logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில் தளபதி விஜய்யால் தமிழகத்தின் தலைவிதி மாறட்டும் என பேனர் வைத்து மகிழ்ச்சி! 2013 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பாக *தளபதியால்* *தமிழகத்தின்* *தலைவிதி* *மாறட்டும்* என்ற வாசகத்துடன் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக பேனர் வைக்கப்பட்டு மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இச்சங்கத்தின் மாநில பொருளாளர் ஹரிஹரசுதன் மாண்புமிகு முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு பேனர் வைத்துள்ள காட்சி படம் தான் இது . 2013 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கமானது பல வருடங்களாக போராடி வருகின்றனர். தங்களுக்கு பணி வழங்க வேண்டும் எனவும் கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசு தங்களை பலி வாங்கி விட்டது எனவும் அதிமுக அரசு ஆட்சி செய்த போது பணியில்லாமல் வேதனையோடு இருந்த ஆசிரியர்களுக்கு எதிராக அரசாணை 149 ஐ கொண்டு வந்தது. அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணிக்கு சேர கூடுதல் போட்டித் தேர்வு கட்டாயம் என அரசாணையை வெளியிட்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் அனைவருடைய வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமாக சீரழித்து விட்டது என்றும் திமுக அரசு அந்த அரசாணைகள் அனைத்தயும் ரத்து செய்வோம் என தேர்தல் அறிக்கையில் கூறி விட்டு பெண்கள் ஆண்கள் குழந்தைகள் குடும்பங்கள் என ஒட்டுமொத்தமாக வெயில் மழை என்று பாராமல் இச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமையில் கிட்டதட்ட 100 போராட்டங்களுக்கு மேல் போராடியும் கண்ணீர் விடடு கதறி அழுதும் கண்டுகொள்ளாத அரசாகவே திமுக அரசு கடந்து சென்றுவிட்டது . எனவும் எங்கள் வேதனைகள் சொல்லி மாளாது, என கண்ணீர் மல்க கூறுகின்றனர். பூமியே எங்கள் கண்ணீருக்கு சாட்சி !வானமே எங்கள் கதறலுக்கு சாட்சி! என வேதனையோடு விரக்தியோடு கூறுகின்றனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தளபதி மாண்புமிகு விஜய் அரசாவது எங்கள் நிலையை அறிந்து எங்களுக்கான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி ஆசிரியர் பணி தந்து உதவிட வேண்டுமாய் இச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஈட்டி வளவன் செய்தியாளர் இராமநாதபுரம் மாவட்டம்

1 hr ago
user_VALAVAN
VALAVAN
திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
1 hr ago
eff109bc-9757-4250-9e9c-74a845024849

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில் தளபதி விஜய்யால் தமிழகத்தின் தலைவிதி மாறட்டும் என பேனர் வைத்து மகிழ்ச்சி! 2013 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பாக *தளபதியால்* *தமிழகத்தின்* *தலைவிதி* *மாறட்டும்* என்ற வாசகத்துடன் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக பேனர் வைக்கப்பட்டு மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இச்சங்கத்தின் மாநில பொருளாளர் ஹரிஹரசுதன் மாண்புமிகு முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு பேனர் வைத்துள்ள காட்சி படம் தான் இது . 2013 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கமானது பல வருடங்களாக போராடி வருகின்றனர். தங்களுக்கு பணி வழங்க வேண்டும் எனவும் கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசு தங்களை பலி வாங்கி விட்டது எனவும் அதிமுக அரசு ஆட்சி செய்த போது பணியில்லாமல் வேதனையோடு இருந்த ஆசிரியர்களுக்கு எதிராக அரசாணை 149 ஐ கொண்டு வந்தது. அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணிக்கு சேர கூடுதல் போட்டித் தேர்வு கட்டாயம் என அரசாணையை வெளியிட்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் அனைவருடைய வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமாக சீரழித்து விட்டது என்றும் திமுக அரசு அந்த அரசாணைகள் அனைத்தயும் ரத்து செய்வோம் என தேர்தல் அறிக்கையில் கூறி விட்டு பெண்கள் ஆண்கள் குழந்தைகள் குடும்பங்கள் என ஒட்டுமொத்தமாக வெயில் மழை என்று பாராமல் இச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமையில் கிட்டதட்ட 100 போராட்டங்களுக்கு மேல் போராடியும் கண்ணீர் விடடு கதறி அழுதும் கண்டுகொள்ளாத அரசாகவே திமுக அரசு கடந்து சென்றுவிட்டது . எனவும் எங்கள் வேதனைகள் சொல்லி மாளாது, என கண்ணீர் மல்க கூறுகின்றனர். பூமியே எங்கள் கண்ணீருக்கு சாட்சி !வானமே எங்கள் கதறலுக்கு சாட்சி! என வேதனையோடு விரக்தியோடு கூறுகின்றனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தளபதி மாண்புமிகு விஜய் அரசாவது எங்கள் நிலையை அறிந்து எங்களுக்கான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி ஆசிரியர் பணி தந்து உதவிட வேண்டுமாய் இச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஈட்டி வளவன் செய்தியாளர் இராமநாதபுரம் மாவட்டம்

  • user_2013TNTET நலச்சங்கம்
    2013TNTET நலச்சங்கம்
    தமிழ்நாடு, इंडिया
    நன்றிகள் அண்ணா
    17 min ago
  • user_2013TNTET நலச்சங்கம்
    2013TNTET நலச்சங்கம்
    தமிழ்நாடு, इंडिया
    மிக்க நன்றி
    17 min ago
  • user_S. Mahapandi
    S. Mahapandi
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு
    தளபதியால் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும்..
