logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காரியாபட்டியில் அடுக்கடுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்ததாக கூறி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் முக்குரோடு, அண்ணா நகர், யூனியன் ஆபீஸ் தெரு, முத்தாலம்மன் கோவில் தெரு, சின்ன காரியாபட்டி, செவல்பட்டி, பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த வாக்கு சேகரிப்பு கூட்டங்களில் உள்ளூர் மக்கள், கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டங்களுக்கு வந்த அமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொன்னாடை அணிவித்தும், மாலை அணிவித்தும், பூக்கொத்துகள் வழங்கியும், கும்ப மரியாதை செய்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செய்ததும் குறிப்பிடத்தக்கது. பின்னர் பொதுமக்களிடம் உரையாற்றிய தங்கம் தென்னரசு, திமுக ஆட்சிக்காலத்தில் காரியாபட்டி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். குறிப்பாக வருவாய்த்துறை அலுவலகம், யூனியன் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் உருவாக்கப்பட்டதையும், அரசு போக்குவரத்து பணிமனை அமைக்கப்பட்டதையும், பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்பட்டதையும் அவர் நினைவூட்டினார். மேலும், வைகை நதியிலிருந்து குடிநீர் வழங்கும் கூட்டு குடிநீர் திட்டம் சுமார் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு, காரியாபட்டி பேரூராட்சிக்கு நீண்டநாள் குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதோடு, மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவச அல்லது சலுகை பயண வசதிகள் வழங்கப்பட்டு, அதன் செலவுகளை அரசு ஏற்றுக்கொண்டு வருவதாகவும், பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் விளக்கினார். இறுதியாக, மேற்கொண்டுள்ள வளர்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல திமுக வேட்பாளராக தன்னை ஆதரித்து வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

9 hrs ago
user_குமார்
குமார்
Kariapatti, Virudhunagar•
9 hrs ago
c98fe6b2-5ed3-47d3-9d51-65e99770cf07

காரியாபட்டியில் அடுக்கடுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்ததாக கூறி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும்

26a19d2d-3d99-4c02-8bf8-5c9931342622

வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் முக்குரோடு, அண்ணா நகர், யூனியன் ஆபீஸ் தெரு, முத்தாலம்மன் கோவில் தெரு, சின்ன காரியாபட்டி, செவல்பட்டி, பெரியார் நகர் உள்ளிட்ட

5f8c4e31-5516-4245-9201-142307a5a1f9

பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த வாக்கு சேகரிப்பு கூட்டங்களில் உள்ளூர் மக்கள், கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டங்களுக்கு வந்த அமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக

6513ad21-2e9b-4564-b049-74bb43ac04c7

வரவேற்பு அளித்தனர். பொன்னாடை அணிவித்தும், மாலை அணிவித்தும், பூக்கொத்துகள் வழங்கியும், கும்ப மரியாதை செய்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செய்ததும் குறிப்பிடத்தக்கது. பின்னர் பொதுமக்களிடம் உரையாற்றிய தங்கம்

bac03db8-c47d-4e54-b2a1-5f9e8cccdc1d

தென்னரசு, திமுக ஆட்சிக்காலத்தில் காரியாபட்டி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். குறிப்பாக வருவாய்த்துறை அலுவலகம், யூனியன் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் உருவாக்கப்பட்டதையும், அரசு போக்குவரத்து பணிமனை அமைக்கப்பட்டதையும், பேருந்து

9835d6d1-83ca-45cd-961b-fc40d98847de

நிலையம் விரிவுபடுத்தப்பட்டதையும் அவர் நினைவூட்டினார். மேலும், வைகை நதியிலிருந்து குடிநீர் வழங்கும் கூட்டு குடிநீர் திட்டம் சுமார் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு, காரியாபட்டி பேரூராட்சிக்கு நீண்டநாள் குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில்

7af0a968-ed89-42a7-923b-0c0a7d00d12d

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதோடு, மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவச அல்லது சலுகை பயண வசதிகள் வழங்கப்பட்டு, அதன் செலவுகளை அரசு ஏற்றுக்கொண்டு வருவதாகவும், பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு

