Shuru
Apke Nagar Ki App…
சிவகங்கையில் அதிமுக–கூட்டணி வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் எடப்பாடி கே. பழனிச்சாமி சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில் நாதனை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சிகளான அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மற்றும் காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர் பாஜக வேட்பாளர்களுக்கும் வாக்குகள் சேகரித்தார்.
Santhosh Kumar V
சிவகங்கையில் அதிமுக–கூட்டணி வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் எடப்பாடி கே. பழனிச்சாமி சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில் நாதனை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சிகளான அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மற்றும் காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர் பாஜக வேட்பாளர்களுக்கும் வாக்குகள் சேகரித்தார்.
More news from Tamil Nadu and nearby areas
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக கட்சியின் சார்பில் போட்டியிடும் நிர்மல் குமார் இன்று (ஏப்.1) திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உங்களை நம்பி தான் நாங்கள் தேர்தலில் நிற்கிறோம் என தள்ளுவண்டியில் மோர் வியாபாரம் செய்யும் பெண்மணியிடம் வாங்குகளை சேகரித்தார். உடன் தவெக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர் YMR பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பக்தி பரவசத்தோடு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்1
- கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி தலைமையில் மாநில நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முத்தழகு பட்டி சூசை ராபர்ட், தோம்னிக், குட்டத்துபட்டி சீலன் ஜோசப் ஆகியோர் உடன் இருந்தனர்.1
- Post by மா.கணேஷ்1
- குடுமியான்மலை அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற குடவரைக்கோவிலான அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் இந்த ஆண்டுக்காண பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 23-.ந்தேதி தொடங்கியது. அதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடி தாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்பாளை, தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து குதிரை ஆட்டம், மேளதாளம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் குடுமியான்மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.1
- Post by மா.சுடலைமணி1
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும், சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது திமுக தலைமை தான். அவர்கள் எந்த முடிவு எடுத்திருந்தாலும் இந்த தேர்தலை சந்தித்து இருப்பேன். இரட்டை இலை சின்னத்தில் அம்மாவிற்கு வாக்களித்து தான் மக்கள் வெற்றியடைய செய்தனர். அது எடப்பாடி பழனிச்சாமிக்கான வாக்கு அல்ல என்றவர், எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு எனது சமூகத்தை புறக்கணித்தார். ops, TTV , சின்னம்மாவை அடையாளம் அற்றவர்களாக மாற்றும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்டார். ஆதலால் எடப்பாடியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிமுகவிலிருந்து வெளியேறினோம். எடப்பாடியிடம் இருக்கும் இரட்டை இலைகள் ஒரு இலை செத்துவிட்டது. அதுவும் பிஜிபி யிடம் போய்விட்டது. எனது மகன் கென் கருணாசுக்கும் அரசியலுக்கும் சம்மந்தம் கிடையாது. எனக்காக அவர் பிரச்சாரம் செய்து நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை . நான் 5 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை, திட்டங்களையும், தற்போது அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் கூறி பிரச்சாரம் செய்வேன். முதல்வரின் இல்லத்தரசி என்ற ஒரு திட்டம் போதும் நான் வெற்றி பெறுவதற்கு என்றார். அரசியல் சூழ்ச்சி காரணமாக, எடப்பாடி என் மீது பொய்யாக வழக்குகள் போட்டு என்னை ரவுடிகள் போல சித்தரித்து விட்டார். உண்மையில் அவர் தான் ரவுடி என கருணாஸ் தொவித்தார்.1
