Shuru
Apke Nagar Ki App…
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் பொன் பாலகணபதி, அறிமுகக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி, கூட்டணி பலம் காரணமாக மானாமதுரை மீண்டும் தங்களுக்கே கிடைக்கும் என்றார். கடந்த தேர்தலை விட அதிக ஆதரவு உள்ளதால் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார். தற்போதைய எம்எல்ஏ மீது மக்கள் அதிருப்தி உள்ளதாக குற்றம்சாட்டினார். வெற்றி பெற்றால் இளையான்குடியில் குடிநீர், சுகாதார பிரச்சனைகள் தீர்க்கப்படும்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க ஐடி நிறுவனங்கள் கொண்டு வரப்படும் என்றார்.
Santhosh Kumar V
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் பொன் பாலகணபதி, அறிமுகக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி, கூட்டணி பலம் காரணமாக மானாமதுரை மீண்டும் தங்களுக்கே கிடைக்கும் என்றார். கடந்த தேர்தலை விட அதிக ஆதரவு உள்ளதால் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார். தற்போதைய எம்எல்ஏ மீது மக்கள் அதிருப்தி உள்ளதாக குற்றம்சாட்டினார். வெற்றி பெற்றால் இளையான்குடியில் குடிநீர், சுகாதார பிரச்சனைகள் தீர்க்கப்படும்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க ஐடி நிறுவனங்கள் கொண்டு வரப்படும் என்றார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் பொன் பாலகணபதி, அறிமுகக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி, கூட்டணி பலம் காரணமாக மானாமதுரை மீண்டும் தங்களுக்கே கிடைக்கும் என்றார். கடந்த தேர்தலை விட அதிக ஆதரவு உள்ளதால் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார். தற்போதைய எம்எல்ஏ மீது மக்கள் அதிருப்தி உள்ளதாக குற்றம்சாட்டினார். வெற்றி பெற்றால் இளையான்குடியில் குடிநீர், சுகாதார பிரச்சனைகள் தீர்க்கப்படும்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க ஐடி நிறுவனங்கள் கொண்டு வரப்படும் என்றார்.1
- மதுரை வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவிலில் இன்று (ஏப்.5) காலை 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இத் திருக்கோவிலில் கணபதி யாகத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் , பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் மதுரா பில்டர்ஸ் உரிமையாளர் தர்மராஜ் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.1
- Post by மா.கணேஷ்1
- மணல் கொள்ளையர்களின் மனிதாபிமானம் திண்டுக்கல்லை அடுத்துள்ள மா.மூ.கோவிலூர் அருகே உள்ள அரசு சொந்தமான குளத்தில் அனுமதி இல்லாமல் மணல் கொள்ளையர்கள் 30 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி கிராவல் மண்ணை எடுத்துள்ளனர். சுரங்க பாதை அமைப்பது போன்று மண் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கருவேல மரத்தை விட்டு விட்டு அதை சுற்றி மண்ணை எடுத்துள்ளது இவர்களின் மனிதாபிமான செயலால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.1
- திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோவிலை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். கோவிலை அவர்களிடமிருந்து மீட்டு தரகோரி ஊர்பொதுமக்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும், போராடியும், ஆளும் அரசும், ஆண்ட அரசாங்கமும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் வருகின்ற 23-ம் தேதி அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிக்கின்றோம். இப்படிக்கு ஊர்பொதுமக்கள், சிறுமலை புதூர் நத்தம் சட்டமன்ற தொகுதி1
- திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோவிலை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். கோவிலை அவர்களிடமிருந்து மீட்டு தரகோரி ஊர்பொதுமக்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும், போராடியும், ஆளும் அரசும், ஆண்ட அரசாங்கமும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் வருகின்ற 23-ம் தேதி அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிக்கின்றோம். இப்படிக்கு ஊர்பொதுமக்கள், சிறுமலை புதூர் நத்தம் சட்டமன்ற தொகுதி1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை அதிகமாக புழுக்கமாகவும் அதனைத் தொடர்ந்து மாலை நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு 10:20 மணிக்கு கனமழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது அரைமணி நேரத்திற்கு மேலாக பெய்த காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.1
- தமிழகத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மானாமதுரையில் நேற்று (04.04.2026) விரிவான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வட்டாட்சியர் பங்கேற்பு: மானாமதுரை பழைய யூனியன் அலுவலகத்தில் (விழுதுகள்) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ண குமார் தொடங்கி வைத்தார். இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். முக்கிய நிகழ்வுகள்: * சைகை மொழி உறுதிமொழி: செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் இணைந்து சைகை மொழியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். * முதல்முறை வாக்காளர்களுக்கு கௌரவம்: மாற்றுத்திறனாளிகளில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது. * விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்: தேர்தல் விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கோலாட்டம், விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. * வாகனப் பேரணி: மாற்றுத்திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். * கையெழுத்து இயக்கம்: தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது கையெழுத்துக்களைப் பதிவிட்டு "நிச்சயம் வாக்களிப்போம்" என உறுதி பூண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (DDAWO), வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் இந்த விழிப்புணர்வு முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.2