Shuru
Apke Nagar Ki App…
தனியார் கல்லூரி வாகனம் லாரியின் மீது மோதி விபத்து 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்
G Krishnan
தனியார் கல்லூரி வாகனம் லாரியின் மீது மோதி விபத்து 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்
More news from தமிழ்நாடு and nearby areas
- பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்த நாள் விழா தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கப்பட்டது தர்மபுரி செப் 15 தமிழகமெங்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இன்று தர்மபுரியில் திமுக கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே ராஜகோபால் பூங்கா அருகில் இருந்து ஊர்வலமாக வந்து பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ ஊர்வலமாக வந்து நான்கு ரோட்டில் அமைந்துள்ள பேரரசு அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு சிலைக்கு தர்மபுரி திமுக நகர செயலாளர்கள் நாட்டான் மாது .கௌதம். தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தடங்கம் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன். மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ண ஏ எஸ் சண்முகம் இளரணி துனை அமைப்பாளர்கள் அசோகன் . வழக்கறிஞர் அசோக் குமார். ஒன்றிய செயலாளர் காவேரி கோட்டைகோவில் அறங்காவலர் குழு தலைவர். சுருளிராஜன். நகர மன்ற உறுப்பினர். மாதேஸ்வரன். நிர்வாகிகள் முல்லைவேந்தன். வெல்டிங் ராஜா. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.1
- சேலம் ஜான்சன் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா! தவெக மாநில மகளிர் அணி நிர்வாகி பங்கேற்பு..... சேலம் ஜான்சன் நகர் எட்டாவது கிழக்கு வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கணபதி ஆலயத்தில், இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மகளிர் அணி இணை செயலாளர் பிரியா விஜய் தமிழன் பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வணங்கினர்.2
- தமிழக கட்சி கழகம் 100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா அமைச்சர் ! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா ஆதியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தமிழக வெற்றிக்கழக 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சிகள் இணையம் விழா திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக்கழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் பல்வேறு அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் மாற்றுக் கட்சியின் விலகி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்கள்.2
- மொஞ்சனூர் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பதில் இருதரப்பினர் வாக்குவாதம் – 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த மொஞ்சனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த வினோத் தரப்பினர் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்று மாரியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். இதனிடையே, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மோகன் தலைமையிலான மற்றொரு தரப்பினர், முறையான அனுமதி பெறாமல் தாங்கள்தான் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்போம் என தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி அண்ணாதுரை, திருச்செங்கோடு ஏஎஸ்பி அஸ்வினி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், சுதா, கோமதி ஆகியோர் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து வினோத் தரப்பினர் அருகிலுள்ள பட்டா நிலத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். மோகன் தரப்பினர் முறையான அனுமதி இல்லாததால் விநாயகர் சிலை வைக்கவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மொஞ்சனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.1
- வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராக்கெட் விறகு அடுப்புக்கு மாறும் கடை உரிமையாளர்கள் இராசிபுரம் : கேஸ் தட்டுப்பாடு மற்றும் வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கேஸ் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வின் காரணமாக, மாற்று சமையல் முறைகளை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்வால் உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ராக்கெட் விறகு அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விறகு மூலம் இயங்கும் இந்த அடுப்பில், விறகை எரிப்பதுடன் மோட்டார் மூலம் காற்றை செலுத்தும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண விறகு அடுப்பை காட்டிலும் தீ அதிக வீரியத்துடன் எரிவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளை தயாரித்து வரும் சங்கர் கணேஷ் கூறுகையில், வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ராக்கெட் விறகு அடுப்புகளுக்கான உற்பத்தி அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய கேஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகளவில் தங்களை அணுகி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் அடுப்புகளை தயாரித்து வருவதாகவும் கூறினார். ஒரு அடுப்பை முழுமையாக தயாரிக்க சுமார் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என்றும், பயன்பாடு மற்றும் அளவைப் பொறுத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த அடுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்காக அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வரும் நிலையில், கேஸ் விலை உயர்வுக்கு மாற்றாக குறைந்த செலவில் விறகை பயன்படுத்தி சமையல் செய்யக்கூடிய இந்த அடுப்பு மீதான வணிகர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.1
- ஆத்தூரில் தங்க கவசத்தில் அருள் பாலித்த வெள்ளப் பிள்ளையார். சேலம் மாவட்டத்தில் உள்ள, ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோயிலில் இன்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் முன்னதாக பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கவசம் சாற்றப்பட்டு, பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றது. பின்னர் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு தங்க கவசத்தில் வெள்ளப் பிள்ளையார் அருள் பாலித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி என்பதால் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகரித்து வருகிறது.2
- அதிமுக கட்சியின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118-வது பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தர்மபுரியில் அதிமுக சார்பில் பெரியார் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக சென்று நான்கு ரோட்டில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் டி ஆர் அன்பழகன் அசோகன் தலைமையில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது கட்சித் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இதில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் என்று கட்சி தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில்.. அதிமுக கழக இணை செயலாளர் டி கே ராஜேந்திரன் அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல். ஒன்றிய கழக செயலாளர் என் ஜி ஏ சிவ பிரகாசம் பழனி, மதிவாணன் முன்னாள் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி. . தர்மபுரி நகர துணை செயலாளர். அறிவொளி. அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அருள்சாமி. நகர மன்ற உறுப்பினர்கள். சத்யா கார்த்திக் தேவா செந்தில். மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.1
- விநாயகர் சதுர்த்தியில் மத நல்லிணக்கம் – விநாயகருக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் கற்பூர ஆரத்தி தருமபுரியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விநாயகர் சிலைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தருமபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதனிடையே, தருமபுரி ராஜகோபால் கவுண்டர் தெருவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. மோட்டார் மெக்கானிக் சங்கம் மற்றும் விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கலந்து கொண்டு விநாயகர் சிலைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டார். மதங்களை கடந்து சகோதரத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வை அப்பகுதி மக்கள் வரவேற்றனர். இதில் ஏராளமான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். இதேபோல் தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.1
- பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா: 300-க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கல்... ராசிபுரம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா ராசிபுரம் நகரம் 23-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் ஆலோசனைப்படி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மா. கார்த்திக் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் காலை உணவுவழங்கப்பட்டது.1