Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறனர்
RAJA news
திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறனர்
More news from Dindigul and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சாலையில் உணவு மற்றும் உணவுகள் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பழைய வத்தலகுண்டு சாலையில் அமைந்துள்ள உணவு மற்றும் வணிக கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது உணவுப் பொருட்களின் தரத்தை குறித்து ஆய்வு செய்தார்1
- திண்டுக்கல் அருகே உணவகத்தில் மோதல்: உண்மை தகவலை மறைத்து தவறான புகார் அளித்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு பார்சல் வாங்கச் சென்ற வேலாம்பட்டியைச் சேர்ந்த நபர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் நடந்த சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தையுடன் உணவகத்திற்கு சென்ற அந்த நபர், 3 பார்சல் உணவு வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்த பணம் குறைவாக இருந்ததால், அங்கு பணியாற்றும் தனது உறவினரிடம் இரண்டு பார்சலுக்கான பணத்தை கொடுத்து, மீதமுள்ள தொகையை வீட்டிற்கு சென்று குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு மீண்டும் கொண்டு வந்து தருவதாக கூறியதாக கூறப்படுகின்றது. இதற்கு அங்கு பணியாற்றிய உறவினரான ஊழியர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உணவக உரிமையாளர்களில் ஒருவர் முழு பணத்தையும் செலுத்திவிட்டு பார்சலை வாங்கிச் செல்லுமாறு கூறியதாகவும், அதற்கு ஊழியர் "நான் பணத்தை கொடுத்து விடுகிறேன்" என்று தெரிவித்தும் உரிமையாளர் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, "இரண்டு பார்சல் மட்டும் போதும், ஒன்றை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு அந்த நபர் கிளம்ப முயன்றபோது, மூன்று பார்சல்களுக்கு பணம் கொடுத்து விட்டு எடுத்துச் செல் மூன்று கட்டச் சொல்லிவிட்டு இரண்டை மட்டும் வாங்கிச் செல்வதா என்று கூறி தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை சிலர் தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அங்கு நடந்த உரையாடல்களும் கல்லாவில் உள்ள கேமராவில் பதிவு ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உணவகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு நடந்த உரையாடல்கள் வீடியோவாக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அந்த பதிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, மது போதையில் வந்து தகராறு செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, அதனை அடிப்படையாக கொண்டு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் இரு தரப்பினரின் விளக்கங்களையும் பெற்று உரிய விசாரணை நடத்தாமல் தவறான தகவல்களை பரப்பாமல் . தீர விசாரித்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தாராபுரத்தில் இடைத்தேர்தல் தேர்தல் புறக்கணிப்பு பொதுமக்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மிகவும் பெரிய ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சி பகுதியில் உள்ள மெட்ரோ சிட்டி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ சிட்டி பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதிகள் சாலை வசதி, சாக்கடை வசதி மற்றும் பெரு விளக்கு உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் வருவதை ஒட்டி மெட்ரோ சிட்டியை சேர்ந்த பொதுமக்கள் 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மெட்ரோ சிட்டி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் நேற்று இரவு பெய்த லேசான மலைக்கு சாலையில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பதாகைகளை வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தாராபுரம் நகரின் 16 ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சியாகும் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியானது தாராபுரம் நகரோடு இணைந்து காணப்படும் ஊராட்சி ஆகும் இந்த ஊராட்சியில் ஏற்கனவே என் ஏ எஸ் நகர்,கணபதி நகர்,வள்ளலார் நகர்,சுபலட்சுமி நகர், கோகுலம் காலனி ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தி தண்ணீர் சாலை வசதி வேண்டும் என போராடி வந்த நிலையில் தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மெட்ரோ சிட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000க்கும் அதிகமானோர் வாழ்ந்து வரும் நிலையில் மெட்ரோ சிட்டிக்கு தேவையான சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி, மற்றும் குப்பை தொட்டி என எந்த அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது இது குறித்து அனைத்து துறை அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் எம்எல்ஏக்கள், அமைச்சர் வரை மனு கொடுத்தும் 15 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாமலும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் இருந்து வருகிறோம் ஆகவே எங்கள் பகுதி மக்கள் யாருக்கு ஓட்டு போட மாட்டோம் எங்கள் பகுதிக்கு எந்த அரசியல் கட்சியினரும் ஓட்டு கேட்டு வரக்கூடாது எனவும் கூறுகின்றனர்1