- மதுரை மத்திய தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் இயக்குனருமான சுந்தர் சி சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (ஏப்.1) மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது மதுரை மீனாட்சி அம்மன் அருளாலும், மதுரை மக்களின் அன்பாலும், மதுரை மண்ணின் மேல் நான் வைத்திருக்கிற நம்பிக்கையாலும் கண்டிப்பாக இங்கே நல்லபடியாக வெற்றிக்கனி எனக்கு மதுரை மக்கள் பரிசளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன்னால் இன்று என்னுடைய முதல் பேட்டியை ஆரம்பிக்கிறேன். இதுக்கு முன்னாடி சினிமாவில் வந்து சினிமா இயக்குநராக எத்தனையோ பேட்டிகளைக் கொடுத்திருக்கேன். இந்தக் களம் வந்து எனக்கு ரொம்ப புதுசு. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, அம்மா அவர்களால் வளர்க்கப்பட்டு, இன்று புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இரட்டை இலைச் சின்னத்தில் நான் நிற்கக் காரணமாக இருந்த புதிய நீதி கட்சித் தலைவரும் எனது மூத்த சகோதரருமான ஏ.சி. சண்முகம் ஐயா அவர்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், அம்மா ஆமமுக தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் டி.டி.வி. தினகரன் அவர்களுக்கும், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் அவர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்களுக்கும், ஜான் பாண்டியன் அவர்களுக்கும், திருமாறன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. *மதுரை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் உண்டா ஏன்னா நீங்க சென்னையில் இருக்கீங்க, மதுரையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் குறித்த கேள்விக்கு:* மதுரை வந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்-ருடைய கோட்டை, புரட்சித் தலைவி அம்மாவுடைய கோட்டை. அதிலே நிறைய மதுரை மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஜிப்மர் மருத்துவமனையை விரைவில் திறக்க வேண்டும். அதுபோன்று பல்வேறு சாலை வசதிகள், மேம்பாலங்கள், பல்வேறு மதுரை வளர்ச்சிக்காகப் புதிய நீதி கட்சி இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என ஏ.சி. சண்முகம் கூறினார் *முதல் முறையாகக் களம் காண்கிறீர்கள். ஒரு மூத்த அமைச்சர் பி.டி.ஆர் இருக்காரு, அந்தத் தொகுதியில் நீங்கள் இப்போது நிற்கப்போகிறீர்கள். தொகுதியைப் பற்றி ஏதாவது புரிந்து கொண்டிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு:* தொகுதியைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதை அலசி ஆராய்ந்து... ஏற்கனவே நிறைய தடவை நான் மதுரைக்கு வந்திருக்கேன், இங்க படப்பிடிப்புக்காக வந்திருக்கேன். தூங்காநகரம் மதுரையைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதுல இருக்கிற பிரச்சனையெல்லாம் தெரிந்து, ஒரு மக்களுக்காகட்டும் இந்த மண்ணுக்காகட்டும் நல்ல தீர்வு கொடுக்க என்னால முடிந்த அளவுக்கு நல்ல தீர்வு கொடுக்கணும், அதுக்காக உழைக்கணும்னு தான் வந்திருக்கேன் *வேட்புமனு எப்போ தாக்கல் செய்யப்போறீங்க:* நாலாம் தேதி 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் பண்றோம். கேம்பெயின் (Campaign) இம்மீடியட்டா ஆரம்பிக்கிறோம். இன்னைக்கு வந்து முக்கியமான வி.ஐ.பி-களை (VIPs) மீட் பண்ண வேண்டியது இருக்கு. கட்சித் தலைவர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள் எல்லாத்தையும் சந்திக்கிறோம். அவங்களோட ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுட்டு நாலாம் தேதியிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறோம். *மதுரை மத்திய தொகுதிங்கிறது திமுக-வோட பலம் வாய்ந்த ஒரு தொகுதி. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிக்கிறாரு, போட்டி கொஞ்சம் கடினமாத் தானே இருக்கும் பற்றிய கேள்விக்கு:* போட்டி எல்லா இடத்திலயும் கடினமாத் தான் இருக்கும். போட்டின்னு பார்த்தா நாம வந்து ஒதுங்கிப் போக முடியாது. ஜெயிக்கிறதுக்குத் தான் போராடுறோம். கண்டிப்பாக ஜெயிப்போம்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. கண்டிப்பாக ஜெயிப்போம் என கூறினார்.1
- Post by மா.கணேஷ்1