    28 min ago
  • user_T.Mariyadass
    T.Mariyadass
    திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தமிழ்நாடு
    தளபதியால் தமிழகத்தின் தலைவிதி மாறட்டும்.
    40 min ago
  • user_VALAVAN
    VALAVAN
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு
    4418aed0-5e5f-4369-825c-e72cf4b9b57d
    1 hr ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • திருவாடானை முதலமைச்சர் விஜய் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி ஆதரவு தெரிவித்தார்கள்
    1
    திருவாடானை முதலமைச்சர் விஜய் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள்
வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி ஆதரவு தெரிவித்தார்கள்
    user_Namma Ooru Adanai
    Namma Ooru Adanai
    Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றவை கொண்டாடும் விதமாக சிவகங்கை அரண்மனை வாசலில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பேருந்து நிலையம் வரை தவெக வினர் பேரணியாக சென்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
    1
    சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். 
தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றவை கொண்டாடும் விதமாக சிவகங்கை அரண்மனை வாசலில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி  பேருந்து நிலையம் வரை தவெக வினர்  பேரணியாக சென்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    1 hr ago
  • அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் வாழ்த்து பதாகைகளும் வைத்திருந்தனர் இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜோசப் விஜய் பதவி ஏற்பிற்காக கட்சி நிர்வாகிகள் வைத்திருந்த வாழ்த்துப் பேனர்கள் உள்பட அரசியல் கட்சி பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்று போலீசார் அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். இதனையடுத்து தவெக நிர்வாகிகள் தாங்கள் வைத்த பதாகைகளை தாங்களே அகற்றினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவையடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது
    3
    அன்னவாசல்  பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். 
அன்னவாசல்  பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். 
தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் வாழ்த்து பதாகைகளும் வைத்திருந்தனர் 
இந்தநிலையில்  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜோசப் விஜய் பதவி ஏற்பிற்காக கட்சி நிர்வாகிகள் வைத்திருந்த வாழ்த்துப் பேனர்கள் உள்பட அரசியல் கட்சி பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்று போலீசார் அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். 
இதனையடுத்து தவெக நிர்வாகிகள் தாங்கள் வைத்த பதாகைகளை தாங்களே அகற்றினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவையடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
    1
    TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள கன்னுடைய அய்யனார், சாத்த பிள்ளை அய்யனார் கோவிலில் சித்திரை மாத தேர் திருவிழா கண்ணைக் கவரும் வானவேடிக்கையுடன் மிக விமர்சையாக நடந்தது திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் கிராமத்தில் கண்ணுடைய ஐயனார், சாத்தப்பிள்ளை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இந்த நிலையில் அந்த கோவிலில் சித்திரை மாததேர் திருவிழா நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பர முறைப்படி பழமை மாறாமல் தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் அவர்கள் வீட்டு வாசலில் பசு மாட்டின் சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வராட்டியில் பாத்திரம் வைத்து பச்ச அரிசி மற்றும் பசும்பால் இட்டு பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக மே மாதம் 2 ஆம் தேதி காப்பு கட்டி அதன் பிறகு 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கண்ணுடைய அய்யனார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிராம சாவடியிலிருந்து சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது 6ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும் 7 ஆம் தேதி அன்னபட்சி மற்றும் கொள்ளு திண்ணி குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது. 8ஆம் தேதி இரவு காவு பிடித்து காவு எரிதல் 9 ஆம் தேதி இரவு சப்பாரத்தில் சுவாமிகள் வீதி உலா 10ஆம் பச்ச பட்டினியும் 11ம் தேதியான அதிகாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு தேர் வடம் பிடித்தலும் அதன் பிறகு முனியாண்டவர் வீதி உலா மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிகண்ணுடைய அய்யனார் மற்றும் சாத்த பிள்ளை அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர் வலம் வந்த பிறகு கண்ணை கவரும் மாணவேடிக்கை விமர்சையாக நடைபெற்றது
    1
    கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள கன்னுடைய அய்யனார், சாத்த பிள்ளை அய்யனார் கோவிலில் சித்திரை மாத தேர் 
திருவிழா கண்ணைக் கவரும்  வானவேடிக்கையுடன்  மிக விமர்சையாக நடந்தது

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் கிராமத்தில் கண்ணுடைய ஐயனார், சாத்தப்பிள்ளை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது.
