logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விரைவில் அண்ணாமலை புதிய கட்சி அறிவிக்க உள்ளதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பாலசமுத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 'WE THE LEADERS' அமைப்பின் முசிறி தொகுதி ஆலோசனைக் கூட்டம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர் மற்றும் தாத்தையங்கார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.

1 day ago
user_Kumar kumar
Kumar kumar
Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
1 day ago

விரைவில் அண்ணாமலை புதிய கட்சி அறிவிக்க உள்ளதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பாலசமுத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 'WE THE LEADERS' அமைப்பின் முசிறி தொகுதி ஆலோசனைக் கூட்டம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர் மற்றும் தாத்தையங்கார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருவெள்ளறையில் அமைந்துள்ள புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவிலில் இன்று (27-07-26) ஸ்ரீபங்கஜவல்லித் தாயார் ஸமேத புண்டரீகாக்ஷப் பெருமாள் ஆடி ஜ்யேஷ்டாபிஷேகம் தங்க குடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவெள்ளறையை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, இந்த புனித நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருவெள்ளறையில் அமைந்துள்ள புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவிலில் இன்று (27-07-26) ஸ்ரீபங்கஜவல்லித் தாயார் ஸமேத புண்டரீகாக்ஷப் பெருமாள் ஆடி ஜ்யேஷ்டாபிஷேகம் தங்க குடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவெள்ளறையை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, இந்த புனித நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலை அருகே உள்ள வே.துறையூர், சிறுமருதூர் இடையே உள்ள கட்டிடத்தில் அரசு மதுபான கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேளாண் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள், வே. துறையூர் மதுரகாளியம்மன் கோவில் வழியாக சமயபுரம் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக அந்தப் பகுதியில் தொடர்ந்து மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதால் தினந்தோறும் பொதுமக்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகளும் மிகுந்த அச்சத்துடன் அந்த பாதையை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் அந்தப் பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஆகையால் மதுபான கடை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோடிக்கை மனு அளித்தனர். லால்குடி அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
    1
    திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலை அருகே உள்ள வே.துறையூர், சிறுமருதூர் இடையே உள்ள கட்டிடத்தில் அரசு மதுபான கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேளாண் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள், வே. துறையூர் மதுரகாளியம்மன் கோவில் வழியாக சமயபுரம் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக அந்தப் பகுதியில் தொடர்ந்து மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதால் தினந்தோறும் பொதுமக்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகளும் மிகுந்த அச்சத்துடன் அந்த பாதையை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் அந்தப் பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஆகையால் மதுபான கடை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோடிக்கை மனு அளித்தனர். லால்குடி அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
    user_Msd
    Msd
    திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், பதிவான மழையின் அளவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, புதுக்கோட்டையில் 31 மி.மீ, திருமயத்தில் 16.2 மி.மீ, கரம்பக்குடியில் 2.6 மி.மீ, ஆலங்குடியில் 2 மி.மீ மற்றும் மழையூரில் 1.4 மி.மீ என மொத்தம் 53.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக அப்பகுதிகளில் தற்போது சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
    1
    புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், பதிவான மழையின் அளவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, புதுக்கோட்டையில் 31 மி.மீ, திருமயத்தில் 16.2 மி.மீ, கரம்பக்குடியில் 2.6 மி.மீ, ஆலங்குடியில் 2 மி.மீ மற்றும் மழையூரில் 1.4 மி.மீ என மொத்தம் 53.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக அப்பகுதிகளில் தற்போது சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் கசவணம்பட்டியில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழா உற்சவம் நடைபெறுகிறது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் கசவணம்பட்டியில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழா உற்சவம் நடைபெறுகிறது.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    11 hrs ago
  • veu
    1
    veu
    user_ELKKIYVENTHAN
    ELKKIYVENTHAN
    கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் பிரிண்டர்ஸ் மற்றும் டிராவல்ஸ் கடை வைத்திருப்பவர் செல்வன். இவர் நேற்று வழக்கம்போல் தனது சுற்றுலா வேனை கடையின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த டீசல் டேங்கின் மூடி சேதமடைந்த நிலையில் கிழே கிடந்ததோடு டீசலும் தரையில் சிந்தி இருந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த செல்வன் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காடசிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் அதிகாலை 4 மணியளவில் வேனிற்கு முன்பு வந்து நிறுத்தப்பட்ட ஒரு காரில் இருந்து இறங்கி வரும் மர்ம நபர் ஒருவர் வேனின் அடிப்பகுதியில் லாவகமாக நுழைந்து செல்லும் காட்சியும், பின்னர் வேனில் இருந்து கேனில் டீசலை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. வண்டியின் டீசல் டேங்கில் முழு அளவு டீசல் இருந்த நிலையில் இன்று பார்த்தபோது பாதிக்கும் குறைவான டீசலே இருந்துள்ளது. 30 - 40 லிட்டர் டீசல் வரை திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து செல்வன் மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் டீசல் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த பகுதியில் அதிகாலையில் மர்ம நபர்கள் காரில் வந்து டீசலை திருடிச்சென்ற சம்பவம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் பிரிண்டர்ஸ் மற்றும் டிராவல்ஸ் கடை வைத்திருப்பவர் செல்வன். இவர் நேற்று வழக்கம்போல் தனது சுற்றுலா வேனை கடையின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த டீசல் டேங்கின் மூடி சேதமடைந்த நிலையில் கிழே கிடந்ததோடு டீசலும் தரையில் சிந்தி இருந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த செல்வன் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காடசிகளை ஆய்வு செய்துள்ளார்.

அதில் அதிகாலை 4 மணியளவில் வேனிற்கு முன்பு வந்து நிறுத்தப்பட்ட ஒரு காரில் இருந்து இறங்கி வரும் மர்ம நபர் ஒருவர் வேனின் அடிப்பகுதியில் லாவகமாக நுழைந்து செல்லும் காட்சியும், பின்னர் வேனில் இருந்து கேனில் டீசலை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. வண்டியின் டீசல் டேங்கில் முழு அளவு டீசல் இருந்த நிலையில் இன்று பார்த்தபோது பாதிக்கும் குறைவான டீசலே இருந்துள்ளது. 30 - 40 லிட்டர் டீசல் வரை திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து செல்வன் மணப்பாறை போலீசில் புகார் அளித்தார்.

சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் டீசல் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த பகுதியில் அதிகாலையில் மர்ம நபர்கள் காரில் வந்து டீசலை திருடிச்சென்ற சம்பவம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சினி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் மஞ்சினி செயலாளர் அழகனிடம் மனு அளித்தனர். இந்த மனுவில் சேலம் ஆத்தூர் மஞ்சினி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.
    1
    சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சினி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் மஞ்சினி செயலாளர் அழகனிடம் மனு அளித்தனர். இந்த மனுவில் சேலம் ஆத்தூர் மஞ்சினி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.