8a6a60d2-7506-4487-a775-1391881f4756

திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் விளக்கினார். இறுதியாக, மேற்கொண்டுள்ள வளர்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல திமுக வேட்பாளராக தன்னை ஆதரித்து வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

More news from Tamil Nadu and nearby areas
  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    1
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல்  சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று  இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    12 hrs ago
  • தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய நடைபயணத்தில் கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர், : முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்.ப. சிதம்பரம், எம்.பி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.கார்த்திசிதம்பரம், எம்.பி: திமுக கூட்டணியின் தேமுதிக, SDPI, மனித நேய மக்கள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர நிர்வாகிகள்.கலந்து கொண்டனர், தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். கை சின்னத்திற்கு ஆதரவு: காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி அவர்களுக்கு 'கை' சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் ஏந்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டது, கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    1
    தேவகோட்டை 
யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய  நடைபயணத்தில் கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்,
: முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்.ப. சிதம்பரம், எம்.பி,
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.கார்த்திசிதம்பரம், எம்.பி: திமுக கூட்டணியின்  தேமுதிக, SDPI, மனித நேய மக்கள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர நிர்வாகிகள்.கலந்து கொண்டனர்,
தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக  தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
கை சின்னத்திற்கு ஆதரவு: காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி அவர்களுக்கு 'கை' சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் ஏந்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டது, கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தமிழக வெற்றிக்கழக சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சபரி என்பவருக்கு ஆதரவாக கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா இன்று வடுகபட்டி பகுதியில் பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அப்போது தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை போதைப் பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர் தமிழகம் முழுவதும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதால் இளைஞர்கள் மாணவர்களின் மது பழக்கத்துக்கு அடிமையாகி அவர்கள் வாழ்க்கை சீர்குலைந்துள்ளது திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விசில் சின்னத்துக்கு வாக்களித்து தளபதி விஜய் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்
    1
    தமிழக வெற்றிக்கழக சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சபரி என்பவருக்கு ஆதரவாக கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா இன்று வடுகபட்டி பகுதியில் பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்
அப்போது தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை போதைப் பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர் தமிழகம் முழுவதும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதால் இளைஞர்கள் மாணவர்களின் மது பழக்கத்துக்கு அடிமையாகி அவர்கள் வாழ்க்கை சீர்குலைந்துள்ளது திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விசில் சின்னத்துக்கு வாக்களித்து தளபதி விஜய் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • திண்டுகல் மாவட்டம் ஆண்டி நகர் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆரம்பம் இன்று பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது
    1
