logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட தும்மலக்குண்டு பகுதியில் அதிமுக வேட்பாளர் V.P.B. பரமசிவம் கடைசி 10 நிமிடங்கள் உள்ள நிலையில் பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்கி ஓடி சென்று மக்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். அவருக்கு பெண்கள் பாட்டு பாடி, குலவை சத்தமிட்டு மலர்த்துவி வரவேற்றனர்.

8 hrs ago
user_Subramani Press Reporter Subramani
Subramani Press Reporter Subramani
திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
8 hrs ago

வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட தும்மலக்குண்டு பகுதியில் அதிமுக வேட்பாளர் V.P.B. பரமசிவம் கடைசி 10 நிமிடங்கள் உள்ள நிலையில் பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்கி ஓடி சென்று மக்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். அவருக்கு பெண்கள் பாட்டு பாடி, குலவை சத்தமிட்டு மலர்த்துவி வரவேற்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் இந்த ஆண்டு வருகிற மே 1 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கொடியேற்றும் நிகழ்வு ஆண்டுதோறும் கண்ணகி கோவில் மலை அடிவாரத்தில் தமிழகப் பகுதியான கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் நடைபெறுவது வழக்கம். இதனை அடுத்து கடந்த ஆண்டு கண்ணகி கோவில் கொடியேற்றம் இரண்டு இடங்களில் நடைபெற்றது. லோயர் கேம்ப் பளியன் குடி மலையடி வார பகுதியில் தனியார் தோட்டத்தில் ஒரு தரப்பினர் கொடியேற்றினார் அதேபோன்று கம்பம் மங்களதேவி அறக்கட்டளை சார்பில் அவர்களது அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த ஆண்டும் லோயர் கேம்ப் பளியன் குடி வனப்பகுதிக்குள் கொடியேற்றம் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா நடைபெற உள்ளது இதனை அடுத்து கம்பம் மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கான கொடியேற்றும் விழா நடைபெற்றது கண்ணகி உருவம் பொறித்த கொடியுடைய கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதனை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சுமந்து வந்து கொடிமரத்தினை நட்டு மங்களதேவி கண்ணகி புகைப்படம் பதிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது கொடியேற்றத்திற்கு பின்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இந்த நிகழ்வில் ஏராளமான மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் இந்த ஆண்டு வருகிற மே 1 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. 
இதற்காக கொடியேற்றும் நிகழ்வு ஆண்டுதோறும் கண்ணகி கோவில் மலை அடிவாரத்தில் தமிழகப் பகுதியான கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் நடைபெறுவது வழக்கம். 
இதனை அடுத்து கடந்த ஆண்டு கண்ணகி கோவில் கொடியேற்றம் இரண்டு இடங்களில் நடைபெற்றது. 
லோயர் கேம்ப் பளியன் குடி மலையடி வார பகுதியில் தனியார்  தோட்டத்தில் ஒரு தரப்பினர் கொடியேற்றினார்  
அதேபோன்று கம்பம் மங்களதேவி அறக்கட்டளை சார்பில் அவர்களது அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த ஆண்டும் லோயர் கேம்ப்  பளியன் குடி  வனப்பகுதிக்குள் கொடியேற்றம் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை 
இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா நடைபெற உள்ளது  இதனை அடுத்து கம்பம் மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கான கொடியேற்றும் விழா நடைபெற்றது
கண்ணகி உருவம் பொறித்த கொடியுடைய கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதனை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சுமந்து வந்து கொடிமரத்தினை நட்டு மங்களதேவி கண்ணகி புகைப்படம் பதிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது 
கொடியேற்றத்திற்கு பின்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இந்த நிகழ்வில் ஏராளமான மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.
