Shuru
Apke Nagar Ki App…
வினாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரி சீனிவாச காலனி மகாராஜா வடிவில் எழுந்தருளிய நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராஜா கணபதி சிலைக்கு சிறப்பு பூஜையில் ஜாதி,மத வேறுப்பாடுகள் இன்றி ஏராளமான மக்கள் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வழக்கம் போல விநாயகர் சதூர்த்தி விழா சாலையோரம், குடியிருப்பு பகுதிகள், கோயில்கள் என பல்வேறு இடங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது,
FAYAZ
வினாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரி சீனிவாச காலனி மகாராஜா வடிவில் எழுந்தருளிய நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராஜா கணபதி சிலைக்கு சிறப்பு பூஜையில் ஜாதி,மத வேறுப்பாடுகள் இன்றி ஏராளமான மக்கள் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வழக்கம் போல விநாயகர் சதூர்த்தி விழா சாலையோரம், குடியிருப்பு பகுதிகள், கோயில்கள் என பல்வேறு இடங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது,
More news from தமிழ்நாடு and nearby areas
- வினாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரி சீனிவாச காலனி மகாராஜா வடிவில் எழுந்தருளிய நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராஜா கணபதி சிலைக்கு சிறப்பு பூஜையில் ஜாதி,மத வேறுப்பாடுகள் இன்றி ஏராளமான மக்கள் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வழக்கம் போல விநாயகர் சதூர்த்தி விழா சாலையோரம், குடியிருப்பு பகுதிகள், கோயில்கள் என பல்வேறு இடங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது,1
- தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் 118-வது அண்ணா பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக தர்மபுரி 4 ரோடு பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு நகர செயலாளர்கள் நாட்டான் மாது .கௌதம். தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தடங்கம் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன். மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ண ஏ எஸ் சண்முகம் இளரணி துனை அமைப்பாளர்கள் அசோகன் . வழக்கறிஞர் அசோக் குமார். ஒன்றிய செயலாளர் காவேரி கோட்டைகோவில் அறங்காவலர் குழு தலைவர். சுருளிராஜன். நகர மன்ற உறுப்பினர். மாதேஸ்வரன். நிர்வாகிகள் முல்லைவேந்தன். வெல்டிங் ராஜா. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.1
- தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம், 1,971 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு..! தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம், 1,971 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு..! தருமபுரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் எனப்படும் நேஷனல் லோக் அதாலத் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச அடிப்படையிலும் தீர்த்து வைப்பதற்காக, தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படியும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மட்டுமின்றி அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் உள்ளிட்ட 5 தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் மொத்தம் 9 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகளில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 1,979 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1,870 வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டு, ரூ.12 கோடியே 91 லட்சத்து 89 ஆயிரத்து 214 மதிப்பிலான சமரசத் தொகைக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், வங்கி வாராக்கடன் தொடர்பான 265 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 101 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டு, ரூ.4 கோடியே 67 லட்சத்து 10 ஆயிரத்து 148 மதிப்பிலான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம், மொத்தம் 2,244 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 1,971 வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. இதற்கான மொத்த சமரசத் தொகை ரூ.17 கோடியே 58 லட்சத்து 99 ஆயிரத்து 362 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலம், முத்திரைத்தாள் வாயிலாக செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணத்தை திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும், வழக்கில் தீர்வு காணப்பட்டவுடன் அதற்கான தீர்ப்பு நகல் உடனடியாக வழங்கப்படும். மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது என்பதுடன், இதில் வெற்றி பெற்றவர், தோல்வியடைந்தவர் என்ற நிலை இல்லாமல் இரு தரப்பினரின் சமரசத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படுகிறது. மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறு சட்டப் பிரச்சனைகளுக்கும் மக்கள் நீதிமன்றத்தை அணுகினால், அவற்றையும் விசாரித்து நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், நீதித்துறை ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1
- திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு! திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக அரசின் நூறு நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வனத்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ரஞ்சித் குமார் கலந்து கொண்டு நூறு நாள் சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்: ஒருவர் கட்சியை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த வரலாறு அது தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தான் பொறுத்தும் என்றார், மேலும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்ன நினைத்தாரோ அதை தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், அதனால் தான் அவரை எம்ஜிஆரின் வாரிசாக தமிழக மக்களும், நானும் பார்க்கிறேன், தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பதவியை நாம் தான் கைப்பற்றுவோம், மேலும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பேசினார், இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முனிசாமி, நவீன்குமார், ஒன்றிய செயலாளர்கள் முருகன், பெரியசாமி, நிர்வாகிகள் மணிகண்டன், குமார், டாக்டர் வினோதினி, திருப்பதி, மனோகரன், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.3
- தனியார் கல்லூரி வாகனம் லாரியின் மீது மோதி விபத்து 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்1
- மாற்றுக் கட்சியில் இணையும் முன்னாள் பாமக எம்எல்ஏ அருள்! சேலத்தில் பரபரப்பு... சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், தான் விரைவில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் மிகப்பெரிய அரசியல் இயக்கத்தில் சேர்ந்து அரசியல் பணி செய்ய உள்ளதாகவும், தன்னோடு இது நாள் வரை தோளோடு தோள் கொடுத்து பயணித்த அனைவருக்கும் பதவியை பெற்று தருவேன், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும், தேர்தலுக்கு இன்னும் பல காலங்கள் உள்ளதால் பொறுமையுடன் தனது அறிவிப்பை அனைவரும் இயக்கத்தக்க வகையில் வெளியிடுவேன் என முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.1
- ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... ராசிபுரம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....1
- அதிமுக கட்சியின் சார்பில் 118-வது அண்ணா பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது1