நாகர்கோவிலில் நடுரோட்டில் கவிழ்ந்த கண்டைனர் லாரி -போக்குவரத்து பாதிப்பு மீட்பு பணி தீவிரம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று பாரம் ஏற்றி வந்து கொண்டிருந்தது அப்பகுதி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டிரைவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இந்த நிலையில் கண்டெய்னர் லாரி சாலை நடுவே கவிழ்ந்து விபத்து உள்ளானதால் திருவனந்தபுரம் நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து ஆனது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கண்டைனர் லாரியை அப்புறப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது
நாகர்கோவிலில் நடுரோட்டில் கவிழ்ந்த கண்டைனர் லாரி -போக்குவரத்து பாதிப்பு மீட்பு பணி தீவிரம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று பாரம் ஏற்றி வந்து கொண்டிருந்தது அப்பகுதி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டிரைவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இந்த நிலையில் கண்டெய்னர் லாரி சாலை நடுவே கவிழ்ந்து விபத்து உள்ளானதால் திருவனந்தபுரம் நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து ஆனது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கண்டைனர் லாரியை அப்புறப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது
- நாகர்கோவிலில் த.வெ.க.வினர் இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம். நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது மேலும் கட்சி தொடங்கிய இரண்டு வருடங்களில் போட்டியிட்ட முதல் தேர்தலிலே 35 சதவீதம் வாக்குகளை பெற்று வரலாற்றில் முதன்முறையாக தனிப்பெரும் கட்சி என அந்தஸ்தை பெற்ற தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் அதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை தொடர்ந்து குமரி கிழக்கு மாவட்டம் த.வெ.க. நிர்வாகி தொழிலதிபர் பால்ராஜ் ஏற்பட்டில் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- நாகர்கோவிலில் நடுரோட்டில் கவிழ்ந்த கண்டைனர் லாரி -போக்குவரத்து பாதிப்பு மீட்பு பணி தீவிரம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று பாரம் ஏற்றி வந்து கொண்டிருந்தது அப்பகுதி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டிரைவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இந்த நிலையில் கண்டெய்னர் லாரி சாலை நடுவே கவிழ்ந்து விபத்து உள்ளானதால் திருவனந்தபுரம் நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து ஆனது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கண்டைனர் லாரியை அப்புறப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது1
- நெல்லை மாவட்டம் பத்தமடை சேரன்மகாதேவி சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மிளா நெல்லை மாவட்டம் பத்தமடையில் வந்து சேரன்மகாதேவி செல்லும் புறவழிச்சாலை பகுதியில் மிளாக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கின்றனர். நேற்று இரவு மிளா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது1
- பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர். பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர். பள்ளிக்கரணை பகுதியில் கடுமையான மழைநீரின் பின்னர் நீர்வழி சரியாக செயல்படாததால், நீர் நகராமல் வீடுகளில் சேர்ந்து குடியிருப்பாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நிலையான நீர் வீடுகளின் உள்ளே புகுந்து, சுத்தி மற்றும் குடிநீர் பயன்பாட்டை பாதித்து, தினசரி வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. இந்த நிலைமையைக் குறித்து உள்ளூர் குடியிருப்பாளர்கள் நகராட்சி மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை உடனடி நடவடிக்கை எடுத்து, நீர்வழிகளை சுத்தம் செய்து, நீர் வெளியேற்றம் செய்யுமாறு வேண்டியுள்ளனர். அதிக மழைநீர் தொடர்ந்தும்பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர். வருவதால், நீர்வழி சீரமைப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அவசரமாக அமல்படுத்தப்பட வேண்டும். ஒளிப்பதிவு க்கு நன்றி!2
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆறுமுகநேரி இந்து முன்னணி சார்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி ஆறுமுகனேரி நகர இந்து முன்னணியும் இணைந்து நடத்தும் மாபெரும் இந்திய எழுச்சி திருவிழா 🙏3
- ஓடிடியில் வெளியான சூர்யாவின் படம்: முடிக்கப்படாத காட்சிகளால் ட்ரோலில் சிக்கிய விஸ்வநாத் & சன்ஸ்! நடிகர் சூர்யா நடிப்பில் உருவான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல்களுக்கு உள்ளாகி வருகின்றன. விஎஃப்எக்ஸ் (VFX), கலர் கிரேடிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளைச் சரிபார்க்காமல் அரைகுறையான காட்சிகளைப் படக்குழுவினர் ஓடிடிக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல காட்சிகளில் குறைபாடுகள் அப்பட்டமாகத் தெரிவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தில் இது போன்ற அடிப்படை தொழில்நுட்பக் குறைபாடுகளைக் கூடவா கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.1
- தூத்துக்குடியில் சமூக நல திட்டங்கள் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திருமண நிதியுதவி, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், திருநங்கைகள் நலத்திட்டம், மகளிர் தங்கும் விடுதி, முதியோர் இல்லங்கள், அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு, காலிப் பணியிடங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியன குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டப் பயன்கள் முழுமையாகச் சென்றடையும் வகையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 மதிப்பிலான வைப்பு தொகைக்கான ரசீதுகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் காமாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) (பொ) சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.1
- சில்வர்ஸ்டோன் ரேஸ்: லண்டனில் கூடிய ரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திய நடிகர் அஜித்! சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் (Race) பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் அஜித், அங்கே குவிந்த ரசிகர்களிடம் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அவர் அறிவுறுத்திய நிலையில், சிலர் அதைக் கவனிக்காமல் கூச்சலிட்டதால் "முக்கியமான விஷயம் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்" என லேசாகக் கடிந்துகொண்டார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த நிலையில், லண்டனில் நடைபெறவுள்ள இந்த கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1