கொடைக்கானலில் சாலை ஓரக் கடைகளின் பூட்டை உடைத்து திருடிய இருவரை போலீஸார் கைது செய்தனர் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரி சாலையில் சாலையோரம் அமைந்துள்ள பெட்டிக்கடைகளில் கடந்த 16.08.2026 அன்று இரவு திருட்டு நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உத்தரவின் பேரில் கொடைக்கானல் காவல் துணைக்கண்காணிப்ப்பார் காயத்திரி மேற்பார்வையில் கொடைக்கானல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் சார்பு ஆய்வாளர் சிவராஜா தலைமையிலான போலீசார் எதிரிகளை கைது செய்யும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். காவல் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் சார்பு ஆய்வாளர் சிவராஜா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் கார்த்திகேயன் (21) மற்றும் புதுச்சேரி, மானூர், பாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சிவா (23) ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுர்ந்து வந்ததும் இருவரும் ஏரி சாலையில் உள்ள பல பெட்டிக்கடைகளில் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. திருடப்பட்ட பொருட்களில் ரூ.1,150 ரொக்கம், 5 லிட்டர் ஐஸ்கிரீம், 2 பலூன் சுடும் ஏர்கன்கள், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர், 5 முட்டைத் தட்டுகளில் சுமார் 150 முட்டைகள், 7 பாக்கெட் பிரெட், 5 சோடா டிரேக்களில் சுமார் 100 சோடா பாட்டில்கள், 5 பாக்கெட் தின்பண்டங்கள் மற்றும் 60 சன் கிளாஸ்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். விசாரணையில் இவர்கள் மொத்தம் 07 சாலையோர பெட்டிக்கடைகளை உடைத்து திருடியுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 16.08.2026 அன்று இரவு இதே ஏரி சாலை பகுதியில் உள்ள சாலையோர பெட்டிக்கடைகளின் பூட்டுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடைக்கானலில் சாலை ஓரக் கடைகளின் பூட்டை உடைத்து திருடிய இருவரை போலீஸார் கைது செய்தனர் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரி சாலையில் சாலையோரம் அமைந்துள்ள பெட்டிக்கடைகளில் கடந்த 16.08.2026 அன்று இரவு திருட்டு நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உத்தரவின் பேரில் கொடைக்கானல் காவல் துணைக்கண்காணிப்ப்பார் காயத்திரி மேற்பார்வையில் கொடைக்கானல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் சார்பு ஆய்வாளர் சிவராஜா தலைமையிலான போலீசார் எதிரிகளை கைது செய்யும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். காவல் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் சார்பு ஆய்வாளர் சிவராஜா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் கார்த்திகேயன் (21) மற்றும் புதுச்சேரி, மானூர், பாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சிவா (23) ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுர்ந்து வந்ததும் இருவரும் ஏரி சாலையில் உள்ள பல பெட்டிக்கடைகளில் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. திருடப்பட்ட பொருட்களில் ரூ.1,150 ரொக்கம், 5 லிட்டர் ஐஸ்கிரீம், 2 பலூன் சுடும் ஏர்கன்கள், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர், 5 முட்டைத் தட்டுகளில் சுமார் 150 முட்டைகள், 7 பாக்கெட் பிரெட், 5 சோடா டிரேக்களில் சுமார் 100 சோடா பாட்டில்கள், 5 பாக்கெட் தின்பண்டங்கள் மற்றும் 60 சன் கிளாஸ்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். விசாரணையில் இவர்கள் மொத்தம் 07 சாலையோர பெட்டிக்கடைகளை உடைத்து திருடியுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 16.08.2026 அன்று இரவு இதே ஏரி சாலை பகுதியில் உள்ள சாலையோர பெட்டிக்கடைகளின் பூட்டுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.1
- திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- சுந்தரேஸ்வரர்சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடராஜர் பெருமானை தரிசித்துச் சென்றனர்* தேனி அருகே பங்களாமேடு பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி தினத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள் பாலிக்கும் நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தூபம் காட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டிய பின்பு ஷோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நடராஜர் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டை கண்டு தரிசித்துச் சென்றனர்1
- *வருசநாடு மலைக்கிராமங்களில் நேரில் களமிறங்கிய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர்... "மக்களை பிரதிவாதியாக சேர்க்காமல் ஒருதலைப்பட்சமாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது... நோட்டீஸ் வினியோகம் மற்றும் நில அளவீடு பணிகளை நிறுத்த வைக்க வேண்டும்... மேகமலை மக்களுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யபடும்... என வழக்கறிஞர்கள் பேட்டி தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக்கிராமப் பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்ட உண்மை கண்டறியும் குழுவினர் வருசநாடு மற்றும் சுற்றுவட்டாரம் மலை கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர். மலை கிராம பொதுமக்கள் விவசாயிகள் தங்கள் தரப்பு வாதங்களை அவர்களிடம் முன் வைத்தனர். விவசாயிகளிடம் விவரங்கள் கேட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் பாரதி கூறியதாவது, "பல தலைமுறைகளாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மலைக்கிராம மக்களை நீதிமன்ற வழக்கில் ஒரு தரப்பாகவோ அல்லது பிரதிவாதியாகவோ சேர்க்காமல், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மட்டும் காரணம் காட்டி ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தி வெளியேற்ற முயற்சிப்பது மாபெரும் அநீதியாகும்; வனவாசிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசமைப்பு விதியை நிலைநிறுத்தாமல் வனத்துறை மக்களை அச்சுறுத்துவது ஏற்க முடியாதது. வனத்தின் முதல் பாதுகாவலர்களே அங்கு வாழும் மக்கள் தான் என்பதை அரசு உணர வேண்டும். எனவே, வனத்துறை மேற்கொண்டு வரும் 15 நாள் வெளியேற்ற நோட்டீஸ் விநியோகம், நில அளவீடு பணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் 118 பேர் மீதான துறை ரீதியான நடவடிக்கை அச்சுறுத்தல்களை மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; மேலும், இப்பகுதி மக்களின் பாரம்பரிய உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மறுஆய்வு மனு (Review Petition) அல்லது இடையீட்டு மனுவை தாக்கல் செய்து மக்கள் தொடர்ந்து அங்கேயே வாழ அரசு உரிய சட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பிலும் மக்களுக்காக நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.1
- சிங்கம்புணரி அருகே பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறைக்காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மார்ச் முதல் ஆறு மாதங்களாக கடுமையான வெப்பத்தால் வாடிய மக்களுக்கு இன்று மாலை திடீர் மழை நிவாரணம் அளித்தது. கோழிக்குடிபட்டி, ஆறுகுடிபட்டி, சூரக்குடி, அய்யாபட்டி, கரடிபட்டி, வையாபுரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.1
- குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத் தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்1
- फ़िरोज़ाबाद में बंजारा समाज पर धारदार हथियारों से हमला, बाल-बाल बची जान पीड़ितों ने थाना एका में दी तहरीर कार्रवाई की मांग फ़िरोज़ाबाद जनपद के एका थाना एका थाना के क्षेत्र के हरी सिंह पुर गाँव में बंजारा समाज की महिलाओं एवं लोगों पर दबंगों द्वारा धारदार हथियारों से जानलेवा हमला करने का मामला सामने आया है जहां बंजारा समाज को दबाने वाली बात सामने आयी है घटना का एक वीडियो भी सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें महिलाएं और बच्चे सड़क पर भागते हुए दिखाई दे रहे हैं पीड़ितों के अनुसार दिनांक 22 अगस्त 2026 को दोपहर के समय गाँव के ही कुछ लोग लाठी-डंडा और धारदार हथियार लेकर उनके घरों पर आ गए और गाली-गलौज करते हुए हमला कर दिया अचानक हुए इस हमले से पूरे गाँव में अफरा-तफरी मच गई। महिलाओं और बच्चों ने भाग कर किसी तरह अपनी जान बचाई पीड़ित गांव वालो का आरोप है कि वे गरीब बंजारा समाज से हैं इसलिए उन्हें आए दिन डराया-धमकाया जाता है। इस घटना के बाद से पूरा समाज दहशत में है ग्रामीणों ने बताया कि बड़ी मुश्किल से उन लोगों ने कर मामला शांत कराया गया इस संबंध में पीड़ित गाँव के लोगों ने थाना एका पुलिस को लिखित तहरीर दी है और आरोपियों के खिलाफ सख्त कार्रवाई व सुरक्षा की मांग की है लिखे हुए आरोपी बार बार गांव पर चढ़ाई करते हुए जान से मारने की धमकी दे रहे हैं पुलिस द्वारा मामले की जांच ही नहीं की जा रही है। थाना प्रभारी एका से बात करने पर बताया कि तहरीर मिलने पर जाँच कर उचित कार्रवाई की जाएगी2
- சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எரமநாயக்கன்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்படி சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது1