Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி த வெ க போஸ்டர் விவகாரம் காங்கிரஸ் கட்சி பதிலடி தூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நாளைய பிரதமர் விஜய் என்ற சுவரொட்டி நகர் முழுவதும் ஓட்டப்பட்டன. இது காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி இது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்கள் தங்கள் இறப்பை காட்டிக் கொள்வதற்காக செய்த முயற்சி என்று கூறினார்.
Mithun
தூத்துக்குடி த வெ க போஸ்டர் விவகாரம் காங்கிரஸ் கட்சி பதிலடி தூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நாளைய பிரதமர் விஜய் என்ற சுவரொட்டி நகர் முழுவதும் ஓட்டப்பட்டன. இது காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி இது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்கள் தங்கள் இறப்பை காட்டிக் கொள்வதற்காக செய்த முயற்சி என்று கூறினார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளை சிலர் தவெக அமைச்சர் பெயரை சொல்லி ஒப்பந்ததாரர்களை மிரட்டி வருகின்றனர் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு. தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துணை மேயர் ஜெனிட்டா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, ஆட்சி மாறினாலும் எங்கள் பணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பக்கிள் ஓடை அகலப்படுத்தப்பட்டு மழைக்காலங்களில் சுமார் 2 லட்சம் கன அடி நீர் கடலுக்கு வெளியேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் திமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு மாறிய மாநகராட்சி கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் மாநகராட்சி மேயரிடம் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தில் தற்போதைய அமைச்சர் மதன்ராஜ் பெயர் இடம் பெறவில்லை என கூறி தமிழக வெற்றி கழக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளதாக தெரிவித்தார். உடனே தமிழக வெற்றி கழக கவுன்சிலர் ராமர், அத்திமரப்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட கட்டிடத்தில் அமைச்சர் மதன்ராஜ் பெயர் இல்லை என தெரிவித்தார். அதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அந்த கட்டிடம் முன்னாள் ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிதியிலிருந்து கட்டப்பட்டது. அமைச்சர் மதன்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை ஒரு நிதி கூட வழங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அமைச்சர் பெயர் எப்படி போட முடியும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழக கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே மேயர் முன்பாக வாக்குவாதம் நடைபெற்றதால் அந்தப் பகுதியில் கூச்சக் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தருவைகுளம் செல்லும் வழியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மரங்கள் நடப்பட்டு காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். அதில் மேயர் பெயர் போடவில்லை நாங்கள் என்ன குற்றமா சொல்கிறோம். மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார் அதிலும் என்னுடைய பெயர் போடவில்லை என தெரிவித்தார். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் தற்போது அமைச்சரை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் இதற்கு முன்பு வேலை பார்த்த அதிகாரிகள் தற்போது அமைச்சர் பெயரைச் சொல்லி தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை மிரட்டியும் வருகின்றனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சம்பவத்தால் மாந்கராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.4
- தூத்துக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது 🚨 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்! 📍 தூத்துக்குடி | ஆக. 28 தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.1
- தூத்துக்குடி த வெ க போஸ்டர் விவகாரம் காங்கிரஸ் கட்சி பதிலடி தூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நாளைய பிரதமர் விஜய் என்ற சுவரொட்டி நகர் முழுவதும் ஓட்டப்பட்டன. இது காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி இது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்கள் தங்கள் இறப்பை காட்டிக் கொள்வதற்காக செய்த முயற்சி என்று கூறினார்.1
- தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் அவசர பழுதுநீக்கும் பணிகள் காரணமாக நாளை (மே 16) சனிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (16.05.2026) சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து மின் நிறுத்தம் செய்யபடும் பகுதிகள் முத்தையாபுரம், தோப்புத்தெரு, வடக்குதெரு, பாரதிநகர், முள்ளகாடு,அத்திமரப்பட்டி,பொட்டல்காடு, அனல்மின்நகர் பகுதி, அபிராமிநகர், கேம்ப்,சுற்றியுள்ள பகுதிகள்,சுனாமிநகர், கேம்ப்,சவேரியார்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக, விரநாயக்கன் தட்டு. குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டுள்ளது.1
- ஓட்டப்பிடாரம் அருகே கால்நடை மேய்ச்சல் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வீரன் சுந்தரலிங்கம்நகர் ஊர் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியில் 1997 ஆம் ஆண்டு எஸ்சி., எஸ்டி சட்டத்தின் படி அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஆதி திராவிட நலத்துறை மூலம் குடியிருப்பு மனை பட்டா வழங்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீரன்லிங்கம் நகர் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மேய்ச்சல் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறி இன்று வீரன் சுந்தரலிங்கம்நகர் ஊர் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் கூறுகையில், ஓட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள நிலத்தை இங்குள்ள விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று அதனை மேச்சல் தரையாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு மோசடி பேர்வழிகளால் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மோசடி செய்து மேற்கண்ட நிலத்தை தற்போது முள்வேலி அமைத்துள்ளனர். மேலும் அந்த வழியாகத்தான் வீரன் சுந்தரலிங்கம் நகருக்கு குடிநீர் பைப் லைனும் செல்கிறது. அந்த பைப் லைனையும் உடைத்து விட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு ஜாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே மேற்கண்ட தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்த நிலத்தை, எஸ்சி., எஸ்டி சட்டத்தின் படி மேற்படி விவசாயிகள் மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வந்த நிலத்தை கையகப்படுத்தி வீரன் சுந்தரலிங்கம் நகரை சேர்ந்த மக்களுக்கே இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். வட்டாட்சியரும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாகவும் கூறினார்1
