Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவானது ஊராட்சி மன்ற தலைவர் ரேகா நரேஷ் தலைமையில் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் மிக கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஊராட்சி செயலர் சுரேஷ்,துணைத்தலைவர், வார்டுஉறுப்பினர்கள்,கிராம பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.1
- திருவண்ணாமலை மாவட்டம் : ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்கள் வருடாவருடம் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் போகிப் பண்டிகை தமிழ் ஆண்டின் முதல் நாள் கொண்டாடப்படும் மேலும் சிறப்பு பொங்கல் சந்தையும் நடை பெற்றது இதில் புது துணி.கரும்பு காய்கறிகள் பொங்கலுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கினர் இதனால் அனைத்து வியாபாரிகள் விற்பனையில் கலை கட்டியது1
- திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலில், ஊராட்சி பகுதிகளில் இருந்து கழிவுநீர் கலக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழல் மாசு மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்குகிறது. அந்த வடிகால் திறந்த நிலையில் இருப்பதால், துர்நாற்றம், கொசு உற்பத்தி மற்றும் நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. இது Water (Prevention of Pollution) Act மற்றும் Swachh Bharat Mission விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, தயவுசெய்து உடனடி ஆய்வு செய்து, கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தவும், பொது மக்களின் வேண்டுகோள்1
- பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர் இதன் காரணமாக திருப்பூரில் இருந்து சேலம் மொரப்பூர் காட்பாடி ஆம்பூர் வழியாக செல்லும் ரயில்கள் மற்றும் திருச்சி மார்க்க ரயில் உள்ளிட்டவற்றில் பயணிக்க பொதுமக்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மாலை நாகர்கோவில் செல்லும் ரயிலுக்கும் அதிக அளவிலான வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இருசக்கர வாகனங்களில் செல்வதாலும், தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள் சிறுக சிறுக சென்றதால் பேருந்து நிலையங்களில் கூட்டம் இன்றி காணப்படுகிறது. மேலும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் வசதியாக இருக்கும் என்பதாலும் கட்டணம் குறைவு என்பதாலும் ஏராளமானோர் ரயிலில் செல்ல முனைப்பு காட்டியதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.1
- பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த நிலையில் பொங்கல் திருநாள் பல்வேறு இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 பஞ்சாயத்துகளிலும் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது அதில் ஒரு பகுதியாக பருவதன அள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ள மக்களுடன் ஒன்று இணைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன் ஆகியோரின் ஏற்பாட்டில் மண்டல தொகுதி அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் மகேஷ் குமார் உதவி இயக்குனர் (பயிற்சி) தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கோலப்போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது இறுதியாக சமத்துவபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம் பருவதன அள்ளி ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் சமத்துவ பொங்கல்லில் கலந்து கொண்டனர்.1
- தர்மபுரி நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது தர்மபுரி நகராட்சி சார்பில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடந்தது இதில் நகராட்சி ஆணையர் சேகர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி கடந்து கொண்டு சமத்துவ பொங்கல் இந்து கிறிஸ்டின் முஸ்லிம் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர். என் பி பெரியண்ணன் பச்சையப்பன். நகரக் கழக செயலாளர் நாட்டான் மாது. கௌதம். நகராட்சி துணைத் தலைவர் கே அன்பழகன் நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன் பாண்டியன் வாசுதேவன் முல்லைவேந்தன். கட்சி நிர்வாகிகள் நகராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1