logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் இருந்து ₹2 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

4 hrs ago
user_RAJA news
RAJA news
Oddanchatram, Dindigul•
4 hrs ago

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் இருந்து ₹2 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

More news from Dindigul and nearby areas
  • தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கட்சித் தொண்டர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் இடும்பன் கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
    1
    தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கட்சித் தொண்டர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் இடும்பன் கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    14 min ago
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி பகுதியில், தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 'வெயில்' மற்றும் 'அங்காடித்தெரு' போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன், இந்தப் புதிய படத்தை இயக்குகிறார்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி பகுதியில், தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 'வெயில்' மற்றும் 'அங்காடித்தெரு' போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன், இந்தப் புதிய படத்தை இயக்குகிறார்.
    user_திருப்புகழ் ரமேஷ்
    திருப்புகழ் ரமேஷ்
    பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    24 min ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட கதிர் நாயக்கன்பட்டி பிரிவு அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி சித்தரேவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சித்தையன் கோட்டை, அய்யம்பாளையம் செல்லும் சாலையில் அமர்ந்து அவர்கள் இந்த சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட கதிர் நாயக்கன்பட்டி பிரிவு அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி சித்தரேவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சித்தையன் கோட்டை, அய்யம்பாளையம் செல்லும் சாலையில் அமர்ந்து அவர்கள் இந்த சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தூர் ஊராட்சியில் உள்ள கதிர் நாயக்கன்பட்டி செம்பட்டி – வத்தலகுண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை எண் 3313-ஐ மூடக் கோரி பொதுமக்கள் திரளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஜெயபாலன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிகழ்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தூர் ஊராட்சியில் உள்ள கதிர் நாயக்கன்பட்டி செம்பட்டி – வத்தலகுண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை எண் 3313-ஐ மூடக் கோரி பொதுமக்கள் திரளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஜெயபாலன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிகழ்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Abbas Abbas
    Abbas Abbas
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • தமிழகம் மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டும் என வலியுறுத்தி தேக்கடியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மும்மதப் பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்தினர். தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணை நீரை நம்பி இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள 14,707 ஏக்கர் இருபோக சாகுபடி நிலங்கள் பெரியாறு அணை நீரையே சார்ந்துள்ளன. இந்த நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து முதல் போக விவசாயத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டிய நிலையில், தண்ணீர் திறக்கப்படவில்லை. ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய பருவமழை ஏமாற்றி வருவதால், முதல் போகத்திற்கு போதுமான தண்ணீர் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.55 அடியாக உள்ளது. இதன் காரணமாக, தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதியில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் ஷட்டர் பகுதியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மற்றும் மேலூர் பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து மழை வேண்டி மும்மதப் பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்தினர். அங்குள்ள ஜெயதுர்க்கை கோவிலில் இந்து மதத்தினர் வருண பகவானுக்கு சிறப்பு பூஜை செய்து, பூஜை செய்யப்பட்ட கலச நீரை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வரும் தேக்கடியிலுள்ள ஷட்டர் பகுதியில் பெரியாற்று நீரில் கலந்தனர். இதேபோல், கிறிஸ்தவ மதத்தினரும் இஸ்லாமிய மதத்தினரும் ஷட்டர் அருகே தங்கள் முறைப்படி மழை வேண்டி பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் மற்றும் மும்மதக் குருமார்கள் கலந்து கொண்டனர்.
    1
    தமிழகம் மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டும் என வலியுறுத்தி தேக்கடியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மும்மதப் பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்தினர். தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணை நீரை நம்பி இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள 14,707 ஏக்கர் இருபோக சாகுபடி நிலங்கள் பெரியாறு அணை நீரையே சார்ந்துள்ளன. இந்த நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து முதல் போக விவசாயத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டிய நிலையில், தண்ணீர் திறக்கப்படவில்லை. ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய பருவமழை ஏமாற்றி வருவதால், முதல் போகத்திற்கு போதுமான தண்ணீர் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.55 அடியாக உள்ளது.