- தாமிரபரணி ஆற்றில்சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான சோதனை *தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க புதிய தொழில்நுட்பம் பயண்பட்டுத்த திட்டம்.பத்தமடையில் சோதனை அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் 2 மாதங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான சோதனை இன்று நடைபெற்றது* தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக விளங்கி வரும் தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. சுமார் 134 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இந்த ஆற்றில் 58 இடங்களில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து ஆறு மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றமும் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு யூனிசென் என்ற தனியார் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின் வேதியியல் அடிப்படையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை செயல்விளக்கம் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் மையப்பகுதியில் நடைபெற்றது. இதனை நெல்லை மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயல்படுத்த பத்தமடை பேரூராட்சியை தேர்வு செய்துள்ளார். இதற்காக தனியார் நிறுவனத்தின் சொந்த பங்களிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தேசிய பசுமை தீர்ப்பாய விதிமுறைகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், கழிவுநீரில் உள்ள அமோனியல் நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை குறைக்கும் வகையிலான சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, முதற்கட்டமாக ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் பத்தமடை பேரூராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக யூனிசென் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- கடம்பூரில் சீனிவாச பெருமாள் கோயில் வருஷாபிசேக விழா நடைபெற்றது கடம்பூர் ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி ஸ்ரீ கோதா சமேத ஶ்ரீ மகா ஸ்ரீ சீனிவாசகம் பெருமாள் கோயில் வருஷாபிஷேகம் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் .கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி ஸ்ரீ கோதா சமேத ஶ்ரீ மகா ஸ்ரீ சீனிவாசகம் பெருமாள் கோயில் வருஷாப்பிஷேகத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.பின்னர் திருப்பள்ளியெழுச்சி பூஜையும், நித்திய பூஜையும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் பல்வேறு ஹோம்கள் நடை பெற்று கும்பகலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டடன.பூஜைகளைதொடந்து மேள தாளம் முழங்க கடம் புறப்பட்டு கோயில் மூன்று முறை வலம் வந்து ஸ்ரீ மகா ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஸ்ரீ சௌந்தர்யா பத்மாவதி மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ மகா ஸ்ரீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மற்றும் விநாயகர் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பரிவாரமூர்த்தககளுக்கு மஞ்சள் பொடி மாபொடி திரவியம் பால் தயிர் இளநீர் தேன் சந்தனம் வாசனை உட்பட 21 திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது . இவ்விழாவில் திருக்குறுங்குடி ஜீயர் மடம்மடாதிபதி 50வது பட்டம் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீ ஸ்ரீ பேரருளானராமானுஐ ஜீயர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு மங்களாசாஸனம் செய்தருளி அனுக்ரஹ பாஷணம் செய்த அருளாசி வழங்கினார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.4
- தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் திமுக த வெ க கவுன்சிலர்கள் மோதல் கூச்சல் குழப்பம் தூத்துக்குடி மாநகராட்சியில் வேலை பார்த்த அதிகாரிகள் சிலர் அமைச்சர் பெயரை சொல்லி ஒப்பந்ததாரர்களை மிரட்டி வருகின்றனர் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டதில் தற்போதைய அமைச்சர் பெயர் எப்படி போட முடியும் அமைச்சர் மதன்ராஜ் ஒரு பைசா கூட தூத்துக்குடி மாநகராட்சிக்கு வழங்கவில்லை என மேயர் ஜெகன் பெரியசாமி குற்றச்சாட்டு தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் ஆட்சி மாறினாலும் எங்கள் பணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார் தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் பக்கீல் ஓடை அகலப்படுத்தப்பட்டு மழைக்காலங்களில் சுமார் 2 லட்சம் கன அடி நீர் கடலுக்கு வெளியேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் இன்னும் 50 ஆண்டுகளுக்கு தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காய் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் திமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு மாறிய மாநகராட்சி கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் மாநகராட்சி மேயரிடம் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போதைய அமைச்சர் மதன்ராஜ் பெயர் இடம் பெறவில்லை என கூறி தமிழக வெற்றி கழக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதைத் தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளனர் என தெரிவித்தார் உடனே தமிழக வெற்றி கழக கவுன்சிலர் ராமர் அத்திமரப்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட கட்டிடத்தில் அமைச்சர் மதன்ராஜ் பெயர் இல்லை என தெரிவித்தார் அதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அந்த கட்டிடம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிதியிலிருந்து கட்டப்பட்டது அமைச்சர் மதன்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை ஒரு நிதி கூட வழங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார் அப்படி இருக்கும்போது அமைச்சர் பெயர் எப்படி போட முடியும் என தெரிவித்தார் இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழக கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே மேயர் முன்பாக வாக்குவாதம் நடைபெற்றதால் அந்தப் பகுதியில் கூச்சக் குழப்பம் நிலவியது இதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தருவைகுளம் செல்லும் வழியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மரங்கள் நடப்பட்டு காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது ஆனால் கடந்த வாரம் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள் அதில் மேயர் பெயர் போடவில்லை நாங்கள் என்ன குற்றமா சொல்கிறோம் மேலும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார் அதிலும் என்னுடைய பெயர் போடவில்லை என தெரிவித்தார் மேலும் அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் தற்போது அமைச்சரை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார் மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் இதற்கு முன்பு வேலை பார்க்க அதிகாரிகள் தற்போது அமைச்சர் பெயரைச் சொல்லி தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை மிரட்டியும் வருகின்றனர் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது1