logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அனைவகுப்பு

5 hrs ago
user_RAJA news
RAJA news
Oddanchatram, Dindigul•
5 hrs ago

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அனைவகுப்பு

More news from Dindigul and nearby areas
  • Post by RAJA news
    1
    Post by RAJA news
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதியில் கோடை வெயிலின் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதியில் கோடை வெயிலின் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by G.thangarasu
    1
    Post by G.thangarasu
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    22 hrs ago
  • கோடை விடுமுறை தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கோடை வெப்பத்தைத் தணிக்க, குளிர்ந்து விழும் விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாகக் குளித்து வருகின்றனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனக்காப்பகப் பாதுகாப்பில் அமைந்துள்ள இந்தச் சுருளி அருவிப் பகுதி, மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், தங்களது இல்லங்களில் இறந்த முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் எள் தீபம் ஏற்றித் தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து, அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில், சுருளி அருவி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால், சுருளி அருவிப் பகுதி தண்ணீர் வரத்தின்றி முற்றிலும் வறண்ட நிலையில் காட்சியளித்து வந்தது. இதனால், கோடை விடுமுறை தினத்தில் சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாகச் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஈத்தக்காடு, அரிசிபாறை, தூவானம் அணை, வெண்ணியாறு மற்றும் ஆற்றுப் படுகைப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு மிதமான தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் நேற்று முதல் அனுமதி அளித்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகை மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால், கோடை விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று சுருளி அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைத்த சூழ்நிலையில், கடந்த இரண்டு தினங்களாகச் சுருளி அருவியில் தண்ணீர் வருவதை அறிந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர். அவர்கள் சில்லென்று ஆர்ப்பரித்து விழும் குளிர்ச்சி கொண்ட தண்ணீரில் மகிழ்ச்சியுடன் குளித்துவிட்டு, அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.
    1
    கோடை விடுமுறை தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
கோடை வெப்பத்தைத் தணிக்க, குளிர்ந்து விழும் விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாகக் குளித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனக்காப்பகப் பாதுகாப்பில் அமைந்துள்ள இந்தச் சுருளி அருவிப் பகுதி, மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.
நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், தங்களது இல்லங்களில் இறந்த முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் எள் தீபம் ஏற்றித் தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து, அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், சுருளி அருவி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால், சுருளி அருவிப் பகுதி தண்ணீர் வரத்தின்றி முற்றிலும் வறண்ட நிலையில் காட்சியளித்து வந்தது. 
இதனால், கோடை விடுமுறை தினத்தில் சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாகச் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஈத்தக்காடு, அரிசிபாறை, தூவானம் அணை, வெண்ணியாறு மற்றும் ஆற்றுப் படுகைப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு மிதமான தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் நேற்று முதல் அனுமதி அளித்தனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகை
மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால், கோடை விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று சுருளி அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைத்த சூழ்நிலையில், கடந்த இரண்டு தினங்களாகச் சுருளி அருவியில் தண்ணீர் வருவதை அறிந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர். 
அவர்கள் சில்லென்று ஆர்ப்பரித்து விழும் குளிர்ச்சி கொண்ட தண்ணீரில் மகிழ்ச்சியுடன் குளித்துவிட்டு, அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    47 min ago
  • கோடை காலம் தொடங்கிய நிலையில் தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான சின்ன சுருளி அருவி கடந்த இரண்டு மாதங்களாக வறண்டு பாறைகளாக காட்சியளித்தது. அதே நேரத்தில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டதால் சின்ன சுருளி அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக மேகமலை வனப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இரண்டு மாதங்களாக வறண்டு காணப்பட்ட சின்னசுருளி அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. வறண்டு காணப்பட்ட சின்னசுருளி அருவியில், நீர்வரத்து தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இனி வரும் நாட்களில் சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உருவாக்கி உள்ளது. வறண்ட சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளதால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அதற்கான முன் ஏற்பாடுகளை வனத்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளதால் சின்ன சுருளி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்படும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் விநியோகமும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    கோடை காலம் தொடங்கிய நிலையில் தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான சின்ன சுருளி அருவி கடந்த இரண்டு மாதங்களாக வறண்டு பாறைகளாக காட்சியளித்தது. அதே நேரத்தில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டதால் சின்ன சுருளி அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக மேகமலை வனப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இரண்டு மாதங்களாக வறண்டு காணப்பட்ட சின்னசுருளி அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது.  வறண்டு காணப்பட்ட சின்னசுருளி அருவியில், நீர்வரத்து தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இனி வரும் நாட்களில் சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உருவாக்கி உள்ளது. வறண்ட சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளதால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அதற்கான முன் ஏற்பாடுகளை வனத்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளதால் சின்ன சுருளி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்படும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் விநியோகமும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முறையாக கொள்முதல் செய்யாமல் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள்  அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாமல் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள நெல் மழை, வெயிலில் வீணாகி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வாடிப்பட்டி கோட்டைமேடு பகுதியில் பல நாட்களாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்முடைகள் கரையான் அரித்தும், மழை வெயிலில் வீணாகி வருவது குறித்தும் தொடர் புகார்கள் எழுந்தன.  இதையறிந்த சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய வெற்றி வேட்பாளருமான மாணிக்கம் கொள்முதல் செய்யாமல் வைக்கப்பட்டுள்ள நெல்லை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட அவர் இப்பகுதியில் முறையாக கொள்முதல் செய்யாமல் குவித்து வைக்கப்பட்டு, வீணாகி வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் எனவும், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது போன்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதில் அதிமுக மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ராஜேஷ் கண்ணா, நகரச் செயலாளர் அசோக் குமார், உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    1
    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முறையாக கொள்முதல் செய்யாமல் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் 
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாமல் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள நெல் மழை, வெயிலில் வீணாகி வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வாடிப்பட்டி கோட்டைமேடு பகுதியில் பல நாட்களாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்முடைகள் கரையான் அரித்தும், மழை வெயிலில் வீணாகி வருவது குறித்தும் தொடர் புகார்கள் எழுந்தன. 
இதையறிந்த சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய வெற்றி வேட்பாளருமான மாணிக்கம் கொள்முதல் செய்யாமல் வைக்கப்பட்டுள்ள நெல்லை நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட அவர் இப்பகுதியில் முறையாக கொள்முதல் செய்யாமல் குவித்து வைக்கப்பட்டு, வீணாகி வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் எனவும், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது போன்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதில் அதிமுக மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ராஜேஷ் கண்ணா, நகரச் செயலாளர் அசோக் குமார், உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகரக் கழகத்தின் சார்பாக மாரியம்மன் கோயில் அருகில் திருச்சி ரோட்டில் பொதுமக்களின் தாகம் தணிப்பதற்கான தண்ணீர் பந்தலில் அமைக்கப்பட்டு தண்ணீர் மற்றும் மோர்,தர்பூசணி வழங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். பின்னர் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பரிபட்டம் கட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் நகரக் கழகச் செயலாளர் மு.மா. செல்வம் மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் பி எல் கிருஷ்ண கோபால், மனித நேயம் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் சபியுல்லா , அறங்காவலர் வீரமணி மற்றும் கோயில் நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள், அணிகளின்அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்புகளின், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகரக் கழகத்தின் சார்பாக  மாரியம்மன் கோயில் அருகில் திருச்சி ரோட்டில் பொதுமக்களின் தாகம் தணிப்பதற்கான தண்ணீர் பந்தலில் அமைக்கப்பட்டு தண்ணீர் மற்றும் மோர்,தர்பூசணி வழங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி   தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.
பின்னர் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பரிபட்டம் கட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வில்
சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் நகரக் கழகச் செயலாளர்
மு.மா. செல்வம்  மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் பி எல் கிருஷ்ண கோபால், மனித நேயம் கட்சி 
தலைமை செயற்குழு உறுப்பினர் சபியுல்லா , அறங்காவலர் வீரமணி மற்றும் கோயில் நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள், அணிகளின்அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்புகளின், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    35 min ago
  • தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி திங்கள் கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் வேடசந்தூர் போலீசார் வேடசந்தூர் நகர் பகுதியில் கொட்டும் மழை மற்றும் சூறாவளி காற்றிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். வேடசந்தூர் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். வேடசந்தூர் கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் வேடசந்தூர் ஆர்.ஹச்.காலனி முதல் ஆத்துமேடு வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
    1
    தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி திங்கள் கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் வேடசந்தூர் போலீசார் வேடசந்தூர் நகர் பகுதியில் கொட்டும் மழை மற்றும் சூறாவளி காற்றிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். வேடசந்தூர் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் வேடசந்தூர் துணை  கண்காணிப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். வேடசந்தூர் கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் வேடசந்தூர் ஆர்.ஹச்.காலனி முதல் ஆத்துமேடு வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.