மதுரை விமான நிலையத்தில் திரைப்பட நடிகர் சுந்தர்.சி பேட்டி. மதுரை மத்திய தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் இயக்குனருமான சுந்தர் சி சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (ஏப்.1) மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது மதுரை மீனாட்சி அம்மன் அருளாலும், மதுரை மக்களின் அன்பாலும், மதுரை மண்ணின் மேல் நான் வைத்திருக்கிற நம்பிக்கையாலும் கண்டிப்பாக இங்கே நல்லபடியாக வெற்றிக்கனி எனக்கு மதுரை மக்கள் பரிசளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன்னால் இன்று என்னுடைய முதல் பேட்டியை ஆரம்பிக்கிறேன். இதுக்கு முன்னாடி சினிமாவில் வந்து சினிமா இயக்குநராக எத்தனையோ பேட்டிகளைக் கொடுத்திருக்கேன். இந்தக் களம் வந்து எனக்கு ரொம்ப புதுசு. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, அம்மா அவர்களால் வளர்க்கப்பட்டு, இன்று புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இரட்டை இலைச் சின்னத்தில் நான் நிற்கக் காரணமாக இருந்த புதிய நீதி கட்சித் தலைவரும் எனது மூத்த சகோதரருமான ஏ.சி. சண்முகம் ஐயா அவர்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், அம்மா ஆமமுக தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் டி.டி.வி. தினகரன் அவர்களுக்கும், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் அவர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்களுக்கும், ஜான் பாண்டியன் அவர்களுக்கும், திருமாறன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. *மதுரை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் உண்டா ஏன்னா நீங்க சென்னையில் இருக்கீங்க, மதுரையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் குறித்த கேள்விக்கு:* மதுரை வந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்-ருடைய கோட்டை, புரட்சித் தலைவி அம்மாவுடைய கோட்டை. அதிலே நிறைய மதுரை மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஜிப்மர் மருத்துவமனையை விரைவில் திறக்க வேண்டும். அதுபோன்று பல்வேறு சாலை வசதிகள், மேம்பாலங்கள், பல்வேறு மதுரை வளர்ச்சிக்காகப் புதிய நீதி கட்சி இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என ஏ.சி. சண்முகம் கூறினார் *முதல் முறையாகக் களம் காண்கிறீர்கள். ஒரு மூத்த அமைச்சர் பி.டி.ஆர் இருக்காரு, அந்தத் தொகுதியில் நீங்கள் இப்போது நிற்கப்போகிறீர்கள். தொகுதியைப் பற்றி ஏதாவது புரிந்து கொண்டிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு:* தொகுதியைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதை அலசி ஆராய்ந்து... ஏற்கனவே நிறைய தடவை நான் மதுரைக்கு வந்திருக்கேன், இங்க படப்பிடிப்புக்காக வந்திருக்கேன். தூங்காநகரம் மதுரையைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதுல இருக்கிற பிரச்சனையெல்லாம் தெரிந்து, ஒரு மக்களுக்காகட்டும் இந்த மண்ணுக்காகட்டும் நல்ல தீர்வு கொடுக்க என்னால முடிந்த அளவுக்கு நல்ல தீர்வு கொடுக்கணும், அதுக்காக உழைக்கணும்னு தான் வந்திருக்கேன் *வேட்புமனு எப்போ தாக்கல் செய்யப்போறீங்க:* நாலாம் தேதி 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் பண்றோம். கேம்பெயின் (Campaign) இம்மீடியட்டா ஆரம்பிக்கிறோம். இன்னைக்கு வந்து முக்கியமான வி.ஐ.பி-களை (VIPs) மீட் பண்ண வேண்டியது இருக்கு. கட்சித் தலைவர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள் எல்லாத்தையும் சந்திக்கிறோம். அவங்களோட ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுட்டு நாலாம் தேதியிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறோம். *மதுரை மத்திய தொகுதிங்கிறது திமுக-வோட பலம் வாய்ந்த ஒரு தொகுதி. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிக்கிறாரு, போட்டி கொஞ்சம் கடினமாத் தானே இருக்கும் பற்றிய கேள்விக்கு:* போட்டி எல்லா இடத்திலயும் கடினமாத் தான் இருக்கும். போட்டின்னு பார்த்தா நாம வந்து ஒதுங்கிப் போக முடியாது. ஜெயிக்கிறதுக்குத் தான் போராடுறோம். கண்டிப்பாக ஜெயிப்போம்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. கண்டிப்பாக ஜெயிப்போம் என கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் திரைப்பட நடிகர் சுந்தர்.