Shuru
Apke Nagar Ki App…
பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளை கண்டுகளித்த கலெக்டர் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம்,தேவரியம்பாக்கம் ஊராட்சி, தோனாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு கண்டுகளித்தார்.உடன் வாலாஜாபாத் ஒன்றியக்குழு பெருந்தலைவர் RK.தேவேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி,ஊராட்சிமன்ற தலைவர் அஜய்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
KANCHI NEWS PLUS
பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளை கண்டுகளித்த கலெக்டர் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம்,தேவரியம்பாக்கம் ஊராட்சி, தோனாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு கண்டுகளித்தார்.உடன் வாலாஜாபாத் ஒன்றியக்குழு பெருந்தலைவர் RK.தேவேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி,ஊராட்சிமன்ற தலைவர் அஜய்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவானது ஊராட்சி மன்ற தலைவர் ரேகா நரேஷ் தலைமையில் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் மிக கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஊராட்சி செயலர் சுரேஷ்,துணைத்தலைவர், வார்டுஉறுப்பினர்கள்,கிராம பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலில், ஊராட்சி பகுதிகளில் இருந்து கழிவுநீர் கலக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழல் மாசு மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்குகிறது. அந்த வடிகால் திறந்த நிலையில் இருப்பதால், துர்நாற்றம், கொசு உற்பத்தி மற்றும் நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. இது Water (Prevention of Pollution) Act மற்றும் Swachh Bharat Mission விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, தயவுசெய்து உடனடி ஆய்வு செய்து, கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தவும், பொது மக்களின் வேண்டுகோள்1
- மக்கள் சமூக நீதி பேரவை, சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு குழு இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் சமூகநீதி பேரவை சார்பாக வேப்பூரில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் 13.01.2026 அன்று நடந்தது. குரும்பகவுண்டர் சமூகத்தையும், அதன் தலைவர் R.கிருஷ்ணசாமியையும், கோயம்புத்தூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் Whatsapp-Audio பதிவினை வெளியிட்டுள்ளார். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும், இரு சமூகங்களுக்கு மத்தியில் கலவரத்தை தூண்டிய குற்றசெயலுக்காக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி 10 மேற்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்தனர். நடவடிக்கை இல்லாததால், கோவை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கும். நடவடிக்கை இல்லை என்பதால், வேப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், தலைமையாக மக்கள் சமூகநீதிபேரவை மாவட்ட செயலாளர் பிரபு. முன்னிலையாக மாநில செய்தி தொடர்பாளர் சந்திரசேகர், அயலக அணி தலைவர் மருதமுத்து முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, மாநில தலைவர் கோபால், மாநில பொருளாளர் சுமதி, கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம், திருச்சி மாவட்ட செயலாளர் பிச்சைவேல், ஒன்றிய செயலாளர் அஜய் மற்றும் கடலும் மாவட்ட குரும்பகவுண்டர் சமூக நிர்வாகிகள் 100க்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டு, சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கமிட்டனர்.3
- Post by சின்ன கண்ணன்2
- பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த நிலையில் பொங்கல் திருநாள் பல்வேறு இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 பஞ்சாயத்துகளிலும் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது அதில் ஒரு பகுதியாக பருவதன அள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ள மக்களுடன் ஒன்று இணைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன் ஆகியோரின் ஏற்பாட்டில் மண்டல தொகுதி அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் மகேஷ் குமார் உதவி இயக்குனர் (பயிற்சி) தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கோலப்போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது இறுதியாக சமத்துவபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம் பருவதன அள்ளி ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் சமத்துவ பொங்கல்லில் கலந்து கொண்டனர்.1
- பொங்கல் பண்டிகை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் மட்டி, ரசகதளி மற்றும் செவ்வாழை வாழைப்பழங்கள் வரத்து குறைவு காரணமாக, கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அனைத்து வாழை பழங்களும் 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புது மண தம்பதியர்களுக்கு சீர்வரிசையுடன் வாழை குலைகளும் கொடுப்பது வழக்கம் அதே போன்று அனைத்து பொங்கல் விழாவிலும் வாழை குலைகள் இடம் பெறும் இதனால் பொங்கல் பண்டிகைக்கு வாழைக்குலைகளின் தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து உள்ளது இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். சந்தைகளில் 100 எண்ணம் கொண்ட பெரிய செவ்வாழை பழம் ரூ 1500 ரூபாயாக விலை உயர்ந்து உள்ளது - 10 கிலோ எடை கொண்ட ரசகதளி பழம் 700 ரூபாயாகவும், 100 எண்ணம் கொண்ட வெள்ளை தொழவன் பழம் 500 ரூபாயாகவும், 35 எண்ணம் கொண்ட நாட்டு ஏத்தன் பழம் 350 ரூபாயாகவும், 100 எண்ணம் கொண்ட நாட்டு பேயன் பழம் 700 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது அனைத்து வாழை பழங்களும் 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1