Shuru
Apke Nagar Ki App…
திருவாடானை முதலமைச்சர் விஜய் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி ஆதரவு தெரிவித்தார்கள்
Namma Ooru Adanai
திருவாடானை முதலமைச்சர் விஜய் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி ஆதரவு தெரிவித்தார்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற பஞ்சபூத உலக சாதனைகள் சிலம்பம் நிகழ்ச்சியில் மாணவர்கள் அசத்தினர். அவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியதுடன், தொடர்ந்து 2 மணி நேரம் நின்று சுழற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.1
- தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏ'வாக பதவியேற்க வந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பேரவை செயலாளர் சீனிவாசன் இந்த முடிவை எடுத்தார். சான்றிதழை சமர்ப்பித்த பிறகு அவர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- தமிழக சட்டசபையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெரியசாமி பதவியேற்றார். முன்னாள் தமிழக அமைச்சரான அவர், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.1
- தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி பேருந்து நிலையம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்கும்.1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* *தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழத்தில் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் "தமிழ்நாடு சிஎம் 2026" என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இடுப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழம் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் தமிழ்நாடு சிஎம் என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது சிவகங்கை மாவட்டம் பெரிய கிளுகிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கந்தசாமி இவர் சிவகங்கை மாவட்டத்தில் சாத்தரசன்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் சாலை பணியை 2.5 கோடி மதிப்பில் மேற்கொண்டார். கடந்த ஓராண்டாக பல்வேறு கட்டங்களில் ஒப்பந்த தொகை பெறப்பட்டாலும் எஞ்சிய 18 லட்ச ரூபாய் தொகையை பெற நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் -யை சந்தித்து கேட்டு வந்துள்ளார் . அதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு அலைக்கழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கந்தசாமி சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார் . லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ஒரு லட்ச ரூபாயை கந்தசாமி மூலமாக இன்று உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் - யை சந்தித்து வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது இதனால் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது1
- தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் பேருந்து ஓட்டிய 3 ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா ₹15,000 அபராதம் விதிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. இம்முடிவை மக்கள் வரவேற்றுள்ள நிலையில், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.1
- கௌமாரியம்மன் கோவில் அருகே ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது தேனி அருகே உள்ள வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை முதல் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வருகை தர உள்ளனர் இதனால் கோவில் அருகே உள்ள மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மாணவர்கள் பொழுதுபோக்குக்காக ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது1