Shuru
Apke Nagar Ki App…
புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், பதிவான மழையின் அளவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, புதுக்கோட்டையில் 31 மி.மீ, திருமயத்தில் 16.2 மி.மீ, கரம்பக்குடியில் 2.6 மி.மீ, ஆலங்குடியில் 2 மி.மீ மற்றும் மழையூரில் 1.4 மி.மீ என மொத்தம் 53.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக அப்பகுதிகளில் தற்போது சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Mayilvaganan
புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், பதிவான மழையின் அளவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, புதுக்கோட்டையில் 31 மி.மீ, திருமயத்தில் 16.2 மி.மீ, கரம்பக்குடியில் 2.6 மி.மீ, ஆலங்குடியில் 2 மி.மீ மற்றும் மழையூரில் 1.4 மி.மீ என மொத்தம் 53.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக அப்பகுதிகளில் தற்போது சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், பதிவான மழையின் அளவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, புதுக்கோட்டையில் 31 மி.மீ, திருமயத்தில் 16.2 மி.மீ, கரம்பக்குடியில் 2.6 மி.மீ, ஆலங்குடியில் 2 மி.மீ மற்றும் மழையூரில் 1.4 மி.மீ என மொத்தம் 53.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக அப்பகுதிகளில் தற்போது சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.1
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருவெள்ளறையில் அமைந்துள்ள புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவிலில் இன்று (27-07-26) ஸ்ரீபங்கஜவல்லித் தாயார் ஸமேத புண்டரீகாக்ஷப் பெருமாள் ஆடி ஜ்யேஷ்டாபிஷேகம் தங்க குடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவெள்ளறையை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, இந்த புனித நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.1
- திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலை அருகே உள்ள வே.துறையூர், சிறுமருதூர் இடையே உள்ள கட்டிடத்தில் அரசு மதுபான கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேளாண் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள், வே. துறையூர் மதுரகாளியம்மன் கோவில் வழியாக சமயபுரம் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக அந்தப் பகுதியில் தொடர்ந்து மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதால் தினந்தோறும் பொதுமக்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகளும் மிகுந்த அச்சத்துடன் அந்த பாதையை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் அந்தப் பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஆகையால் மதுபான கடை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோடிக்கை மனு அளித்தனர். லால்குடி அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர்.1
- ராமநாதபுரம் மாவட்டம், திருவடனை வட்டத்தில் உள்ள ஆர் எஸ் மங்கலம் அண்ணா திடலுக்கு அருகே உள்ள கிளை நூலகம் தனியார் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ளது. இதனால் வாசகர்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், இந்த கிளை நூலகம் திறக்கப்படாததாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது மாடியில் இருப்பதால் வயதானவர்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் துரித நடவடிக்கை எடுத்து கிளை நூலகத்தை கீழ்தளத்தில் திறக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் அனைத்து வாசகர்களும் எளிதாக அணுக முடியும் என்று கருதப்படுகிறது.1
- மதுரை வில்லாபுரம் பகுதியில் இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து அரை மணி நேரம் நடனம் ஆடிய மிகவும் அரிதான காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அரிய காட்சியைக் கண்ட மக்கள் வியப்புற்றுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் இது ஒரு அற்புதமான நிகழ்வு என்று கூறுகின்றனர். இந்த வீடியோ மதுரை தெற்கு பகுதியில் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.1
- மதுரை அலங்காநல்லூர் - பாலமேடு மெயின்ரோடு ரெங்கராஜபுரத்தில் அமைந்துள்ள கிரிப்டோ மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் அனுபவம் மிகுந்த மற்றும் மக்கள் சேவையாற்றும் மருத்துவர்களான Dr. PAUL (M.B.B.S), Dr. MURUGAPANDI (M.B.B.S., D.C.H), Dr. HARIKARAN (M.S. Ortho) மற்றும் Dr. DIVYA (M.S. O.G) ஆகியோர் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றனர்.1
- திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் பிரிண்டர்ஸ் மற்றும் டிராவல்ஸ் கடை வைத்திருப்பவர் செல்வன். இவர் நேற்று வழக்கம்போல் தனது சுற்றுலா வேனை கடையின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த டீசல் டேங்கின் மூடி சேதமடைந்த நிலையில் கிழே கிடந்ததோடு டீசலும் தரையில் சிந்தி இருந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த செல்வன் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காடசிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் அதிகாலை 4 மணியளவில் வேனிற்கு முன்பு வந்து நிறுத்தப்பட்ட ஒரு காரில் இருந்து இறங்கி வரும் மர்ம நபர் ஒருவர் வேனின் அடிப்பகுதியில் லாவகமாக நுழைந்து செல்லும் காட்சியும், பின்னர் வேனில் இருந்து கேனில் டீசலை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. வண்டியின் டீசல் டேங்கில் முழு அளவு டீசல் இருந்த நிலையில் இன்று பார்த்தபோது பாதிக்கும் குறைவான டீசலே இருந்துள்ளது. 30 - 40 லிட்டர் டீசல் வரை திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து செல்வன் மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் டீசல் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த பகுதியில் அதிகாலையில் மர்ம நபர்கள் காரில் வந்து டீசலை திருடிச்சென்ற சம்பவம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆதியூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.1