இந்த நிலையில் அந்த கோவிலில் சித்திரை மாததேர் திருவிழா  நடந்தது.
தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பர முறைப்படி பழமை மாறாமல் தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் அவர்கள் வீட்டு வாசலில் பசு மாட்டின் சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வராட்டியில் பாத்திரம் வைத்து பச்ச அரிசி மற்றும் பசும்பால் இட்டு  பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர்.
முன்னதாக மே மாதம் 2 ஆம் தேதி காப்பு கட்டி அதன் பிறகு 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கண்ணுடைய அய்யனார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது.
அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிராம சாவடியிலிருந்து சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது 6ஆம் தேதி   இரவு யானை வாகனத்திலும் 7 ஆம் தேதி அன்னபட்சி   மற்றும் கொள்ளு திண்ணி குதிரை  வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது.
8ஆம் தேதி  இரவு காவு பிடித்து காவு எரிதல் 9 ஆம் தேதி  இரவு சப்பாரத்தில் சுவாமிகள் வீதி உலா 10ஆம் பச்ச பட்டினியும்
11ம் தேதியான  அதிகாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு தேர் வடம் பிடித்தலும் அதன் பிறகு முனியாண்டவர் வீதி உலா மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிகண்ணுடைய அய்யனார் மற்றும் சாத்த பிள்ளை அய்யனார் பக்தர்களுக்கு  காட்சியளித்தனர்.
தேர் வலம் வந்த பிறகு கண்ணை கவரும் மாணவேடிக்கை  விமர்சையாக நடைபெற்றது
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    53 min ago
  • அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்பட வேண்டும் என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை சபாநாயகரிடம் வழங்கினர்.
    1
    அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்பட வேண்டும் என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை சபாநாயகரிடம் வழங்கினர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    48 min ago
  • திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனை பயன்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்த இந்தக் கூட்டத்தில் அலுவலர்களின் அலட்சியம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
    1
    திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனை பயன்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்த இந்தக் கூட்டத்தில் அலுவலர்களின் அலட்சியம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    8 hrs ago
  • சிங்கம்புணரி அரசு மருத்துவமனை குடியிருப்பில் அரசமரம் முறிந்து விழுந்து பரபரப்பு – கை குழந்தைகளுடன் அலறியடித்து ஓடிய பணியாளர்கள்! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு மருத்துவமனை பணியாளர் குடியிருப்பின் மீது பழமையான அரசமரத்தின் பெரிய கிளை திடீரென முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டிற்குள் இருந்த பெண்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கை குழந்தைகளை தூக்கிக்கொண்டு பதற்றத்துடன் வெளியே ஓடியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பே மரக்கிளைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நடந்ததாக மருத்துவப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது குடியிருப்பு சேதமடைந்த நிலையில், மரத்தை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    சிங்கம்புணரி அரசு மருத்துவமனை குடியிருப்பில் அரசமரம் முறிந்து விழுந்து பரபரப்பு – கை குழந்தைகளுடன் அலறியடித்து ஓடிய பணியாளர்கள்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு மருத்துவமனை பணியாளர் குடியிருப்பின் மீது பழமையான அரசமரத்தின் பெரிய கிளை திடீரென முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டிற்குள் இருந்த பெண்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கை குழந்தைகளை தூக்கிக்கொண்டு பதற்றத்துடன் வெளியே ஓடியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பே மரக்கிளைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நடந்ததாக மருத்துவப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது குடியிருப்பு சேதமடைந்த நிலையில், மரத்தை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.