ஆண்டிப்பட்டி சந்தைகளில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் விவசாயம் பரவலாக செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதி சந்தைகளுக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதேபோல், வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழக சந்தைகளுக்கு வர வேண்டிய சின்ன வெங்காய வரத்து தற்போது சரிவடைந்துள்ளதால், தேவையும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டிப்பட்டி சந்தைகளில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சந்தைகளில் விலை தாறுமாறாக ஏறி உள்ள போதிலும், உற்பத்தி செய்த சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி சந்தைகளில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் விவசாயம் பரவலாக செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதி சந்தைகளுக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதேபோல், வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழக சந்தைகளுக்கு வர வேண்டிய சின்ன வெங்காய வரத்து தற்போது சரிவடைந்துள்ளதால், தேவையும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டிப்பட்டி சந்தைகளில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சந்தைகளில் விலை தாறுமாறாக ஏறி உள்ள போதிலும், உற்பத்தி செய்த சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தேனி, கம்பத்தில் அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மற்றும் கம்பம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்ட பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்1
- மறைந்த பட்டிமன்ற நடுவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள். மதுரையில் ஞான ஒளிபுரம் பகுதியில் வசித்த பிரபல பட்டி மன்ற நடுவர், நடிகர் மற்றும் முன்னாள் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) அவர்கள் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் காலமானார். அன்னாரின் உடல் ஞான ஒளிபுரம் இல்லத்திற்கு இன்று மாலை 3.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. நாளை (செப்.12) காலை உடல் தகனம் செய்யப்படும் என தெரிகிறது. இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் அப் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.1
- திண்டுக்கல் முத்தாலம்மன் கோவில் திருவிழாவாக விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது1
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் அதிருப்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 32 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதியாக உள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதிகளான இந்திரா நகர், அன்னை சத்யா நகர், மாதா நகர், வள்ளுவர் நகர் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக கடைகள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இப்பகுதியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடைவதுடன், தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குப்பையை கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மாயை குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை1
- விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த மாதம் முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவில் நிரந்தர மின்சார வசதி இல்லாததால் மின்வெட்டு ஏற்படும் நேரமெல்லாம் நோயாளிகள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது... சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களை கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நவீன சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தமிழக முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி காணொளி காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ரயில்வே தண்டவாளம் அருகில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால், ரயில்வே நிர்வாகத்தில் முறைப்படி அனுமதி வாங்க முடியாமல் இந்த கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறப்படாமலும் புதிய மின் இணைப்பு கொடுக்கப்படாமலும் அவசரகதியில் திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6 தளங்களைக் கொண்ட இந்த சிகிச்சை மையக் கட்டிடத்தில் தரைதளம் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தனி மின் இணைப்பு வழங்கப்படாமல் ஏற்கனவே உள்ள மின் இணைப்பை பயன்படுத்தி வருவதால் மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் புதிய நவீன சிகிச்சை மையத்திற்கு ஜெனரேட்டரை பயன்படுத்த முடியாமல் மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சிகிச்சையில் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்த சிகிச்சை மையத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் முன்பதிவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு தனியாக நிரந்தர மின் இணைப்பு பெற்ற பின்னர் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் செயல்படுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தாராபுரத்தில் இடைத்தேர்தல் தேர்தல் புறக்கணிப்பு பொதுமக்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மிகவும் பெரிய ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சி பகுதியில் உள்ள மெட்ரோ சிட்டி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ சிட்டி பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதிகள் சாலை வசதி, சாக்கடை வசதி மற்றும் பெரு விளக்கு உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் வருவதை ஒட்டி மெட்ரோ சிட்டியை சேர்ந்த பொதுமக்கள் 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மெட்ரோ சிட்டி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் நேற்று இரவு பெய்த லேசான மலைக்கு சாலையில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பதாகைகளை வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தாராபுரம் நகரின் 16 ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சியாகும் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியானது தாராபுரம் நகரோடு இணைந்து காணப்படும் ஊராட்சி ஆகும் இந்த ஊராட்சியில் ஏற்கனவே என் ஏ எஸ் நகர்,கணபதி நகர்,வள்ளலார் நகர்,சுபலட்சுமி நகர், கோகுலம் காலனி ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தி தண்ணீர் சாலை வசதி வேண்டும் என போராடி வந்த நிலையில் தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மெட்ரோ சிட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000க்கும் அதிகமானோர் வாழ்ந்து வரும் நிலையில் மெட்ரோ சிட்டிக்கு தேவையான சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி, மற்றும் குப்பை தொட்டி என எந்த அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது இது குறித்து அனைத்து துறை அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் எம்எல்ஏக்கள், அமைச்சர் வரை மனு கொடுத்தும் 15 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாமலும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் இருந்து வருகிறோம் ஆகவே எங்கள் பகுதி மக்கள் யாருக்கு ஓட்டு போட மாட்டோம் எங்கள் பகுதிக்கு எந்த அரசியல் கட்சியினரும் ஓட்டு கேட்டு வரக்கூடாது எனவும் கூறுகின்றனர்1
- தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு! தமிழக அரசின் சார்பில் 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழக அரசு சார்பில் இலவசமாகத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனியாக ஓர் அறையை ஒதுக்கி, அதில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டு, அதற்கெனப் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தேனி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று அரசு மருத்துவமனைகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காகத் தேனி மாவட்டக் கண்காணிப்பு அலுவலராகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டக அறையை, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.வைத்தியநாதன் அவர்களுடன் இணைந்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இத்திட்டத்திற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலி குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின்னர், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளையும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் ஒன்றிய அரசை கண்டித்து திக சார்பில் ஆர்ப்பாட்டம் ஜாதி வாரி கணக்கெடுப்பதில் ஏற்படுத்த நினைக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழகமாவட்ட தலைவர் சுருளிராஜு வரவேற்புரை ஆற்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆர்ப்பாட்டத்தில் துவக்க உரையும் நிகழ்த்தினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுத்தறிவாளர் கழக செயலாளர் மோகன் மாவட்ட துணைச் செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழக பேச்சாளர் கண்ணன் எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக் போடி முகமது ஆரிப் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் நீல கனலன் ஆதித்தமிழர் பேரவை செய்தி தொடர்புத்துறை சுரேஷ் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி புரட்சி தமிழர் கட்சி மாநில அமைப்பாளர் அருந்தமிழர் அரசு மாவட்ட செயலாளர் சின்னமுத்து மாநில பொருளாளர் மணிகண்டன் திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தருண் திராவிட புரட்சி கழக செயலாளர் சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்1
- திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறனர்1