Shuru
Apke Nagar Ki App…
நாகை மாவட்டம் கீழையூர் கடைவீதியில் இந்திய கமயூனிஸ்ட் கட்சி சார்பில் மறைந்த தியாகி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜி முருகையன் அவர்களின் 47 வது நினைவு தினம் அனுசரிப்பு
MAHENDRAN
நாகை மாவட்டம் கீழையூர் கடைவீதியில் இந்திய கமயூனிஸ்ட் கட்சி சார்பில் மறைந்த தியாகி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜி முருகையன் அவர்களின் 47 வது நினைவு தினம் அனுசரிப்பு
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Sri ram1
- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பளராக மு.கார்த்திகா போட்டியிடுகிறார். தொகுதியில் முதல் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். தொகுதிக்கு உட்பட்ட கிள்ளுக்குடி, இரிஞ்சியூர், வண்டலூர், இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பொதுமக்களிடையே விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டார். அப்போது பேசிய அவர் தொகுதியில் தொடர்ந்து சிபிஎம் கட்சிக்கு ஓட்டு போட்டு ஓட்டு போட்டு தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சாடியவர் தன்னை வெற்றி பெற செய்தால் தொகுதிக்கு செய்ய கூடிய திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர் திமுக செய்த தவறுகளை மறைக்கதான் பெண்களுக்கு 5000 ரூபாய் பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டியவர் 5 ஆண்டு நல்லாட்சி கொடுத்த நீங்க எதுக்கு கூப்பன் கொடுக்குறிங்க கூப்புக்கு போய்ர கூடாது தமிழ்நாட்டின் நிரந்தர எதிர்கட்சியாக போய்ர கூடாதுன்னு கூப்பன் தருவதாக திமுக தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்1
- Post by Roman Reigns1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்ட மன்ற தொகுதி அதிமுக கட்சி செயல்வீரர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெத்தினசாமி தலைமையிலும் மாநில கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவணன் முன்னிலையிலும் அதிமுக வேட்பாளர் துரை. சண்முகபிரபுவை அதிமுக நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி அதிமுக சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து உமளாபாடி கிராமத்தைச் சேர்ந்த திமுகவினர் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைந்த அனைவருக்கும் பொன்னாடை போற்றி அதிமுகவின் வரவேற்றனர். கூட்டத்தில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் வேட்பாளராக மகாலிங்கம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் சேத்தியாதோப்பு பகுதி சேர்ந்தவர். தமிழக வெற்றி கழக வேட்பாளர் புவனகிரி தொகுதி மகாலிங்கம் என்பவர் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் அதன் பிறகு வாக்காளர்களுக்கு துண்டு பிரச்சாரம் வழங்கி வாக்கு சேகரித்தார் இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- விராலிமலை சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று பாலசுப்பிரமணியன்., திருவேந்திரன், ரமேஷ், பழனிச்சாமி, பாலவேல் முருகேசன், பாலசுப்ரமணியன், ஜோதிவேல், ஆகியோர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்1
- திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பிரச்சாரம் முடித்துவிட்டு புறப்பட்டு சென்றபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் மீது ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதியது. இதில், காவலரின் கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அங்கு நின்றிருந்த தவெக தொண்டர்கள் அவரை தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.1
- Post by Roman Reigns1