Shuru
Apke Nagar Ki App…
ஆலங்குடி: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு இன்று மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி சிற்பித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி, ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நம்ம ஊரு புதுக்கோட்டை
ஆலங்குடி: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு இன்று மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி சிற்பித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி, ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில் சாலையோரமாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சுத்தமான குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- நாகை மாவட்டம் கீழையூர் கடைவீதியில் இந்திய கமயூனிஸ்ட் கட்சி சார்பில் மறைந்த தியாகி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜி முருகையன் அவர்களின் 47 வது நினைவு தினம் அனுசரிப்பு2
- Post by சந்திரசேகர். D1
- விஜய் நடித்து வெளியாகி உள்ள ஜனநாயகம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பெரியகுளம் பவளம் தியேட்டர் முன்பு விஜய் கட் அவுட் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளனர்1
- தேனி அருகே தாடிச்சேரியில் திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டி: தங்கம் தமிழ்செல்வன் எம்.பி தொடங்கி வைத்தார்! தேனி அருகே தாடிச்சேரியில் திமுகவின் தேனி வடக்கு மாவட்டம் தேனி வடக்கு ஒன்றியம் சார்பாக திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது இந்த கபடி போட்டியில் தாடிச்சேரி, சிவலிங்க நாயக்கன்பட்டி ,கோட்டூர் சீலையம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் பங்கேற்றனர்.இந்த விழாவின் இரண்டாம் நாள் கபடி போட்டியினை தேனி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளருமாகிய தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்று கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாடிய கபடி வீரர்கள் ஆடுகளத்தில் சிறப்பான முறையில் விளையாடினார்கள் இந்தப் போட்டியில் சிறப்பான முறையில் மூன்றாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 15,000 மற்றும் சுழல் கோப்பையும் இரண்டாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு 20,000 மற்றும் சுழல் கோப்பையும், முதல் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 25000 மற்றும் சுழல் கோப்பையும் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி வழங்கி சிறப்பித்தார்.மேலும் இந்த நிகழ்வில் தேனி வடக்கு ஒன்றிய விவசாய அமைப்பாளர் ரவி, கிளை செயலாளர்கள் தவசி, பாக்கியம், தேனி வடக்கு ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் போத்திராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருக ஜெகதீஸ் ,ஆதிதிராவிட நல குழு அணி அமைப்பாளர் பால்ராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பட்டிய அணி துணை அமைப்பாளர் தமிழரசன் ,திமுக பிரதிநிதிகள் சூரத் தேவன், ராஜவேல் சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள்,விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவிற்கு வருகை புரிந்த பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனீ வடக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது1
- *பொங்கல் தொகுப்பு வழங்கிய பேரூராட்சி தலைவர்* தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் கலந்து கொண்டனர்.1
- தூய்மை பணியை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் திருவேங்கைவாசல் அருகே சிப்காட்டில் "சிப்காட் போகி"தூய்மை பணியினை (ஜன.9) அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்எல்ஏ முத்துராஜா, மாவட்ட ஆட்சியர் அருணா, ஆகியோர் கொடி அசைத்து பணியினை துவக்கி வைத்தனர். பின்னர் ஜேசிபி கொண்டும் தூய்மை பணியாளர்கள் கொண்டு சிப்காட்டில் 421 ஏக்கர் பரப்பளவில் உள்ள செடி கொடிகள் அகற்றப்படும் என சிப்காட் திட்ட அலுவலர் கணேசன் தெரிவித்தார்1
- சிவகங்கை ஜஸ்டின் பள்ளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில், காரைக்குடி மண்டல பயிற்சி மையத்தில் சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 2026 ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை நடைபெறும் இந்த சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தப்பட்டது.1
- *தேனி பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவதில் இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 8 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது, 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து ஆட்டோக்கள் பறிமுதல்* *கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்கக்கோரி தேனி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாத ஈடுபட்ட 60க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது* தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் பென்னிகுயிக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது இந்த ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று வருகின்றனர் இந்த ஆட்டோ நிறுத்தத்தில் மற்றொரு தரப்பினர் ஆட்டோக்களை நிறுத்துவதால் இருதரப்பிற்கிடையே பிரச்சனை நிலவி வந்தது இந்த நிலையில் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு ஆட்டோ நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் மேலும் அப்பகுதியில் ஆட்டோ நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என கூறி ஆட்டோ நிறுத்தத்தை அகற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரிக்காடுகளை வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர் இதனால் தேனி போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த நிலையில் போலீசாரின் தடையை மீறி ஆட்டோ நிறுத்திய 8 நபர்களின் ஆட்டோக்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர் மேலும் 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி தேனி காவல் நிலையத்தை ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து தேனி காவல் நிலையத்தில் டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் காவல் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடு சுமார் 61 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில் தாங்கள் 13 வருடங்களாக முறையாக பதிவு பெற்று ஆட்டோ நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி வருகிறோம் இந்த நிலையில் ஆட்டோ நிறுத்தத்தில் பிரச்சினை ஏற்படுத்திய மற்றொரு தரப்பினரின் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு தங்கள் ஆட்டோ சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிந்தனர் இதனால் கடந்த சில நாட்களாக ஆட்டோ ஓட்ட முடியாமல் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட தங்கள் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்1