ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் அதிருப்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 32 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதியாக உள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதிகளான இந்திரா நகர், அன்னை சத்யா நகர், மாதா நகர், வள்ளுவர் நகர் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக கடைகள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இப்பகுதியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடைவதுடன், தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குப்பையை கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மாயை குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் அதிருப்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 32 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதியாக உள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதிகளான இந்திரா நகர், அன்னை சத்யா நகர், மாதா நகர், வள்ளுவர் நகர் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக கடைகள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இப்பகுதியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடைவதுடன், தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குப்பையை கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மாயை குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை
- தேனி, கம்பத்தில் அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மற்றும் கம்பம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்ட பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்1
- பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவு தரம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்தனர் தேனி மாவட்டம் தலைநகரம் நகராட்சி சமுதாய சமையல் கூடத்தில் பெருந்தலைவர் காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முன்னோட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டனர் அதனைத் தொடர்ந்து தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பாக பள்ளிக்குச் சென்று அங்கு மாணவர்களை வழங்கக்கூடிய உணவு தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டனர் மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கக்கூடிய உணவு தரமான முறையில் வழங்க வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் குறித்து அறிவுறுத்தினர் இந்த ஆய்வில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்1
- புதிய பயணிகள் நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த மேயர். மதுரை மாநகராட்சி 85-வது வார்டு தவுட்டு சந்தை பேருந்து நிறுத்தத்தில் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய நிழற்குடையினன பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் (பொறுப்பு) நாகராஜன் அவர்கள் இன்று (செப்.11) காலை திறந்து வைத்தார். அருகில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, பகுதி செயலாளர் ஜோசப் தனிஸ்லாஸ்,வட்டச் செயலாளர்கள் முருகன், நாட்டாமை ஜெயக்குமார், செல்வகுமரன், பால் கடை கிருஷ்ணன், தயிர்கடை சங்கர் ஆசீர்வாதம்,சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1
- மதுரை கே.கே.நகரில் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு சாந்தோம் கல்வி தொண்டு அறக்கட்டளையின் பயிற்சி மாணவர்கள் இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர் இந்த பேரணியை அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சைலேந்திர சிங் மற்றும் கண் மருத்துவர் சிந்துஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் இந்த பேரணி கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது இந்தப் பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் “கண்தானம் செய்வோம் – பார்வையற்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்பாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சிந்துஜா அவர்கள் கூறியதாவது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும் என்பதையும், கண்தானம் குறித்த தவறான நம்பிக்கைகளை அகற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சைலேந்திர சிங் அவர்கள் கூறியதாவது தமிழக அளவில் பார்வை குறைபாடு உள்ள நபர்கள் அதிக அளவில் உள்ளனர் ஆனால் கருவிழி தானம் செய்ய முன்வருவோர் குறைவாக உள்ளனர் ஒருவர் இறந்த பின்னர் அவரது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் இரு பார்வையற்ற நபர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால், பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால் கண்பார்வை இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்தார் மாணவிகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி, கண்தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்தது. கண்தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அதிகமானோர் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் அகர்வால் கண் மருத்துவமனை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் லட்சுமணன் மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்1
- தம்பி விஜய் நீங்க சொன்னது உண்மைதான் நூலகத்துல எல்லாம் இருக்கு போய் முழுசா படிங்க1
- தூத்துக்குடியில் சமூக நல திட்டங்கள் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திருமண நிதியுதவி, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், திருநங்கைகள் நலத்திட்டம், மகளிர் தங்கும் விடுதி, முதியோர் இல்லங்கள், அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு, காலிப் பணியிடங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியன குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டப் பயன்கள் முழுமையாகச் சென்றடையும் வகையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 மதிப்பிலான வைப்பு தொகைக்கான ரசீதுகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் காமாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) (பொ) சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.1
- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 2026ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது...!நல்லாசிரியர்களுக்கு பரிவட்டம் கட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது...! 2026ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 11 நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா வத்திராயிருப்பில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. கூட்டெழுத்து காலாண்டிதழ் சார்பாக நடைபெற்ற இவ்விழாவில் கல்வியாளர்கள் பலரும் கலந்துகொண்டு நல்லாசிரியர்களை பாராட்டி பேசினர். இதனை தொடர்ந்து நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்களை கௌவரவிக்கும் விதமாக மேடையில் வைத்து அவர்களுக்கு பரிவட்டம் கட்டியும், சந்தன மாலை அணிவித்தும், நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.1
- தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் ஒன்றிய அரசை கண்டித்து திக சார்பில் ஆர்ப்பாட்டம் ஜாதி வாரி கணக்கெடுப்பதில் ஏற்படுத்த நினைக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழகமாவட்ட தலைவர் சுருளிராஜு வரவேற்புரை ஆற்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆர்ப்பாட்டத்தில் துவக்க உரையும் நிகழ்த்தினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுத்தறிவாளர் கழக செயலாளர் மோகன் மாவட்ட துணைச் செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழக பேச்சாளர் கண்ணன் எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக் போடி முகமது ஆரிப் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் நீல கனலன் ஆதித்தமிழர் பேரவை செய்தி தொடர்புத்துறை சுரேஷ் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி புரட்சி தமிழர் கட்சி மாநில அமைப்பாளர் அருந்தமிழர் அரசு மாவட்ட செயலாளர் சின்னமுத்து மாநில பொருளாளர் மணிகண்டன் திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தருண் திராவிட புரட்சி கழக செயலாளர் சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்1
- தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு! தமிழக அரசின் சார்பில் 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழக அரசு சார்பில் இலவசமாகத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனியாக ஓர் அறையை ஒதுக்கி, அதில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கப்பட்டு, அதற்கெனப் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தேனி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று அரசு மருத்துவமனைகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காகத் தேனி மாவட்டக் கண்காணிப்பு அலுவலராகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டக அறையை, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.வைத்தியநாதன் அவர்களுடன் இணைந்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இத்திட்டத்திற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலி குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின்னர், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். விரைவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளையும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.1