சி பேட்டி. மதுரை மத்திய தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் இயக்குனருமான சுந்தர் சி சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (ஏப்.1) மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது மதுரை மீனாட்சி அம்மன் அருளாலும், மதுரை மக்களின் அன்பாலும், மதுரை மண்ணின் மேல் நான் வைத்திருக்கிற நம்பிக்கையாலும் கண்டிப்பாக இங்கே நல்லபடியாக வெற்றிக்கனி எனக்கு மதுரை மக்கள் பரிசளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன்னால் இன்று என்னுடைய முதல் பேட்டியை ஆரம்பிக்கிறேன். இதுக்கு முன்னாடி சினிமாவில் வந்து சினிமா இயக்குநராக எத்தனையோ பேட்டிகளைக் கொடுத்திருக்கேன். இந்தக் களம் வந்து எனக்கு ரொம்ப புதுசு. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, அம்மா அவர்களால் வளர்க்கப்பட்டு, இன்று புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இரட்டை இலைச் சின்னத்தில் நான் நிற்கக் காரணமாக இருந்த புதிய நீதி கட்சித் தலைவரும் எனது மூத்த சகோதரருமான ஏ.சி. சண்முகம் ஐயா அவர்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், அம்மா ஆமமுக தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் டி.டி.வி. தினகரன் அவர்களுக்கும், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் அவர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்களுக்கும், ஜான் பாண்டியன் அவர்களுக்கும், திருமாறன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. *மதுரை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் உண்டா ஏன்னா நீங்க சென்னையில் இருக்கீங்க, மதுரையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் குறித்த கேள்விக்கு:* மதுரை வந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்-ருடைய கோட்டை, புரட்சித் தலைவி அம்மாவுடைய கோட்டை. அதிலே நிறைய மதுரை மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஜிப்மர் மருத்துவமனையை விரைவில் திறக்க வேண்டும். அதுபோன்று பல்வேறு சாலை வசதிகள், மேம்பாலங்கள், பல்வேறு மதுரை வளர்ச்சிக்காகப் புதிய நீதி கட்சி இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என ஏ.சி. சண்முகம் கூறினார் *முதல் முறையாகக் களம் காண்கிறீர்கள். ஒரு மூத்த அமைச்சர் பி.டி.ஆர் இருக்காரு, அந்தத் தொகுதியில் நீங்கள் இப்போது நிற்கப்போகிறீர்கள். தொகுதியைப் பற்றி ஏதாவது புரிந்து கொண்டிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு:* தொகுதியைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதை அலசி ஆராய்ந்து... ஏற்கனவே நிறைய தடவை நான் மதுரைக்கு வந்திருக்கேன், இங்க படப்பிடிப்புக்காக வந்திருக்கேன். தூங்காநகரம் மதுரையைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதுல இருக்கிற பிரச்சனையெல்லாம் தெரிந்து, ஒரு மக்களுக்காகட்டும் இந்த மண்ணுக்காகட்டும் நல்ல தீர்வு கொடுக்க என்னால முடிந்த அளவுக்கு நல்ல தீர்வு கொடுக்கணும், அதுக்காக உழைக்கணும்னு தான் வந்திருக்கேன் *வேட்புமனு எப்போ தாக்கல் செய்யப்போறீங்க:* நாலாம் தேதி 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் பண்றோம். கேம்பெயின் (Campaign) இம்மீடியட்டா ஆரம்பிக்கிறோம். இன்னைக்கு வந்து முக்கியமான வி.ஐ.பி-களை (VIPs) மீட் பண்ண வேண்டியது இருக்கு. கட்சித் தலைவர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள் எல்லாத்தையும் சந்திக்கிறோம். அவங்களோட ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுட்டு நாலாம் தேதியிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறோம். *மதுரை மத்திய தொகுதிங்கிறது திமுக-வோட பலம் வாய்ந்த ஒரு தொகுதி. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிக்கிறாரு, போட்டி கொஞ்சம் கடினமாத் தானே இருக்கும் பற்றிய கேள்விக்கு:* போட்டி எல்லா இடத்திலயும் கடினமாத் தான் இருக்கும். போட்டின்னு பார்த்தா நாம வந்து ஒதுங்கிப் போக முடியாது. ஜெயிக்கிறதுக்குத் தான் போராடுறோம். கண்டிப்பாக ஜெயிப்போம்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. கண்டிப்பாக ஜெயிப்போம் என கூறினார்.
- தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடப் போகும் நடிகர் ஸ்ரீநாத் அவர்கள் இன்று (ஏப்.1) சென்னையில் இருந்து விமானம் மூலம் தொகுதிக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாநகரத்தில் தாவேக் கவுண்டர் உற்சாக வரவேற்பு அளித்தனர் பின்னர் செய்தியாளர் சந்தித்து அவர் கூறுகையில்; என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி பத்திரிக்கையாளர்கள் தவெகவுக்கு உங்களின் முழுமையான ஆதரவு வேண்டும் எங்களின் தலைவருக்கும் எனக்கும் உங்களின் முழுமையான ஆதரவு வேண்டும் முதல் முறையா தேர்தல்ல களம் இறங்குறீங்க, தூத்துக்குடியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன எந்த அடிப்படையில உங்களை அங்க நிறுத்தினாங்க குறித்த கேள்விக்கு: இது கழகம் முடிவு பண்ண ஒரு விஷயம், தலைவர் முடிவு பண்ண ஒரு விஷயம். ஏன்னா ஓவரரு வேட்பாளரும் எங்கு போட்டியாட வேண்டும் என்று நம்மளுடைய விருப்பம் என்னவா இருந்தாலும், கழகத்தினுடைய விருப்பத்துக்கு தகுந்த மாதிரி செயல்படுறதுதானே அடிப்படை தொண்டன்ல இருந்து பொறுப்புல இருக்கிற நம்மளுடைய கடமை. என்னுடைய ஆசை வேறையாக இருந்தாலும் அது மட்டுமல்ல நான் பிறந்த மண் என்னுடைய மண்ணில் நான் நிற்கிறது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு சார்? தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் எப்படி இருக்குன்னு குறித்த கேள்விக்கு: தமிழகம் முழுவதும் கண்டிப்பா ஒரு மாற்றத்தை எல்லாருமே... அந்த மாற்றத்துக்காக வெயிட் பண்றாங்க. ஒரு மாற்றம் நிகழும் அப்படின்னு கண்டிப்பா நம்புறாங்க தூத்துக்குடியிலயும் அந்த மாற்றம் ஏற்படும் அப்படின்றத ஆணித்தரமா நான் நம்புறேன். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் இருக்காங்க அதிமுக-ல, இப்ப திமுக-லயும் அமைச்சர் இருக்காங்க. அதனால உங்களுக்கு போட்டி எந்த மாதிரி இருக்கும்னு நினைக்கிறீங்க கடுமையா இருக்கும், ரொம்ப... என்ன சொல்றது..விறுவிறுப்பாக இருக்கும் நாங்க ரொம்ப ரொம்ப உறுதிய இருக்கோம். அறிமுகக் கூட்டத்துல முத்தம் கொடுத்து அனுப்பி வச்சாரு (விஜய்), ஏதாவது பர்சனலா அட்வைஸ் சொல்லி அனுப்பி வச்சார? வெற்றியோட வா நண்பா" அப்படின்றத மட்டும் சொன்னாரு. தூத்துக்குடியில 'தவெக'-க்கு மக்கள் ஏன் ஓட்டு அளிக்கணும் என்ன காரணமா இருக்கும்னு எதிர்பார்க்கிறீங்க மக்கள் என்ன விரும்புறாங்க மாற்றத்துக்காக எங்க தலைவர் மேல வச்சிருக்க நம்பிக்கை... அந்த ஒரு முகம், அந்த முகம் கண்டிப்பா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த தமிழ்நாட்டுல அப்படின்றது தான் எங்களோட நம்பிக்கை. மக்களுக்கு என்ன வாக்குறுதிகள் கொடுக்குறீங்க பெருசா வாக்குறுதி இது வரைக்கும் இருந்தவங்க செய்யாத விஷயங்கள், பண்ணாத விஷயங்களை நாங்க செய்வோம், எங்க தலைவர் செய்வாரு. புதுசா வாக்குறுதியைத் தாண்டி, அது என்னென்ன நாங்க செய்யணும்னு நாங்க எல்லாம் ஒரு பட்டியலே வச்சிருக்கோம் எங்களுடைய அடிப்படை நோக்கம் என்ன அப்படின்னா, இதுவரைக்கும் இருந்தவர்கள் செய்யாத விஷயத்தை, தவறவிட்ட விஷயத்தை நாங்க செய்வோம் இப்ப முதல்வர் சகோதரி (கனிமொழி) அங்க இருக்காங்க, திமுக-வோட அலை அங்க அதிகமா இருக்கு. நீங்க இந்த போட்டியை எப்படி முன்னெடுக்கப் போறீங்க? கடுமையா இருக்கும், ஆரோக்கியமாக இருக்கும். நாங்க ரெடி, எதையும் சந்திக்கிறதுக்கு தயாராக இருக்கோம். அந்த நோக்கத்தோடு தானே தலைவர் களம் இறங்கியிருக்கிறார் உங்கள் தலைவர் பிரசாரம் பண்ற இடத்துக்கு அனுமதி மறுக்கப்படுது, தொடர்ந்து பிரச்சனைகள் வந்துகிட்டே இருக்கு. நேத்து கூட ஒரு கூட்டத்துல பெண்கள் மேல பாட்டில் எறிஞ்சு ஒரு பிரச்சனை வந்தது. இதை எப்படி பேஸ் பண்ண ரெடியா இருக்கீங்க? இதை ரொம்ப நாகரிகமா நாங்க பேஸ் பண்றோம். அநாகரிகமா அவங்க நடந்துக்கிறாங்க அப்படின்னா, எங்க கழகமும் எங்க தலைவரும் இதை ரொம்ப ஒரு நாகரிகமா பேஸ் பண்ணுவாரு. அப்படித்தான் எங்களை ட்ரெய்ன் பண்ணிருக்காரு. அதுதான் எங்களுடைய இயல்பான ஒரு மூவ்மென்ட் ஆகவும் இருக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறாங்களா? அது அவங்களோட கடமை, அதை செய்யணும் அவங்க. ஒவ்வொரு இடங்கள்ல