Shuru
Apke Nagar Ki App…
கார்கூடல்பட்டி ஊராட்சியில் 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல் நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்ப்பட்டி ஊராட்சியில் 128 பயானாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு பொதுமக்களிடம் அரசு திட்டங்கள் குறித்து உரையாடி இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
DHINESH KUMAR
கார்கூடல்பட்டி ஊராட்சியில் 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல் நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்ப்பட்டி ஊராட்சியில் 128 பயானாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு பொதுமக்களிடம் அரசு திட்டங்கள் குறித்து உரையாடி இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்ப்பட்டி ஊராட்சியில் 128 பயானாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு பொதுமக்களிடம் அரசு திட்டங்கள் குறித்து உரையாடி இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மார்ச் 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்று ஊராட்சி அலுவலகம் முன்பு திருமணிமுத்தாறூ இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை அருகில் உள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் பயன்படுத்தி விவசாயத்திற்கு நடைமுறை படுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன நிகழ்வில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்1
- சேலம் அஸ்தம்பட்டி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் நேற்று இரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. காய்ந்த சருகுகளில் தீ வேகமாகப் பரவி, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்புதுறையினர் உடனடியாகத் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர். அவர்களின் துரித நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- பென்னாகரம் அருகே சாலை மீட்டு தர வேண்டி சாலை மறியல் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள்* *போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக கைது செய்த காவல்துறையினர்* தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கடமடை கிராமத்தில் அருகே உள்ள முதுகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த சாலையை மீட்டு தர கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் இதன் காரணமாக நீண்ட நாட்களாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இது குறித்து அரசியல் தலைவர்களிடமும், மாவட்ட ஆட்சியர் வருவாய்த் துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை இந்த பகுதி மக்களுக்கு சாலையை மீட்டு தரக்கோரி எந்த நடவடிக்கையும் இல்லை இதனை கண்டித்து இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த பெரும்பாலை போலீசார் மற்றும் பென்னாகரம் காவல் கண்காணிப்பாளர் மற்றும் பென்னாகரம் போலீசார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பொதுமக்கள் உடன்படவில்லை. மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய்த்துறை அலுவலர்களோ வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் அதை ஏற்காத போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை குண்டு கட்டாக தூக்கி பேருந்தில் ஏற்றி கைது செய்தனர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம் என பகுதி கிராம மக்கள் தெரிவித்துச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..1
- தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரத்தூர் கிராமத்தில் சக்தி வாய்ந்த பழமையான ஓங்காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆனது ஐந்து ஊர் மக்களுக்கு பொதுவானது ஆலமரத்தூர் பெத்தானூர் பூத நாயக்கன்பட்டி சோழி கவுண்டனூர் சாணாரப்பட்டி ரோனி பட்டி ஆகிய கிராமங்களுக்கு சொந்தமான கோவில் இந்த கோயிலில் தை மாத இறுதியில் கொலு வைத்து தொடங்கிய விழாவானது 15 நாட்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடி பூஜை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நாகாவதி ஆற்றங்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் துரம் சக்தி கரகம் பூ கிரகம் அலவு குத்துதல் பம்பை மேல தாளங்கள் முழுங்க ஊர்வலமாக வந்தனர் பிறகு ஓங்காளியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட இருந்த 16 அடி நீளம் கொண்ட தீ குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர் பிறகு பில்லி சூனியம் கண் திருஷ்டி செய்வினை உடல் நலம் சரியில்லாத இருப்பவர்கள் வேண்டிக்கொண்டு தீ குண்டத்தில் உப்பு தெளித்தனர். இதனைத் தொடர்ந்து மாலை ஐந்து ஊர் கிராம மக்கள் சிவன் காளி புலி கரடி உள்ளிட்ட வேடம் அணிந்தும் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் அலங்காரத்தில் மின்னிய ஓங்காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.1
- Post by பெரியசாமி2
- Post by Sangili.v1
- பாப்பாரப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாள் விழா ; பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப்போட்டியின் பரிசளிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் விழா தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் விழாவானது அ.தி.மு.க., வர்த்தக அணி இணை செயலாளர் கேசவன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அதிமுக மாநில விவசாயப்பிரிவு தலைவர் T.R. அன்பழகன், பென்னாகரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி, நகர கழக செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக விருந்தினராக முன்னாள் அமைச்சர் பாலகோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு கோலம் போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார். முன்னதாக ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கேக்வெட்டி கொண்டாடினார், அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை, சுந்தரம், குட்டி, கேசவன், சௌந்தர், புஷ்பராஜ், ராஜி,பாபு ,அப்புசாமி, மகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.1