திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தாராபுரத்தில் செய்தியாளர் சந்திப்பு தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து, திமுக நகர நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: "இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது தேவையின்றி திணிக்கப்பட்ட ஒன்று. வாக்களித்த மை காய்வதற்குள், சத்யபாமா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமைச் செயலகத்திலேயே வேறு கட்சியில் இணைந்துவிட்டார். இதன் பின்னணியில் உள்ள அரசியலை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் அமர்ந்துகொண்டு திமுக தலைவரை விமர்சித்தவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையிலும், அவர்கள் முகத்தில் கரியைப் பூசும் வகையிலும் இந்த இடைத்தேர்தலில் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும். ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் எனத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் எதிர்க்கட்சியினர் நிறைவேற்றவில்லை. நாங்கள் பெண் வீட்டார் போலத் தாராபுரம் தொகுதியிலேயே 17 நாட்கள் தங்கி தீவிரமாகத் தேர்தல் பணியாற்ற உள்ளோம். இங்கு திமுக வேட்பாளர் சுகன்யா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தொண்டர்கள் அனைவரும் சமூக வலைதளங்களிலும், களத்திலும் முனைப்புடன் உழைக்க வேண்டும். இது திமுகவிற்கு வைக்கப்பட்ட பரிட்சை." இவ்வாறு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவின் வெற்றி உறுதி. செய்தியாளர்களை சந்தித்து முன்னால் அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சுகன்யாவின் வெற்றிக்கு ஆதரவாகத் திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் தீவிரப் பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாராபுரம் என்றும் திமுகவின் பலமிக்க கோட்டையாகவே இருந்துள்ளது; இங்குள்ள 20 வாக்குச்சாவடிகளில் தீவிர கவனம் செலுத்தி வெற்றி வாய்ப்பை மேலும் வலுப்படுத்தி வருகிறோம். வெற்றி பெற்ற பின் வேறொரு கட்சிக்கு மாறி, மக்களுக்கும் சொந்தக் கட்சிக்கும் துரோகம் இழைத்த வேட்பாளருக்கு இத்தேர்தலில் வாக்காளர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஆளுங்கட்சி அளித்த பொய் வாக்குறுதிகள், கடன் சுமை அதிகரிப்பு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சனையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்; அரசு உண்மை நிலையை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அரசியல் விழிப்புணர்வினாலும், தொண்டர்களின் தீவிர உழைப்பினாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் சுகன்யா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார் .
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தாராபுரத்தில் செய்தியாளர் சந்திப்பு தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து, திமுக நகர நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: "இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது தேவையின்றி திணிக்கப்பட்ட ஒன்று. வாக்களித்த மை காய்வதற்குள், சத்யபாமா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமைச் செயலகத்திலேயே வேறு கட்சியில் இணைந்துவிட்டார். இதன் பின்னணியில் உள்ள அரசியலை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் அமர்ந்துகொண்டு திமுக தலைவரை விமர்சித்தவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையிலும், அவர்கள் முகத்தில் கரியைப் பூசும் வகையிலும் இந்த இடைத்தேர்தலில் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும். ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் எனத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் எதிர்க்கட்சியினர் நிறைவேற்றவில்லை. நாங்கள் பெண் வீட்டார் போலத் தாராபுரம் தொகுதியிலேயே 17 நாட்கள் தங்கி தீவிரமாகத் தேர்தல் பணியாற்ற உள்ளோம். இங்கு திமுக வேட்பாளர் சுகன்யா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தொண்டர்கள் அனைவரும் சமூக வலைதளங்களிலும், களத்திலும் முனைப்புடன் உழைக்க வேண்டும். இது திமுகவிற்கு வைக்கப்பட்ட பரிட்சை." இவ்வாறு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவின் வெற்றி உறுதி. செய்தியாளர்களை சந்தித்து முன்னால் அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சுகன்யாவின் வெற்றிக்கு ஆதரவாகத் திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் தீவிரப் பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாராபுரம் என்றும் திமுகவின் பலமிக்க கோட்டையாகவே இருந்துள்ளது; இங்குள்ள 20 வாக்குச்சாவடிகளில் தீவிர கவனம் செலுத்தி வெற்றி வாய்ப்பை மேலும் வலுப்படுத்தி வருகிறோம். வெற்றி பெற்ற பின் வேறொரு கட்சிக்கு மாறி, மக்களுக்கும் சொந்தக் கட்சிக்கும் துரோகம் இழைத்த வேட்பாளருக்கு இத்தேர்தலில் வாக்காளர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஆளுங்கட்சி அளித்த பொய் வாக்குறுதிகள், கடன் சுமை அதிகரிப்பு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சனையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்; அரசு உண்மை நிலையை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அரசியல் விழிப்புணர்வினாலும், தொண்டர்களின் தீவிர உழைப்பினாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் சுகன்யா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார் .
- சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர் கைது. 2 கிலோ கஞ்சா பறிமுதல் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர் கைது. 2 கிலோ கஞ்சா பறிமுதல். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான நொச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் துரை பாபு தலைமையில் மதுவிலக்கு போலீசார் முகமது ரபி, நாகேந்திரன் மற்றும் குமாரசாமி ஆகியோர் நொச்சிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் சந்தேகத்திற்கு கிடமான வகையில் நின்று கொண்டு இருந்ததை அறிந்த போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஸ் குமார் 22 என்பதும் அவர் தற்போது திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தங்கி பணி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்து காங்கேயம் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.1
- கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை கோபி அறிஞர் அண்ணா வியாபாரிகள் சங்க தலைவர் சிவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கலை நிகழ்ச்சியை சக்திவேல் துவக்கி வைத்தார்.மேலும் விழாவில் மாவட்ட செயலாளர் குமரவேல், மாநில இளைஞர் அணி செயலாளர் கராத்தே வசந்த்,மாநில அமைப்பு செயலாளர் அருண்ராஜ், மாநில செயலாளர் வாடிவாசல் ஹரி, தமிழ்செல்வம், சதீஸ்குமார், அருண்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து அதிரடி படை நிறுவன தலைவர் ராஜகுரு வாழ்த்துரை வழங்கினார்.இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேசும் போது,தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்ட மன்ற தேர்தலில் திமுக வை தோற்கடித்து ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார்.திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும், அந்த வரிசையில் த வெ க வும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் என கூறினார்.சட்ட சபையில் யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் மத போதகர்கள்,அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பில் இந்துவா இல்லை கிறிஸ்தவரா என கேள்வி எழுப்பினார்.உதயநிதி கார் பந்தயம் நடத்தினால் ஊதாரி தனம், ஆனால் த வெ க வினர் நடத்தினால் மக்களுக்கு நன்மையா மக்கள் ஏமாற கூடாது எனவும் பேசினார்.4
- பாட்டியின் சாதனை. சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.1
- விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.4
- கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலிருந்து இந்து முன்னணி, பாஜக,சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கரூர் மாநகர் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. முன்னதாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக விநாயகர் ஊர்வலம் கிளம்பிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.1
- ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.1
- ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.1
- தாராபுரம் இடைத்தேர்தலில் அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளர் ராஜரத்தினம் பேட்டி தாராபுரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில்அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளராக ராஜரத்தினம் (52) நிறுத்தப்பட்டுள்ளார் இதையடுத்து அவர் சுயேச்சை வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் தாராபுரம் வட்டம் மணக்கடவு அஞ்சல் மணக்கடவு பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜின் மகன் ராஜரத்தினம் இவர் எம்.ஏ., பி.எட். வரை படித்துள்ளார். கல்வித் தகுதி இருந்தபோதிலும்தற்போது கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் அருந்தியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவரது வேட்புமனு தாக்கல் நிகழ்வில் அருந்ததியர் கூட்டமைப்பு தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த வடிவேல்ராமன் ராஜசேகரன் இளங்கோ கணேசன் விடுதலைவீரன் என்டிஆர் திருப்பூர் திருமுகசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ராஜரத்தினத்திற்கு சுதா (38) என்ற மனைவியும், குணால் (22) என்ற மகனும், செந்தமிழ் அரசி (19) என்ற மகளும் உள்ளனர் தாராபுரம் தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் ராஜரத்தினம் பொது வேட்பாளராக சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது தேர்தல் களத்தில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக பிரதிநிதித்துவம் மற்றும் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் பல்வேறு தரப்பினரின் போட்டி மேலும் விறுவிறுப்படைந்துள்ளது1