Shuru
Apke Nagar Ki App…
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக 200 அடியாக நீர்வரத்து இன்று (பிப்.18) புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Raja
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக 200 அடியாக நீர்வரத்து இன்று (பிப்.18) புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக 200 அடியாக நீர்வரத்து இன்று (பிப்.18) புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.1
- அரூர்-வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்கு மாவட்ட ஆட்சியர் தண்ணீரை திறந்துவைத்தார் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி சாலையில் வரட்டாற்றின் குறுக்கே வள்ளிமதுரை என்னுமிடத்தில் தடுப்பனை கட்டப்பட்டுள்ளது தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.சதீஷ் தண்ணீரை திறந்துவைத்து மலர்தூவி வரவேற்றார் . இந்த தண்ணீர் கால்வாய் மூலம் வினாடிக்கு 30 கன அடி வீதம் 40 நாட்களுக்கு வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை திறந்து விடப்படும். இடது, வலது புற கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர். காட்டு முல்லன் ஏரி, ஈட்டியன் ஏரி, தீர்த்தகிரி ஏரி, மாம்பாடி ஏரி, வெள்ளான் குட்டை ஏரி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரம்பி கால்வாய் மூலம் விவசாய நிலங்கள் நீர் பாசனம் பெறுகிறது. அணையிலிருந்து நேரடி கால்வாய் மூலம் 2853 ஏக்கர் நிலமும், ஏரிகள் மூலம் 2255 ஏக்கர் நிலம் என மொத்தம்.5108 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது, வள்ளிமதுரை, தாதாராவலசு, சாமநத்தம், கீரைப்பட்டி, குடிமியாம்பட்டி, அச்சல்வாடி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுகின்றனர் இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- .ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுத்து மாவட்ட முதன்மை நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறுந்தககளால் பரபரப்பு நீதிபதிகள் உட்பட- நீதிமன்ற பணியாளர்கள் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தடங்கும் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களான மாவட்ட நீதிமன்றம், மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்றம், மகிலா நீதிமன்றம் மாவட்ட சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 16 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறும் தகவலில் இன்று 12:020 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என வந்த தகவலை அடுத்து அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் அதியமான் கோட்டை காவல் துறையினர் விரைந்து வந்து நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 2000 ஊழியர்கள் 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை வெளியேற்றி 16 நீதிமன்றங்களையும் பூட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் லூபி உதவியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது இந்த சம்பவத்தால் நீதிமன்றம் வாழாகும் பரபரப்பாக காணப்பட்டது. இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் தேதியும், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 19. 12. 2025 தேதியும், தருமபுரி பழைய கோர்ட் வாலாகத்திற்கு கடந்த 9ம் தேதியும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.1
- கிருஷ்ணகிரி சுங்கசாவடி அருகே அமைந்துள்ள ஹெக்பஞ்சத்தன் பொது அறக்கட்டளையின் சார்பில் ரம்ஜான் மாதம் பிறப்பு மற்றும் 3 ஆம் ஆண்டு தீனியாத் படித்த குழந்தைகளுக்கு குர்ஆன் ஷரீப் வழங்கும் விழா நடைபெற்றது.1
- எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்... மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்... அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...1
- இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்பாளுக்கு திருநங்கைகளின் மாசி மாத கொம்ப படையல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றன விழாவில் பொதுமக்களும் குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- நாமகிரிப்பேட்டை அடுத்த புதுப்பட்டி பகுதியில் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ துலுக்க சூடாமணி மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று இரவு தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கம்பம் நடப்பட்டன. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்று சாம்பல் புதன் தினத்தை அனுசரிக்கிறார்கள் இன்று முதல் 40 நாட்களுக்கு தவக்கால நோன்பு அனுசரிப்பது வழக்கம். இந்த நிலையில் கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் இன்று சாம்பல் புதனை சிறப்பிக்கும் வகையில் பங்கு தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்குத்தந்தை பெனடிக்ட் தலைமையில் திருப்பலியும் அதில் குருத்தோலை சாம்பலில் சிலுவை அடையாளம் வரைந்து வழிபாடு நடந்தது.1