    திண்டுகல் மாவட்டம் ஆண்டி நகர் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆரம்பம் இன்று  பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்து கட்சி சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக ஆத்தூர் வடக்கு ஒன்றியம் தமிழக வெற்றிக்கழக வெற்றி வேட்பாளர் நா. கலைச்செல்வியை ஆதரித்து தவெக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர்ML. வாசுதேவன் மற்றும் ஆத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லலித் குமார், தலைமையிலும், ஒன்றிய இணைச் செயலாளர் ராகுல்,ஒன்றிய துணைச் செயலாளர் பிரவீன், நாட்சாயி, கிளைச் செயலாளர்கள், சவேரியார், அலெக்ஸ் பாண்டியன், கில்பர்ட், சம்பத், ராஜபாண்டி, ராகேஷ், குமரேசன், கருப்பையா, நாகராஜ், அவர்கள் முன்னிலையில் பிள்ளையார் நத்தம், பாளையங்கோட்டை காம்பட்டி, கூலம்பட்டி செட்டியபட்டி, முன்னிலை கோட்டை, அரிய நல்லூர், ஆலமரத்துப்பட்டி, வக்கம் பட்டி, பித்தளை பட்டி. பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் வேட்பாளர் நா. கலைச்செல்விக்கு பூர்ண கும்பம் மரியாதை செய்தும் ஆராத்தி எடுத்தும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடி வரவேற்றனர். குறிப்பாக பித்தளைப்பட்டி பகுதியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பாக பித்தளைப்பட்டி பிரிவில் இருந்து காளியம்மன் கோவில் வரை மிகப் பிரம்மாண்டமான வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஒயிலாட்டம் மயிலாட்டம் குரங்காட்டம், மலர் தூவி 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் உலா வந்து விழா மேடைக்கு அழைத்து வந்தனர் . இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். தொடர்ந்து கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நா. கலைச்செல்வி அவர்கள் பேசியதாவது... மாண்புமிகு தமிழக வெற்றி கழக நிறுவனர் அண்ணன் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க,பொதுச் செயலாளர் ஐயா புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுத்திறன் படியும்,திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் ML. வாசுதேவன் அவர்கள் தலைமையில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் எனக்கு இந்த ஆத்தூர் சட்டமன்ற வேட்பாளராக உங்கள் முன் நிற்க உதவி புரிந்த அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்தூர் சட்டமன்றத்தை பொறுத்தவரை பொதுவாக பொதுமக்களிடையே பேசப்படுவது என்னவென்றால் அடிப்படை வசதிகள் இதுவரை ஆட்சியில் இருந்தவர்களும் சரி இதற்கு முன்னர் இருந்தவர்களும் சரி வர செய்து தராமல் பொதுமக்களை அழக்களிப்பு செய்து வந்ததாக நான் கல ஆய்வு மேற்கொள்வது அறிந்து கொண்டேன். எனவே பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் கண்டிப்பாக எங்கள் தளபதியாரின் ஆணைக்கிணங்க அதை நாங்கள் செய்து தருவோம். பொதுமக்களாகிய நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. அது என்னவென்றால் வருகின்ற 23/04/2026 வியாழக்கிழமை அன்று தமிழக மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி விட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டு சாவடிக்கு சென்று ஐந்தாம் எண்ணில் நமது விசில் சின்னம் உள்ளது அதை ஒரு அழுத்தம் அழுத்தி சரியாக நாம் விசில் சின்னத்துக்கு தான் ஓட்டு அளித்துள்ளோமா என்பதை தொலைக்காட்சியில் நேரில் நீங்கள் பார்த்துவிட்டு வந்தால் மட்டும் போதும் அதன்பின் தளபதி விஜய் அவர்கள் அரிய அணையில் முதல்வராக பொறுப்பேற்ற அடுத்த நொடியே உங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தான் அவருடைய முதல் கையெழுத்தாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டில் போதை, கொலை, கொள்ளை போன்ற கலாச்சாரம் தலை விரித்து ஆடுகிறது அதனைக் கட்டுப்படுத்தி பொதுமக்களை காப்பதே நமது தளபதியின் கடமையாக இருக்கிறது எனவே நீங்கள் எல்லாம் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அவர் முதல்வராக வலம் வருவார் என்பதை தெரிவித்துக் கொண்டு நீங்கள் அனைவரும் விசில் சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் என கூறினார்... இந்நிகழ்வில் உடன் தமிழக வெற்றிக்கழக மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்... திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் அழகர்சாமி..
    1
    திண்டுக்கல் மாவட்டம் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்து கட்சி சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக ஆத்தூர் வடக்கு ஒன்றியம் தமிழக வெற்றிக்கழக வெற்றி வேட்பாளர் நா. கலைச்செல்வியை ஆதரித்து தவெக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர்ML. வாசுதேவன் மற்றும் ஆத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லலித் குமார், தலைமையிலும், ஒன்றிய இணைச் செயலாளர் ராகுல்,ஒன்றிய துணைச் செயலாளர் பிரவீன், நாட்சாயி, கிளைச் செயலாளர்கள், சவேரியார், அலெக்ஸ் பாண்டியன், கில்பர்ட், சம்பத், ராஜபாண்டி, ராகேஷ், குமரேசன், கருப்பையா, நாகராஜ், அவர்கள் முன்னிலையில் பிள்ளையார் நத்தம், பாளையங்கோட்டை காம்பட்டி, கூலம்பட்டி செட்டியபட்டி, முன்னிலை கோட்டை, அரிய நல்லூர், ஆலமரத்துப்பட்டி, வக்கம் பட்டி, பித்தளை