Shuru
Apke Nagar Ki App…
தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது
King
தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது
More news from தமிழ்நாடு and nearby areas
- குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.அதில், 2021சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் 68% வாக்குகளும், 2024 பாராளுமன்றத் தேர்தலில் 64சதவீதத்திற்கு குறைவாக வாக்களித்துள்ளனர். நடைபெற இருக்கின்ற தேர்தலில் 18 வயது நிரம்பிய இளம் மற்றும் முதல் வாக்காளர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.1
- ஐ லவ் யூ டி திவ்யா #vlog #food #funny #duet #backgroundmusic #reelremix #popularsong #melodiousvoice1
- தேர்தல் நடைமுறைஅமல் -பொதுமக்கள் மனுக்கள் வாங்க மனுப் பெட்டி ரெடி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதுவழக்கம். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் தேர்தல் விதிமுறை உள்ளவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள மனு பெட்டியில் தங்கள் மனுக்களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன1
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவிடுகின்றனர் அதன் ஒரு பகுதியாக மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் டோல்கேட்டில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தில் வந்த பறக்கும் படை அலுவலர் ராஜாராம் தலைமையில் இரண்டு உதவி அலுவலர்கள் ஒரு வீடியோ பதிவாளர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அணியினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேனியில் இருந்து மதுரை செல்லும் இருசக்கர வாகனம் கார் சரக்கு வாகனம் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி காருக்குள்ளாகவும் காரின் பின்புற டிக்கியிலும் காரில் உள்ளவர்களின் பைகளிலும் தேர்தல் விதிமுறைப்படி ஐம்பதாயிரம் மேற்பட்ட ரொக்க பணம் மேலும் 10,000 மேற்பட்ட பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர் . இதேபோன்று ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளின் மூன்று அணிகளாக பறக்கும் படையினர் தீவிர சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து இன்று பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- *சக்கிமங்கலத்தில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து - 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்* மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சியில் மதுரை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது. குடோன் உரிமையாளர் சக்தி வெளியூர் சென்றிருந்த நிலையில் அருகில் வயல்வெளியில் எரிந்து கொண்டிருந்த தீ ஆனது காற்றுக்கு மளமளவென பரவி குடோனில் பற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக பற்றி எரிந்த தீ குடோன் முழுவதுமாக எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்தது. இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் உத்தரவின்படிசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வெங்கடேசன், அசோக்குமார் மற்றும் SSO கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நான்கிருக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளை வரவைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குடவுன் முழுவதும் எரிந்து தீக்கிரையாகி விட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. எரிந்த பொருட்களின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என குடோன் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் முகமது இஸ்ரத் சார்பு ஆய்வாளர்கள் மணிமாறன் தமிமுன்அன்சாரி கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் பாபு வருவாய் ஆய்வாளர் வீரசெழியன் சத்தியமங்கலம் ஊராட்சி செயலாளர் திருமூர்த்தி தலையாரி துரைராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து சுலைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்4
- மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல் மதுரை, மார்ச் 16 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.3
- தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது1
- தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்தில் அரசின் சாதனை குறித்த விளம்பரங்கள் இடம் பெற்று இருந்த நிலையில் அதனை ஊழியர்கள் பேப்பர் ஒட்டி மறைத்தனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.1
- *தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி* *5 வாக்காளர்கள் மட்டும் உள்ள வெள்ளிமலை வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்துவதற்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் என பேட்டி* தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சுமார் 40 பறக்கும் படை வாகனங்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது பணம் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் Cvigil என்கிற இணையதளம் மூலம் போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன் தெரிவிக்கப்படும் புகார் குறித்து 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் புகார் கூறும் நபர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் 40 லட்சம் வரை செலவு செய்யப்பட வேண்டும் அது குறித்து தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுத்துவார்கள் தமிழக - கேரளா எல்லையான தேனி இடுக்கி மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு குறித்து இரு மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது தேனி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேல் 6838 வாக்காளர்களும் நூறு வயதுக்கு மேல் 130 வாக்காளர்களும் உள்ளனர் அவர்களுக்கு வாக்கு செலுத்துவதற்கு உரிய வசதி ஏற்படுத்தி தரப்படும் வருஷநாடு வெள்ளிமலை பகுதியில் வசிக்கும் மக்கள் வெளி மாநிலங்களில் வாக்குரிமை வைத்துள்ளார்கள் அவர்களில் 5 பேர் மட்டும் வந்துள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குரிமை உள்ளது அவர்கள் வாக்கு செலுத்துவதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்டத்தில் 2000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துகின்றனர் மேலும் மத்திய துணை ராணுவத்தினரும் ஈடுபடுகிறார்கள் பேட்டி - ரஞ்சித் சிங் (தேனி மாவட்ட ஆட்சியர்)1