Shuru
Apke Nagar Ki App…
கானமலை ஊராட்சியில்.வாக்கு சேகரிப்பு கூட்டம் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம். 22-03-2026 இன்று கானமலை ஊராட்சியில் செண்பகதோப்பு, இருளம்பாறை, வேடன்கொள்ளைமேடு ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் திமுக.MLA. PST, சரவணன் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உடன் MS.செல்வம் ஒருங்கிணைப்பாளர் ஜவ்வாதுமலை வடக்கு ஒன்றியம் மற்றும் கழக நிர்வாகிகள்.தோழர்கள் உடனிருந்தனர்.
Raja Albert. J
கானமலை ஊராட்சியில்.வாக்கு சேகரிப்பு கூட்டம் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம். 22-03-2026 இன்று கானமலை ஊராட்சியில் செண்பகதோப்பு, இருளம்பாறை, வேடன்கொள்ளைமேடு ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் திமுக.MLA. PST, சரவணன் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உடன் MS.செல்வம் ஒருங்கிணைப்பாளர் ஜவ்வாதுமலை வடக்கு ஒன்றியம் மற்றும் கழக நிர்வாகிகள்.தோழர்கள் உடனிருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது. இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய், திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ், திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- Post by Vinayagam Vinayagam1
- பர்கூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த விவசாயின் துண்டை பிடுங்கியதால் பரபரப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த மணி என்பவரின் கழுத்தில் உள்ள பச்சை நிற விவசாயின் துண்டை காவல்துறையினர் எடுத்துச் செல்லக்கூடாது என வாங்கிக் கொண்டதால் வேட்பாளர் விவசாயி மணி தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் துண்டை திருப்பிக் கொடுத்த பின் சமாதானத்துடன் சென்றார்.1
- Post by JEK MEDIAtamil2
- செய்த திராவிட தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் ஆறுமுகம் தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில், எச்சனள்ளி கிராமத்தை சேர்ந்த திராவிட தெலுங்கு தேசக் கட்சியின் வேட்பாளர் ஆறுமுகம் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது சுவாரிசத்தை ஏற்படுத்தியது. இன்று மதியம் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினருடன் தர்மபுரி நகருக்கு வந்த ஆறுமுகம், கிருஷ்ணர் வேடத்தில் கையில் புல்லாங்குழல் ஏந்தியவாறு தேர்தல் அதிகாரி அலுவலகம் நோக்கி சென்றார். வழியெங்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் அவரை பார்வையிட்டு கைஅசைத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரி முன்னிலையில் தேவையான ஆவணங்களுடன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் மனதை கவரும் விதமாகவும், நல்லாட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த வேடத்தில் வந்தேன். மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டு வருவதே எனது இலக்கு” என்று தெரிவித்தார். கிருஷ்ணர் வேடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த இந்த சம்பவம் தர்மபுரி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது1
- சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள, தனியார் வணிக வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு அணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை, எவ்வாறு கையாள்வது என்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி இன்று வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சேலம் தீயணைப்புத்துறை ஊழியர்கள் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- #Iran1
- Post by Vinayagam Vinayagam1