    2
    மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு  தீவிர வாக்கு சேகரிப்பு.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by P.G.m Paintings
    1
    Post by P.G.m Paintings
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • காரைக்குடி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற* *முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர்* எஸ்.மாங்குடி அவர்களை ஆதரித்து தேவகோட்டை அண்ணா அரங்கில் தேர்தல் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எம்பி ,சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்,திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன்,முன்னாள் அமைச்சர் தென்னவன்,திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜோன்ஸ் ரூசோ ,நகர செயலாளர் பெரி.பாலமுருகன்,காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சஞ்சய் ,திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் மற்றும் ஒன்றிய,நகர செயலாளர்கள்,திமுக ,காங்கிரஸ்,தேமுதிக , எஸ் டி பி ஐ,விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    காரைக்குடி சட்டமன்ற தொகுதி  மதச்சார்பற்ற* *முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர்* எஸ்.மாங்குடி அவர்களை ஆதரித்து  தேவகோட்டை அண்ணா அரங்கில் தேர்தல் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எம்பி ,சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்,திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன்,முன்னாள் அமைச்சர் தென்னவன்,திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜோன்ஸ் ரூசோ ,நகர செயலாளர் பெரி.பாலமுருகன்,காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சஞ்சய் ,திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் மற்றும் ஒன்றிய,நகர செயலாளர்கள்,திமுக ,காங்கிரஸ்,தேமுதிக , எஸ் டி பி ஐ,விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • அதன் ஒரு பகுதியாக, இன்று திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.லட்சுமிபுரம், ம.ரெட்டியாபட்டி, புதூர், சிலுக்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் சந்தித்து வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து, அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினார். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள புதிய திட்டங்களையும் பொதுமக்களிடம் பகிர்ந்து, ஆதரவை கோரினார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளையும் கவனமாக கேட்டு, அவற்றை தீர்க்க உறுதி அளித்தார். அவரது வருகையையொட்டி பல இடங்களில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மலர்மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் திரண்டு, உற்சாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் திருச்சுழி தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.
    1
    அதன் ஒரு பகுதியாக, இன்று திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.லட்சுமிபுரம், ம.ரெட்டியாபட்டி, புதூர், சிலுக்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து, அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினார். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள புதிய திட்டங்களையும் பொதுமக்களிடம் பகிர்ந்து, ஆதரவை கோரினார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளையும் கவனமாக கேட்டு, அவற்றை தீர்க்க உறுதி அளித்தார்.
அவரது வருகையையொட்டி பல இடங்களில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மலர்மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் திரண்டு, உற்சாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் திருச்சுழி தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    22 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக லட்சுமி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரப் பணியை மேற்கொண்டு வரும் அவர் இன்று (19.4.2026) திருமயம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக லட்சுமி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரப் பணியை மேற்கொண்டு வரும் அவர் இன்று (19.4.2026) திருமயம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளனர்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு சோத்துப்பாறை சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு வரும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மற்றும் அங்கு உள்ள விளையாட்டு வீரர்களை சந்தித்து குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அதனைத் தொடர்ந்து மார்க்கெட் வீதியில் உள்ள இறைச்சி கடை மற்றும் காய்கறி கடைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார் மேலும் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து தங்கள் வாக்குகளை குக்கர் சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுங்கள் என கை எடுத்து கும்பிட்டு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் இதில் நகரச் செயலாளர்கள் குபேந்திரன், பாலா, நகர்மன்ற உறுப்பினர் மணி வெங்கடேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அபுதாஹிர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிவசுப்பிரமணியன், அதிமுக நகர செயலாளர் பழனியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு சோத்துப்பாறை சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு வரும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மற்றும் அங்கு உள்ள விளையாட்டு வீரர்களை சந்தித்து குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்
அதனைத் தொடர்ந்து மார்க்கெட் வீதியில் உள்ள இறைச்சி கடை மற்றும் காய்கறி கடைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்
மேலும் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து தங்கள் வாக்குகளை குக்கர் சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுங்கள் என கை எடுத்து கும்பிட்டு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்
இதில் நகரச் செயலாளர்கள் குபேந்திரன், பாலா, நகர்மன்ற உறுப்பினர் மணி வெங்கடேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அபுதாஹிர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிவசுப்பிரமணியன், அதிமுக நகர செயலாளர் பழனியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தியும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் காவல் துறையின் சார்பில் மதுரை காவல்துறை காவலர்கள் மற்றும் குஜராத் மாநில ஆயுதப்படை போலீசார், மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து இன்று (ஏப்.19) மாலை தெற்கு வாசல் உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள்.
    1
    தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தியும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் காவல் துறையின் சார்பில் மதுரை காவல்துறை காவலர்கள் மற்றும் குஜராத் மாநில ஆயுதப்படை போலீசார், மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து இன்று (ஏப்.19) மாலை  தெற்கு வாசல் உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் தெற்கு வாசல் பகுதியில்  உள்ள முக்கிய தெருக்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    22 hrs ago
  • சிவகங்கையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கருணாஸ், காளையார் கோவில் தெற்கு ஒன்றியத்தில் , பெரியகண்ணணூர் கிராம பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார், பெரியகண்ணனூரில் திமுக முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் ஆசைத்தம்பி தலைமையில், கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர், வேட்பாளருக்கு பிரம்மாண்ட மாலை வெங்கல வாள் , சால்வைகள் அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். கிராம மக்களின் எழுச்சியான வரவேற்பை ஏற்றுக் கொண்ட கருணாஸ் மாட்டு வண்டியில் ஏறி பெரியகண்ணனூர் கிராமத்தில் சுற்றி வந்து வாக்கு சேகரித்தார், பின்னர் அவர்களிடம் பேசும் பொழுது இந்தத் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் வாய்ப்பளித்ததை வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன், பாசிச சித்தாந்ததின் மூலம் மதத்தின்பால் பிளவு படுத்தி தமிழகத்தில் நுழைய வரும் பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவை வீழ்த்த இந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சட்டமன்ற முதல் கூட்டத்திலே முதல்வரிடம் சிவகங்கை தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிட 4 தொழிற்சாலைகள் அமைக்க பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார் . தமிழக முதல்வரின் எண்ணற்ற திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்த கருணாஸ், இந்த தொகுதியின் மேம்பாட்டுக்கு திட்டங்களுக்கு சட்டமன்றத்தில் உங்கள் குரலாக ஒழித்து உங்களுக்காக பாடுபடுவேன் என்று கிராம மக்களிடம் உறுதியளித்தார்.
    1
    சிவகங்கையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்  கருணாஸ், காளையார் கோவில் தெற்கு ஒன்றியத்தில் ,  
பெரியகண்ணணூர் கிராம பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார்,
பெரியகண்ணனூரில் திமுக முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் ஆசைத்தம்பி தலைமையில்,
கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்,
வேட்பாளருக்கு பிரம்மாண்ட மாலை வெங்கல வாள் , சால்வைகள் அணிவித்து  உற்சாக வரவேற்பளித்தனர். 
கிராம மக்களின் எழுச்சியான வரவேற்பை ஏற்றுக் கொண்ட கருணாஸ் மாட்டு வண்டியில் ஏறி பெரியகண்ணனூர்  கிராமத்தில் சுற்றி வந்து வாக்கு சேகரித்தார்,
பின்னர்  அவர்களிடம் பேசும் பொழுது இந்தத் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் வாய்ப்பளித்ததை வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன், 
பாசிச சித்தாந்ததின் மூலம்  மதத்தின்பால் பிளவு படுத்தி தமிழகத்தில் நுழைய வரும் பாரதிய ஜனதா கட்சி,
அதிமுகவை  வீழ்த்த இந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சட்டமன்ற முதல் கூட்டத்திலே முதல்வரிடம் சிவகங்கை தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிட 4 தொழிற்சாலைகள் அமைக்க பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார் . 
தமிழக முதல்வரின் எண்ணற்ற திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்த கருணாஸ், இந்த தொகுதியின் மேம்பாட்டுக்கு திட்டங்களுக்கு சட்டமன்றத்தில் உங்கள் குரலாக ஒழித்து உங்களுக்காக பாடுபடுவேன் என்று கிராம மக்களிடம் உறுதியளித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.