பட்டி. பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள்  வேட்பாளர் நா. கலைச்செல்விக்கு  பூர்ண கும்பம் மரியாதை செய்தும் ஆராத்தி எடுத்தும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடி வரவேற்றனர். குறிப்பாக பித்தளைப்பட்டி பகுதியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பாக பித்தளைப்பட்டி பிரிவில் இருந்து காளியம்மன் கோவில் வரை மிகப் பிரம்மாண்டமான வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஒயிலாட்டம் மயிலாட்டம் குரங்காட்டம், மலர் தூவி 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் உலா வந்து விழா மேடைக்கு அழைத்து வந்தனர் . இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். தொடர்ந்து கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நா. கலைச்செல்வி அவர்கள் பேசியதாவது... மாண்புமிகு தமிழக வெற்றி கழக நிறுவனர் அண்ணன் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க,பொதுச் செயலாளர் ஐயா புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுத்திறன் படியும்,திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் ML. வாசுதேவன் அவர்கள் தலைமையில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் எனக்கு இந்த ஆத்தூர் சட்டமன்ற வேட்பாளராக உங்கள் முன் நிற்க உதவி புரிந்த அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்தூர் சட்டமன்றத்தை பொறுத்தவரை பொதுவாக பொதுமக்களிடையே பேசப்படுவது என்னவென்றால் அடிப்படை வசதிகள் இதுவரை ஆட்சியில் இருந்தவர்களும் சரி இதற்கு முன்னர் இருந்தவர்களும் சரி வர செய்து தராமல் பொதுமக்களை அழக்களிப்பு செய்து வந்ததாக நான் கல ஆய்வு மேற்கொள்வது அறிந்து கொண்டேன். எனவே பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் கண்டிப்பாக எங்கள் தளபதியாரின் ஆணைக்கிணங்க அதை நாங்கள் செய்து தருவோம். பொதுமக்களாகிய நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. அது என்னவென்றால் வருகின்ற 23/04/2026 வியாழக்கிழமை அன்று தமிழக மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி விட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டு சாவடிக்கு சென்று ஐந்தாம் எண்ணில் நமது விசில் சின்னம் உள்ளது அதை ஒரு அழுத்தம் அழுத்தி சரியாக நாம் விசில் சின்னத்துக்கு தான் ஓட்டு அளித்துள்ளோமா என்பதை தொலைக்காட்சியில் நேரில் நீங்கள்  பார்த்துவிட்டு வந்தால் மட்டும் போதும் அதன்பின் தளபதி விஜய் அவர்கள் அரிய அணையில் முதல்வராக பொறுப்பேற்ற அடுத்த நொடியே உங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தான் அவருடைய முதல் கையெழுத்தாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டில் போதை, கொலை, கொள்ளை போன்ற கலாச்சாரம் தலை விரித்து ஆடுகிறது அதனைக் கட்டுப்படுத்தி பொதுமக்களை காப்பதே நமது தளபதியின் கடமையாக இருக்கிறது எனவே நீங்கள் எல்லாம் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அவர் முதல்வராக வலம் வருவார் என்பதை தெரிவித்துக் கொண்டு நீங்கள் அனைவரும் விசில் சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் என கூறினார்... இந்நிகழ்வில் உடன் தமிழக வெற்றிக்கழக மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்... திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் அழகர்சாமி..
    user_ALL INDIA REPORTER KPA
    ALL INDIA REPORTER KPA
    ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by Subramani Press Reporter Subramani
    1
    Post by Subramani Press Reporter Subramani
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில் பள்ளி வாசல் வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர் பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    3
    கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில்  பள்ளி வாசல் வளாகத்தில்  கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து  தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர்  பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (ஏப்.20) காலை அவர் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது தள்ளுவண்டி கடையில் வடை சுட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குகளை கேட்டார். உடன் திமுக பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்டசெயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (ஏப்.20)  காலை அவர் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது தள்ளுவண்டி கடையில் வடை சுட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குகளை கேட்டார். உடன்  திமுக பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்டசெயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.