ஊத்தங்கரை அருகே ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரியில் இலக்கியப் போட்டி. ஊத்தங்கரை அடுத்த காட்டேரியில் உள்ள ஸ்ரீ வித்யா முந்திரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆங்கிலத்துறை சார்பாக இலக்கிய போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் குணசேகரன் கற்கும் மாணவர்களிடையே விமர்சன சிந்தனை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொருவரும் திகழ வேண்டும் என்று முன்னிலை உரையாற்றினார். ஆங்கிலத் துறை தலைவர் ஸ்ரீதேவி இலக்கிய பயிற்சி என்பது மாணவர்கள் தங்கள் இலக்கிய திறன்களை ஆராய்வதற்கும் பொதுப்பேச்சு மற்றும் இலக்கிய அழகிகளை வளர்ப்பதற்கும் ஒரு முக்கிய இடமாக அமைகிறது என்று வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வினாடி வினா, ஆளுமை அடையாளம் காணுதல் , கதை சொல்லல், நாடகம், நடித்தல் மற்றும் ஊமை நாடகம் நடித்த போன்ற அற்புதமான போட்டிகள் நடைபெற்றன. இதில் தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அதிவேக கல்லூரி , அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரப்பட்டு யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தர்மபுரி டான் பாஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு பரிசுகளை வென்றனர். முன்னதாக முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கில மாணவர் தாரனி அனைவரையும் வரவேற்றார். முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கில மாணவர் செல்வன், பிரவீன், சுந்தர் ஆகியோர் நன்றி கூறினார். ஆங்கிலத் துறை பேராசிரியர்களும் மாணவர்களும் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
ஊத்தங்கரை அருகே ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரியில் இலக்கியப் போட்டி. ஊத்தங்கரை அடுத்த காட்டேரியில் உள்ள ஸ்ரீ வித்யா முந்திரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆங்கிலத்துறை சார்பாக இலக்கிய போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் குணசேகரன் கற்கும் மாணவர்களிடையே விமர்சன சிந்தனை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொருவரும் திகழ வேண்டும் என்று முன்னிலை உரையாற்றினார். ஆங்கிலத் துறை தலைவர் ஸ்ரீதேவி இலக்கிய பயிற்சி என்பது மாணவர்கள் தங்கள் இலக்கிய திறன்களை ஆராய்வதற்கும் பொதுப்பேச்சு மற்றும் இலக்கிய அழகிகளை வளர்ப்பதற்கும் ஒரு முக்கிய இடமாக அமைகிறது என்று வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வினாடி வினா, ஆளுமை அடையாளம் காணுதல் , கதை சொல்லல், நாடகம், நடித்தல் மற்றும் ஊமை நாடகம் நடித்த போன்ற அற்புதமான போட்டிகள் நடைபெற்றன. இதில் தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அதிவேக கல்லூரி , அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரப்பட்டு யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தர்மபுரி டான் பாஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு பரிசுகளை வென்றனர். முன்னதாக முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கில மாணவர் தாரனி அனைவரையும் வரவேற்றார். முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கில மாணவர் செல்வன், பிரவீன், சுந்தர் ஆகியோர் நன்றி கூறினார். ஆங்கிலத் துறை பேராசிரியர்களும் மாணவர்களும் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி பஞ்சாயத்து கோட்டூர் கிராமத்தில் 20ஆம்ஆண்டு மாபெரும் கன்று விடும் விழாவில் 250 கன்றுகள் பங்கேற்பு,1
- ஊத்தங்கரையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா வழிகாட்டி அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் லோகநாதன் ஏற்பாட்டில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்துகொண்டு துரை ரீதியாக சாதனை புரிந்த மகளிருக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கழக மகளிர்களுக்கு புடவைகளும் அசைவ விருந்துகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சுந்தரவடிவேல், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், நகரக் கழக செயலாளர் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் நகர கழக செயலாளர் சிவானந்தம், ஒன்றிய கழக செயலாளர்கள் வேடி, வேங்கன், நரேஷ் குமார், சக்கரவர்த்தி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் தேவேந்திரன், நகர மாணவரணி செயலாளர் சம்பத் என்கிற கணேசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சக்திவேல், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- கோடை காலம் தொடங்கியதால் ஓசூர், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாகவும் ஒற்றை யானையாகவும் ஒகேனக்கல் - பென்னாகரம் வனப்பகுதியில் உணவிற்காகவும் தண்ணீருக்காகவும் வனப் பகுதிகளில் முகமிட்டுள்ளன. ஒகேனக்கல் பென்னாகரம் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் ஒகேனக்கல் சின்னாறு பகுதிகளில் தண்ணீர் குடிப்பதற்காக தினந்தோறும் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள பென்னாகரம் ஒகேனக்கல் செல்லக்கூடிய பிரதான சாலையை கடந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் சாலையை கடந்து வனப்பகுதிக்கு செல்கின்றன. அவ்வாறு சாலையை கடக்கும் யானைகளை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பியும் வாகனங்களில் அதிகம் சத்தம் எழுப்பியும் தொந்தரவு செய்வதுடன் செல்பி மற்றும் வீடியோ எடுத்து யானையை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன இதனை தடுக்கும் விதமாக ஒகேனக்கல் வனத்துறை சார்பில் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முத்தரவின் பெயரில் பென்னாகரம் வனச்சரக அலுவலர் சிவகுமார் அறிவுறுத்தலின்படியும் தினம் தோறும் பென்னாகரம் - ஒகேனக்கல் மனசாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருக்கினர்க்னர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் ஒகேனக்கல் வனவர்கள் மகேஸ்வரி,சுவாதி ஆகியோர் தலைமையிலான வனத்துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் முண்டச் பள்ளம் பகுதியில் யானை தண்ணீர் அருந்துவதற்காக சாலையை கடந்துள்ளது இவனை கண்டால் ரவுண்டு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வனத்துறையினர் யானை சாலையை கடந்து செல்லும் வரை இரு புறமும் சாலைகளில் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி யானை சாலையை கடக்கும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் யானை சாலையை கடந்த பின்பு சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்ட வாகனங்களை விரைவாக அப்புறப்படுத்தினர். சாலையை கடந்த யானையை வீடியோ எடுத்தும் அதிக சத்தம் எழுப்பியும் தொந்தரவு செய்த இரண்டு வாகன ஓட்டிகளை எச்சரித்து அபராதம் விதிக்கப்பட்டது. இதில் வனக்காப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி ,காளிமுத்து, சுஜாதா,மற்றும் வன காவலர்கள் மோகன,அனிதா ஆகியோர் ரோந்து பாதுகாப்பு பணியில் உடன் இருந்தனர்1
- அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி :அதிகாலை பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு விபூதி அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கால பைரவர் அருள்பெற்றனர் தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று மாசி மாத தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது இங்கு மாதம்தோறும் தேய்பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர் இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார் காலபைரவர் தேய்பிறை அஸ்டமி விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது1
- தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று புதன்கிழமை காலை மத்திய அரசின் தவறான வெளிநாட்டு கொள்கையின் காரணமாக கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிலா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரோஜா கோவிந்த சுவாமி தலைமையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.1
- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜய் (வயது 22), நாகராஜ் (வயது 21) இவர்கள் இருவரும் நண்பராக உள்ளனர். நாளை கோயில் திருவிழாவிற்காக துணி எடுப்பதற்காக ஆம்பூர் பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு இரும்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு நிலையில் இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 3 விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 15-ககும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள அரிமா சங்க திருமண மண்டபத்தில் இன்று 167 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்றம் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கினர். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரியில்மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்புநடைபெற்றது மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி., சங்கர் தலைமையில் பழையபேட்டை மேல்தெரு கொத்தப்பேட்டாவில் இருந்து, காந்திசாலை, பெங்களூரு சாலை வழியாக ஆர்.சி., பள்ளியில் பேரணியை நிறைவு செய்தனர்.1