால் லட்சக்கணக்கான மாண்பாண்ட தொழிளாலர்கள் வாழ்வும் தித்திப்பாக மறும் என்பதே மண்பாண்ட தொழிளாலர்களின் கோரிக்கையாக உள்ளது.
    1
    உலகம் முழுவதும் நாளை மறு தினம் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாட பொதுமக்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், அந்தத் திருநாளை நம்பி வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தற்போது கவலையில் ஆழ்ந்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான கரும்பு, பானை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகள் லட்சக்கணக்கில் முதலீடு செய்து வியாபாரத்திற்காக சாலையோரம் கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ஆலங்குடி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் வீட்டின் உள்ளையே முடங்கி இருக்கின்றனர்.
இதனால் வருடத்தில் ஒரு நாளை நம்பி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் பொதுமக்களின் வருகை இன்றி விற்பனைக்காக வாங்கி வைத்த பொருட்கள்  விற்பனையாகாமல் இருப்பதால் இந்த பொங்கல் தங்களுக்கு கசப்பு பொங்கலாக மாறிவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.
மழை ஒரு காரணமாக அமைந்தாலும் இதில் முக்கிய காரணமாக இருப்பது பொதுமக்களின் நாகரீக மாற்றமே, தைப்பொங்கல் திருநாளில் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது பாரம்பரியமாக இருந்தாலும் பொதுமக்களின் மாற்றத்தால் எவர்சில்வர் பாத்திரங்களையே அதிகமாக விரும்புவதாகவும் மண்பானை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மண்பானை உற்பத்தியில் ஈடுபடும் தொழிளாலர்கள்உள்ளூரில் பானை செய்வதற்கு மூலப்பொருளான களிமண் பற்றாக்குறையாலும் ஒரு சில இடங்களில் முற்றிலும் களிமண் கிடைக்காத காரணத்தாலும் மண்பாண்ட தொழிலாளர்கள் பல தங்களது தொழிலையே விட்டு விட்ட நிலையில் ஒரு சிலர் பணம் கொடுத்து களிமன்களை வாங்கி பானைகள் செய்து வருகின்றனர்.
இன்னும் சில மண்பான தொழிலாளர்கள் மண்பாண்டம் செய்வதை விட்டாலும் மண்பாண்டங்களை விலை கொடுத்து வாங்கி வந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வளவு சிரமத்திற்கு இடயே மண்பான தொழிலாளர்கள் தங்களது தொழிலை தொடர்ந்தாலும் பொதுமக்கள் மண்பாண்டங்களில் வாங்குவதில் ஆர்வம் காட்டாததாலும் காரணத்தாலும் மண்பாண்ட வியாபாரிகள் தங்கள் கொண்டு வந்த பாணிகளை விற்பனை செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
தை திருநாளில்  பொதுமக்களுக்கு கரும்பு, பொங்கல், கொண்டாட்டம் என ஏராளமான தித்திப்புக்கள் இருக்கும் நிலையில் அந்த தித்திப்பான பொங்கலை பாரம்பரிய முறைப்படி மண்பானையில் வைத்து கொண்டாடினால் லட்சக்கணக்கான மாண்பாண்ட தொழிளாலர்கள் வாழ்வும் தித்திப்பாக மறும் என்பதே மண்பாண்ட தொழிளாலர்களின் கோரிக்கையாக உள்ளது.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.