இதன் காரணமாக, தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதியில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் ஷட்டர் பகுதியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மற்றும் மேலூர் பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து மழை வேண்டி மும்மதப் பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்தினர். அங்குள்ள ஜெயதுர்க்கை கோவிலில் இந்து மதத்தினர் வருண பகவானுக்கு சிறப்பு பூஜை செய்து, பூஜை செய்யப்பட்ட கலச நீரை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வரும் தேக்கடியிலுள்ள ஷட்டர் பகுதியில் பெரியாற்று நீரில் கலந்தனர். இதேபோல், கிறிஸ்தவ மதத்தினரும் இஸ்லாமிய மதத்தினரும் ஷட்டர் அருகே தங்கள் முறைப்படி மழை வேண்டி பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் மற்றும் மும்மதக் குருமார்கள் கலந்து கொண்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையப் பிரிவு வரையிலான சாலை, பாரதியார் பள்ளிக்குச் செல்லும் சாலை, மற்றும் ரெங்ககிருஷ்ணா பள்ளிக்குச் செல்லும் சாலைகள் நீண்ட நாட்களாக மோசமான நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் புதிய தார் சாலை அமைக்கக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பேரில் நகராட்சி நிர்வாகம் சாலை அமைக்க ஒப்பந்தம் செய்தது. தற்போது இந்தச் சாலைகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இரவு நேரத்தைப் பயன்படுத்தி அவசர அவசரமாக, தரமற்ற முறையில் இந்தச் சாலைகள் அமைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிக வாகனப் போக்குவரத்து உள்ள இந்தச் சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்பட்டால் மீண்டும் குண்டும் குழியுமாக மாறும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அமைக்கப்படும் புதிய சாலையை ஆய்வு செய்து, தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையப் பிரிவு வரையிலான சாலை, பாரதியார் பள்ளிக்குச் செல்லும் சாலை, மற்றும் ரெங்ககிருஷ்ணா பள்ளிக்குச் செல்லும் சாலைகள் நீண்ட நாட்களாக மோசமான நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் புதிய தார் சாலை அமைக்கக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பேரில் நகராட்சி நிர்வாகம் சாலை அமைக்க ஒப்பந்தம் செய்தது.

தற்போது இந்தச் சாலைகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இரவு நேரத்தைப் பயன்படுத்தி அவசர அவசரமாக, தரமற்ற முறையில் இந்தச் சாலைகள் அமைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிக வாகனப் போக்குவரத்து உள்ள இந்தச் சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்பட்டால் மீண்டும் குண்டும் குழியுமாக மாறும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அமைக்கப்படும் புதிய சாலையை ஆய்வு செய்து, தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவில் வசித்து வரும் 68 வயதான ஜெயலெட்சுமி, தனது இளைய மகள் புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். மாலை நேரத்தில் மூத்த மகள் கார்த்தியாவைப் பார்ப்பதற்காக விராலிமலை சாலையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டு, இளைய மகளுடன் வீடு திரும்பி உள்ளார். விராலிமலை சாலையிலிருந்து வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 சவரன் எடையுள்ள கல் முகப்பு சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அருகில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொருவருடன் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், எஸ்ஐ கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து, தப்பி ஓடியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மணப்பாறை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவில் வசித்து வரும் 68 வயதான ஜெயலெட்சுமி, தனது இளைய மகள் புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். மாலை நேரத்தில் மூத்த மகள் கார்த்தியாவைப் பார்ப்பதற்காக விராலிமலை சாலையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டு, இளைய மகளுடன் வீடு திரும்பி உள்ளார்.

விராலிமலை சாலையிலிருந்து வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 சவரன் எடையுள்ள கல் முகப்பு சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அருகில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொருவருடன் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், எஸ்ஐ கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து, தப்பி ஓடியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மணப்பாறை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், தங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த மாங்காய்களை குப்பையில் கொட்டி அழித்துள்ளனர். இதனால், மாங்காய்கள் அனைத்தும் வீணாகி குப்பையில் குவிந்தன. இல்லாதவர்களுக்கு ஒரு ரூபாய் விலைக்குக் கூட கொடுத்து வைத்திருக்கலாமே என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், தங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த மாங்காய்களை குப்பையில் கொட்டி அழித்துள்ளனர். இதனால், மாங்காய்கள் அனைத்தும் வீணாகி குப்பையில் குவிந்தன. இல்லாதவர்களுக்கு ஒரு ரூபாய் விலைக்குக் கூட கொடுத்து வைத்திருக்கலாமே என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.