Shuru
Apke Nagar Ki App…
சிவகங்கை தொகுதியில் வாக்களித்த அ.இ.பு.ம.மு.க வேட்பாளர் குரு முருகனாந்தம் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் குரு முருகனாந்தம், தனது சொந்த தொகுதியான ராஜ கம்பீரத்தில் தொடக்கப்பள்ளியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். பொதுமக்களும் ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் அமைதியான சூழல் நிலவிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
Santhosh Kumar V
சிவகங்கை தொகுதியில் வாக்களித்த அ.இ.பு.ம.மு.க வேட்பாளர் குரு முருகனாந்தம் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் குரு முருகனாந்தம், தனது சொந்த தொகுதியான ராஜ கம்பீரத்தில் தொடக்கப்பள்ளியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். பொதுமக்களும் ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் அமைதியான சூழல் நிலவிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் குரு முருகனாந்தம், தனது சொந்த தொகுதியான ராஜ கம்பீரத்தில் தொடக்கப்பள்ளியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். பொதுமக்களும் ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் அமைதியான சூழல் நிலவிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.1
- இன்று (ஏப்ரல் 23, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.2
- தமிழகத்தில் இன்று (ஏப்.23) காலை 7 மணி முதல் தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செல்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 3 ம் நாள் நிகழ்ச்சி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தம்பட்டி பகுதியில் திமுகவினருடைய மோதல். ஒருவருக்கு மண்டை உடைப்பு. மருத்துவமனையில் அனுமதி. அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம். பதட்டமான சூழ்நிலை போலீசார் குவிப்பு.1
- தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியில் அவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினர் கணேஷ் நகரில் உள்ள வேட்பாளரின் வீட்டிற்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 65 லட்சம் ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் முறைப்படி பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாகத் தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பணம் பதுக்கியது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளைப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைத் தென்பாகம் போலீசார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்துத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டிலும் பெரிய அளவிலான தொகை சிக்கியிருப்பது தூத்துக்குடி மாவட்ட தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சி பூதிபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் பூத் எண் 148 காலையிலிருந்து வாக்குகள் விறுவிறுப்பாக நடைபெற்றது மாலை 6:00 மணிக்கு வாக்களிப்பதற்கான நேரம் முடிந்தது அதன் நிலவரப்படி மொத்த வாக்காளர் 790 வாக்குகள் பதிவு பெற்றது 737 93% சதவீதம் இதில் ஆண்கள் 352 பெண்கள் 385 வாக்குகள் பதிவு பெற்று நிறைவு செய்யப்பட்டன ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குப்பதிவிற்காக காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். தமிழரசி ரவிக்குமார் கடந்த மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் வாக்களிப்பு அப்பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. வாக்குச்சாவடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.1