- கருப்பசாமி மற்றும் பச்சை நாச்சியம்மன் கோவிலில் புதிய கட்சிகளை பிரதிஷ்டை விழா அருள்மிகு ஊத்தாம் பாறை கருப்பசாமி மற்றும் பச்சை நாச்சியம்மன் கோவிலில் புதிய கட்சிகளை பிரதிஷ்டை விழா மற்றும் கும்பாபிஷேக விழா. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரண்மனையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஊத்தாம் பாறை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வடக்கு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு போடிநாயக்கனூரை ஆண்ட ராஜ கம்பளத்தார் அரண்மனை வம்சாவளியினர் இந்த கோவிலை உருவாக்கினர். வடக்கு மலை எல்லைப் பகுதி காவல் தெய்வமாக விளங்கும் இந்த உத்தம்பாறை கருப்பசாமி இப்பகுதியில் பாறை வெடித்து உருவானதாக இப்பகுதியில் மக்கள் நம்பிக்கையில் உள்ளது. போடிநாயக்கனூர் அரண்மனைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் 350 ஆண்டுகளாக மண்ணால் உள்ள கருப்புசாமி சிலை மற்றும் காவல் தெய்வங்கள் பச்சை நாச்சியம்மன் சிலை உருவாக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. நிலையில் கோயில் புதிதாக கட்டமைக்கப்பட்டு புதிய கருவறை உருவாக்கப்பட்டு ராஜகம்பளத்தார் முறைப்படி போதகப் புல்லால் கூரை வேயப்பட்டது. இன்று இருந்த மண் சிலை அகற்றப்பட்டு புதிதாக கருப்பணசாமிக்கு கற்சிலை உருவாக்கப்பட்டு கருவறையில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலை அமாவாசை திதியில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது. ராஜகம்பளத்தார் முறைப்படி பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பகிர்ந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மரத்தில் குடி கொண்டிருக்கும் பச்சை நாச்சி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது வனப்பகுதியில் உள்ள கோயில் என்பதால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.1
- ஆண்டிப்பட்டி சந்தைகளில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் விவசாயம் பரவலாக செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதி சந்தைகளுக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதேபோல், வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழக சந்தைகளுக்கு வர வேண்டிய சின்ன வெங்காய வரத்து தற்போது சரிவடைந்துள்ளதால், தேவையும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டிப்பட்டி சந்தைகளில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சந்தைகளில் விலை தாறுமாறாக ஏறி உள்ள போதிலும், உற்பத்தி செய்த சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பி பணம் பறிக்க முயற்சி: கரூர் தொழிலதிபர் ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதுடன், பணம் பறிக்க நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் திருப்பூரில் கார்மென்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கரீமா என்ற பெண் சமூக வலைதளத்திற்கு அளித்த பேட்டியில், சாகுல் ஹமீது தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 7-ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாகுல் ஹமீது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கரீமா புகார் அளித்துள்ளார். அப்போது ஊடகங்களிடம் பேசிய அவர், சாகுல் ஹமீதின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாகவும் சாகுல் ஹமீது தனது புகாரில் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் தூண்டுதலின் பேரிலேயே தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், தன்னிடம் இருந்து பணத்தை பறிக்கும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மேலும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல்களால் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாக கூறப்படும் கரீமா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சாகுல் ஹமீது புகார் மனு அளித்துள்ளார்.2
- TNEB SE அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தேனி NRT சாலையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார் திட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த முறையில் பணியமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்4
- திண்டுக்கல் முத்தாலம்மன் கோவில் திருவிழாவாக விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது1