logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: கடந்த 13-ந்தேதி வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் யுனிவர்சல் ஆம்னி பஸ் டிரைவர்-கண்டக்டர் இருவரும் மது போதையில் இருப்பதாக வந்த புகாரை விசாரிக்க சென்ற போலீசாரும் மதுபோதையில் இருந்ததாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது எனவே தவறான தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் இதுபோல் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 hrs ago
user_NAGAI BABU
NAGAI BABU
Reportar நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
11 hrs ago
959066f8-5323-4c52-937b-4e6b071eb205

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: கடந்த 13-ந்தேதி வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் யுனிவர்சல் ஆம்னி பஸ் டிரைவர்-கண்டக்டர் இருவரும் மது போதையில் இருப்பதாக வந்த புகாரை விசாரிக்க சென்ற போலீசாரும் மதுபோதையில் இருந்ததாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது எனவே தவறான தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் இதுபோல் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • விநாயகர் சதுர்த்தி சதுர்த்தி முன்னிட்டு 32 அடி விநாயகர் ஊர்வலம் நாகை மாவட்டம் 32 அடி உயர அத்தி விநாயகர் அகிலம் போற்றும் 32 உயர ஸ்ரீ விஸ்வரூப அத்தி விநாயகர் நகர்வலம் நாகை முதல் நாகூர் வரை அது விமர்சையாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் 108 திருவிளக்கு பூஜை உடன் ஸ்ரீ விஸ்வரூப குழு திருநாகை
    4
    விநாயகர் சதுர்த்தி சதுர்த்தி முன்னிட்டு 32 அடி விநாயகர் ஊர்வலம்
நாகை மாவட்டம் 32 அடி உயர அத்தி விநாயகர் அகிலம் போற்றும் 32 உயர ஸ்ரீ விஸ்வரூப அத்தி விநாயகர் நகர்வலம் நாகை முதல் நாகூர் வரை அது விமர்சையாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் 108 திருவிளக்கு பூஜை உடன் ஸ்ரீ விஸ்வரூப குழு திருநாகை
    user_ARUL WINNER அருள் வின்னர்
    ARUL WINNER அருள் வின்னர்
    கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    17 hrs ago
  • ‎சித்தக்காடு நெடுஞ்சாலை நடுவில் தடுப்பு கட்டை அமைக்கும் பணி நடைபெறுகிறது மயிலாடுதுறை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சித்தக்காடு இரயில்வே மேம்பாளம் முன்னே சாலையை இரண்டாக பிரித்து நடுவே தடுப்பு கட்டை அமைக்கும் பணி தீவீரம் பொது மக்களுக்கு சிறமம் ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது
    1
    ‎சித்தக்காடு நெடுஞ்சாலை நடுவில் தடுப்பு கட்டை அமைக்கும் பணி நடைபெறுகிறது
மயிலாடுதுறை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சித்தக்காடு இரயில்வே மேம்பாளம்  முன்னே சாலையை இரண்டாக பிரித்து நடுவே தடுப்பு கட்டை அமைக்கும் பணி தீவீரம் பொது மக்களுக்கு சிறமம் ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது
    user_Anbu Vetri
    Anbu Vetri
    Teacher College குத்தாலம், மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைத்து தருவதாக மாநில துணைத்தலைவர் உறுதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இரவில் மர்ம நபர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் நந்தனார் கல்வி கழக தலைவருமான டாக்டர் கே ஐ மணிரத்தினம் அவர்கள் மண் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவி தருவதாக உறுதியளித்துள்ளார்
    1
    உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைத்து தருவதாக மாநில துணைத்தலைவர் உறுதி 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இரவில் மர்ம நபர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் நந்தனார் கல்வி கழக தலைவருமான டாக்டர் கே ஐ மணிரத்தினம் அவர்கள் மண் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவி தருவதாக உறுதியளித்துள்ளார்
    user_தாமோதரன் மாவட்ட செய்தியாள
    தாமோதரன் மாவட்ட செய்தியாள
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்! கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்! கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்க விழா புவனகிரி அருகே உள்ள ஆயிப்பேட்டை ஊராட்சியில் நடைபெற்றது. 2026–27ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாமை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளும், முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்குதல், தாது உப்பு கலவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பு, சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. கால்நடைகளில் ஏற்படும் தோல் கழலை நோய் (Lumpy Skin Disease–LSD) மற்றும் கோமாரி நோய் தடுப்பு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இந்த முகாமின் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    1
    கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்!

கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்!
கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்க விழா புவனகிரி அருகே உள்ள ஆயிப்பேட்டை ஊராட்சியில்  நடைபெற்றது.
2026–27ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாமை 
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளும், முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்குதல், தாது உப்பு கலவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
மேலும், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பு, சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.
கால்நடைகளில் ஏற்படும் தோல் கழலை நோய் (Lumpy Skin Disease–LSD) மற்றும் கோமாரி நோய் தடுப்பு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
இந்த முகாமின் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    user_Lathan V
    Lathan V
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • அதிமுக மாவட்ட செயலாளர் சிதம்பரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் வண்டி கேட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
    1
    அதிமுக மாவட்ட செயலாளர் சிதம்பரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் வண்டி கேட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
    user_Chidambaram Repoter
    Chidambaram Repoter
    பத்திரிகையாளர் சிதம்பரம், கடலூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும். இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது. கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    1
    டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி
அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது.
ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும்.
இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது.
கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்
    4
    புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி 
புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்
    user_Prabhu
    Prabhu
    கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடப்பதால் மாணவிகள் அச்சம்:  திருவாடானை பாரதிநகரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.​இப்பள்ளி வளாகத்திற்குள் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளி வளாகத்தில் அவ்வப்போது விஷப் பூச்சிகள் மற்றும் ஊர்வன நடமாட்டம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினமும் பள்ளிக்கு வரும் மாணவிகள் அச்சத்துடனேயே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது.​எனவே, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    1
    அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடப்பதால் மாணவிகள் அச்சம்: 
திருவாடானை பாரதிநகரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.​இப்பள்ளி வளாகத்திற்குள் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளி வளாகத்தில் அவ்வப்போது விஷப் பூச்சிகள் மற்றும் ஊர்வன நடமாட்டம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினமும் பள்ளிக்கு வரும் மாணவிகள் அச்சத்துடனேயே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது.​எனவே, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.