logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை ஒற்றை காட்டு யானை வழிமறித்து, தும்பிக்கையால் கரும்புகளை பறித்து ருசித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென சாலையில் வந்து நின்றதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். லாரியை வழிமறித்த அந்த யானை அதில் இருந்த கரும்புகளை எடுத்துச் சாப்பிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை வனப்பகுதிக்குள் சென்றதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வரும் சூழலில், பகல் நேரத்தில் சாலையில் காட்டு யானைகள் நடமாடி வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

9 hrs ago
user_Sathees kumar
Sathees kumar
Local News Reporter சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
9 hrs ago

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை ஒற்றை காட்டு யானை வழிமறித்து, தும்பிக்கையால் கரும்புகளை பறித்து ருசித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென சாலையில் வந்து நின்றதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். லாரியை வழிமறித்த அந்த யானை அதில் இருந்த கரும்புகளை எடுத்துச் சாப்பிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை வனப்பகுதிக்குள் சென்றதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வரும் சூழலில், பகல் நேரத்தில் சாலையில் காட்டு யானைகள் நடமாடி வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மீது அவதூறு மற்றும் மிரட்டல் விடுத்ததாக விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேய் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தைப் பற்றி விசாரிக்க திமுக இளைஞர் அணித் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையம் வந்து மார்க்கண்டேய்யை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மார்க்கண்டேய் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது தற்போதைய நிலைமை பற்றிய விவாதத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
    1
    தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மீது அவதூறு மற்றும் மிரட்டல் விடுத்ததாக விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேய் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தைப் பற்றி விசாரிக்க திமுக இளைஞர் அணித் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையம் வந்து மார்க்கண்டேய்யை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மார்க்கண்டேய் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது தற்போதைய நிலைமை பற்றிய விவாதத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தருமபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மலர்கள், மின்விளக்குகளால் கோவில் வளாகம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அர்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தினர். பக்தர்கள் மஞ்சள் நீர், எலுமிச்சை மாலை ஆகியவற்றை அம்மனுக்கு சமர்பித்து வேண்டிக் கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குப்பாகவுண்டர் தெருவில் இருந்து கடைவீதி, பால் டிப்போ வழியாக மேளதாளங்களுடன் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று சென்றனர். இவ்விழாவில் ஸ்ரீ மாரியம்மன் சாமிக்கு மாலை 5 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிழா கடைசி நாளன்று அம்மன் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலில் வந்தடைந்தது. குப்பாகவுண்டர் தெரு பகுதி மட்டுமல்லாமல் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். தருமபுரி குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
    1
    தருமபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மலர்கள், மின்விளக்குகளால் கோவில் வளாகம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அர்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தினர். பக்தர்கள் மஞ்சள் நீர், எலுமிச்சை மாலை ஆகியவற்றை அம்மனுக்கு சமர்பித்து வேண்டிக் கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குப்பாகவுண்டர் தெருவில் இருந்து கடைவீதி, பால் டிப்போ வழியாக மேளதாளங்களுடன் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.

திருவிழாவின் ஒரு பகுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று சென்றனர். இவ்விழாவில் ஸ்ரீ மாரியம்மன் சாமிக்கு மாலை 5 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிழா கடைசி நாளன்று அம்மன் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலில் வந்தடைந்தது.

குப்பாகவுண்டர் தெரு பகுதி மட்டுமல்லாமல் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். தருமபுரி குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    5 hrs ago
  • விரைவில் அண்ணாமலை புதிய கட்சி அறிவிக்க உள்ளதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பாலசமுத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 'WE THE LEADERS' அமைப்பின் முசிறி தொகுதி ஆலோசனைக் கூட்டம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர் மற்றும் தாத்தையங்கார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
    1
    விரைவில் அண்ணாமலை புதிய கட்சி அறிவிக்க உள்ளதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பாலசமுத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 'WE THE LEADERS' அமைப்பின் முசிறி தொகுதி ஆலோசனைக் கூட்டம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர் மற்றும் தாத்தையங்கார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
    user_Kumar kumar
    Kumar kumar
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தேனி மாவட்டத்தின் 21-வது வார்டில் உள்ள சிவாஜி நகர் விரிவாக்கப் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றன. இப்பகுதியில் ரேஷன் கடையைத் தவிர குடிநீர், தெருவிளக்கு, பாதை மற்றும் சாக்கடை வசதிகள் என எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குப்பை வண்டி எதுவும் இப்பகுதிக்கு வந்ததே கிடையாது என்றும், இதனால் குப்பைகளை ஆங்காங்கே வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கொட்டி வந்ததால், வனத்துறையினர் தற்போது வைகுண்டசாமி மில் அருகில் வனப்பகுதி வழியாக வருகின்ற பாதையினை ஜேசிபி மூலம் குழி தோண்டி அடைத்துள்ளனர். இதனால் இப்பகுதி பள்ளி / கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நகருக்குள் வருவதற்கு மிகுந்த சிரமமடைகின்றனர். விஸ்வநாததாஸ் காலனி வழியாக வரக்கூடிய பாதையானது மிகவும் குறுகலாக உள்ளதால், பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் அவசர கால ஆம்புலன்ஸ் வரவேண்டும் என்றால் கூட வனத்துறை அலுவலகத்திலிருந்து வரும் வனப்பகுதி வழியாகத் தான் வரவேண்டும். ஆனால் இதனையும் அடைத்துள்ளதால் கடந்த இரண்டு வார காலமாக மருத்துவ அவசர காலங்களில் மிகுந்த சிரமமடைந்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி சிவாஜி நகர்பகுதி பொதுமக்கள் சார்பில் அடிப்படை வசதி கேட்டுமனு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வனத்துறை சார்பில் அடைக்கப்பட்ட பாதையினை திறந்து விட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
    1
    தேனி மாவட்டத்தின் 21-வது வார்டில் உள்ள சிவாஜி நகர் விரிவாக்கப் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றன. இப்பகுதியில் ரேஷன் கடையைத் தவிர குடிநீர், தெருவிளக்கு, பாதை மற்றும் சாக்கடை வசதிகள் என எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்பை வண்டி எதுவும் இப்பகுதிக்கு வந்ததே கிடையாது என்றும், இதனால் குப்பைகளை ஆங்காங்கே வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கொட்டி வந்ததால், வனத்துறையினர் தற்போது வைகுண்டசாமி மில் அருகில் வனப்பகுதி வழியாக வருகின்ற பாதையினை ஜேசிபி மூலம் குழி தோண்டி அடைத்துள்ளனர். இதனால் இப்பகுதி பள்ளி / கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நகருக்குள் வருவதற்கு மிகுந்த சிரமமடைகின்றனர்.

விஸ்வநாததாஸ் காலனி வழியாக வரக்கூடிய பாதையானது மிகவும் குறுகலாக உள்ளதால், பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் அவசர கால ஆம்புலன்ஸ் வரவேண்டும் என்றால் கூட வனத்துறை அலுவலகத்திலிருந்து வரும் வனப்பகுதி வழியாகத் தான் வரவேண்டும். ஆனால் இதனையும் அடைத்துள்ளதால் கடந்த இரண்டு வார காலமாக மருத்துவ அவசர காலங்களில் மிகுந்த சிரமமடைந்துள்ளனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி சிவாஜி நகர்பகுதி பொதுமக்கள் சார்பில் அடிப்படை வசதி கேட்டுமனு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வனத்துறை சார்பில் அடைக்கப்பட்ட பாதையினை திறந்து விட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழகத்தின் திருச்சி தெற்கு மாவட்டம் மாநகரம் பொன்மலைப் பகுதியில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒரு இளம் பெண் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இந்த ஆதங்கத்தை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இளம் பெண்ணின் ஆதங்கம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    1
    தமிழகத்தின் திருச்சி தெற்கு மாவட்டம் மாநகரம் பொன்மலைப் பகுதியில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒரு இளம் பெண் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இந்த ஆதங்கத்தை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இளம் பெண்ணின் ஆதங்கம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள எர்ரப்பட்டி கிராமத்தில் நஞ்சம்மாள் (45) மற்றும் அவரது தம்பி மாதேஷ் (40) ஆகியோர் கடந்த ஜூன் மாதம் வீட்டின் முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக மாதேஷின் மனைவி கீதா, கூலிப்படையை ஏவி தனது கணவர் மற்றும் அவரது அக்காவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கீதா உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலனின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் சரவணன், கீதா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஹரிராமச்சந்திரன், ஆறுமுகம், ரங்கநாதன், சந்துரு, சண்முகம் ஆகிய 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அதியமான்கோட்டை போலீசார் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் வழங்கினர்.
    1
    தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள எர்ரப்பட்டி கிராமத்தில் நஞ்சம்மாள் (45) மற்றும் அவரது தம்பி மாதேஷ் (40) ஆகியோர் கடந்த ஜூன் மாதம் வீட்டின் முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக மாதேஷின் மனைவி கீதா, கூலிப்படையை ஏவி தனது கணவர் மற்றும் அவரது அக்காவை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, கீதா உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலனின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் சரவணன், கீதா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஹரிராமச்சந்திரன், ஆறுமுகம், ரங்கநாதன், சந்துரு, சண்முகம் ஆகிய 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அதியமான்கோட்டை போலீசார் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் வழங்கினர்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து கோவையை நோக்கி அதிவேகத்தில் சென்ற சொகுசு கார் ஒன்று, பொரத்தூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற எருதுகூடஹள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர் மீது மோதியது. இந்த விபத்தில் சேகர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேகருக்கு அம்சவள்ளி என்ற மனைவி மற்றும் மூன்று பெண்குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்த விபத்து குறித்து விரைந்து சென்ற பாலக்கோடு காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெடுஞ்சாலையில் நடந்த சொகுசு கார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான சொகுசு கார் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்து கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து கோவையை நோக்கி அதிவேகத்தில் சென்ற சொகுசு கார் ஒன்று, பொரத்தூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற எருதுகூடஹள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர் மீது மோதியது. இந்த விபத்தில் சேகர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சேகருக்கு அம்சவள்ளி என்ற மனைவி மற்றும் மூன்று பெண்குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்த விபத்து குறித்து விரைந்து சென்ற பாலக்கோடு காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நெடுஞ்சாலையில் நடந்த சொகுசு கார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான சொகுசு கார் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்து கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.