செய்றாங்க அப்படின்னு நாங்க நம்புறோம் எங்கேயாவது கொஞ்சம் அதுல சில பிசிறுகள் எல்லாம் இருந்ததுன்னா அதை சரி செய்யணும். அரசாங்கம் தான் சரி செய்யணும். உங்கள மாதிரி ஆட்கள் அது எங்க தவறுகள் நடக்குதோ, ஊடக நண்பர்கள் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வரணும், அதை எடுத்து மக்களுக்கு தெரிவிக்கணும். தென் மாவட்டங்கள்ல அடிக்கடி சாதி மோதல் போன்ற சம்பவங்கள் நடக்குது. அதைத் தடுக்க தவெக கிட்ட ஏதாவது புதிய திட்டங்கள் இருக்கா? எல்லாமே இருக்குது, ஒரு பட்டியலே இருக்கு. அது ஸ்லோவா ஒவ்வொன்னா நாங்க டிஸ்க்ளோஸ் (Disclose) பண்றோம் என்றார்.1
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முக்கு ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ பாலமுருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் மிகுந்த பக்தி உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது. முதலில் முருகப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெற்று, அதன் பின்னர் மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தினை மாவு, மாதுளைச் சாறு, திராட்சைச் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, விபூதி, சந்தனம், பன்னீர் மற்றும் பல்வேறு புனித திரவியங்களால் அபிஷேகங்கள் ஒவ்வொன்றாக முறையாக நடைபெற்றன. ஒவ்வொரு அபிஷேகத்திற்குப் பிறகும், முருகப்பெருமானுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதன் போது கோவில் முழுவதும் வேத மந்திரங்கள் ஓங்கி ஒலித்ததுடன், பக்தர்கள் “அரோகரா” கோஷங்களை எழுப்பி ஆனந்தத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, கோவிலிலிருந்து மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையுடன் பக்தர்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இந்த பால்குட ஊர்வலம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. அபிஷேகத்திற்குப் பின்னர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாலமுருகப்பெருமான் அழகிய திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பல்வேறு தூப தீப ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.8
- சிவகங்கை அரண்மனை வாயில் அருகே அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து புதுக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கிளம்பிச் சென்றார். அப்போது மதகுப்பட்டி மேல தெருவை சேர்ந்த ஆறுமுகம் (27) என்ற இளைஞர் கோயில் திருவிழாவை பார்க்க தனது இருசக்கர வாகனத்தில் EB அலுவலகம் அருகே சென்றபோது, எடப்பாடி பழனிச்சாமி உடன் சென்ற பாதுகாப்பு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த மதகுப்பட்டி போலீசார் உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி பாதுகாப்பிற்கு சென்ற வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சிவகங்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2
- எடப்பாடி கே. பழனிச்சாமி சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில் நாதனை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சிகளான அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மற்றும் காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர் பாஜக வேட்பாளர்களுக்கும் வாக்குகள் சேகரித்தார்.1
- *திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*1
- Post by Natarajan Pitchaimani1
- பங்குனி உத்திரம் முன்னிட்டு இன்று பழனி முருகனுக்கு காவடி எடுத்து வந்த கணக்கன்பட்டி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு காலடிகளை எடுத்து வந்து பழனி பாலதண்டாயுதபாணி சாமி தரிசனம் செய்தனர்1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக கட்சியின் சார்பில் போட்டியிடும் நிர்மல் குமார் இன்று (ஏப்.1) திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உங்களை நம்பி தான் நாங்கள் தேர்தலில் நிற்கிறோம் என தள்ளுவண்டியில் மோர் வியாபாரம் செய்யும் பெண்மணியிடம் வாங்குகளை சேகரித்தார். உடன் தவெக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1