Shuru
Apke Nagar Ki App…
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளியில் 18 ஆண்டுகளாக செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பள்ளி, கடைவீதி அருகில் உள்ளதால் பெண்கள், மாணவிகள் அச்சத்துடன் சென்று வருவதாகவும், மதுப்பிரியர்கள் ஆபாசமாக பேசுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இக்கடையை நிரந்தரமாக மூட அல்லது இடமாற்றம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
Periyasamy
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளியில் 18 ஆண்டுகளாக செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பள்ளி, கடைவீதி அருகில் உள்ளதால் பெண்கள், மாணவிகள் அச்சத்துடன் சென்று வருவதாகவும், மதுப்பிரியர்கள் ஆபாசமாக பேசுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இக்கடையை நிரந்தரமாக மூட அல்லது இடமாற்றம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. கொளுத்தும் கோடை வெயிலால் தவித்திருந்த பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த திடீர் மழை பெரும் மகிழ்ச்சியையும் குளிர்ச்சியான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா வெங்கட் சமுத்திரம் ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக காட்டு யானைகள் பயிர்களை நாசம் செய்துள்ளன. 15க்கும் மேற்பட்ட யானைகள் தென்னை, வாழை, மா மற்றும் தீவனப் பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு தலைமை மருத்துவமனையில் எம்எல்ஏ பழனிச்சாமி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்தார்.1
- திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காலை முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் திடீரென குளிர்ந்த சூழலுடன் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகாவில் உள்ள களிப்பாளையம் முதல் தேக்கலூர் வரையிலான சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் எளச்சிபாளையம் மற்றும் கருவளுர் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ராய நல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி சார்பில் இலவச மருத்துவ மற்றும் உயர் கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இதில், இதய நோய் நிபுணர்கள் கலந்துகொண்டனர். பெற்றோரை இழந்த சில மாணவிகள் உணர்ச்சிவசப்பட்டு அழுதது காண்போரை நெகிழ வைத்தது.1
- தருமபுரி மாவட்டம், துறிஞ்சிப்பட்டியில் பள்ளி, கோயில் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மதுப்பிரியர்களால் பள்ளி செல்லும் பெண் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். 5 மாதங்களுக்கு முன் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், மீண்டும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.1
- சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்தது. பல நாட்களாக வாட்டி வதைத்த வெயில் தணிந்து, திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.1