மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வனத்துறை அத்துமீறல்; நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல் மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வனத்துறை அத்துமீறல் – தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல். தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பின் செயலாளர் கென்னடி மற்றும் தலைவர் இராஜீவ் காந்தி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது தேனி மாவட்டம் மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வாழ்ந்து வரும் மேய்ச்சல் சமூக மக்கள் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.கடந்த சில நாட்காளாக Acf புவனேஸ்வரன் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். இச்சிக்கல்கள் தொடர்பாக பேசுவதற்காக, (19-04-2026) தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பின் செயலாளர் கென்னடி மற்றும் தலைவர் இராஜீவ் காந்தி ஆகியோர், சில மேய்ச்சல்காரர்களுடன் கடமலைக்குண்டு வனச்சரக அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு மேகமலை புலிகள் காப்பக உதவி வனப் பாதுகாவலர் (ACF) புவனேஸ்வரன் அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டு, பல்வேறு பகுதிகளில் உள்ள வனத்துறை ஊழியர்களை திரட்டி வைத்து, வந்திருந்த மேய்ச்சல்காரர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டார். தொடர்ச்சியாக Ifs படித்த ஓரு அதிகாரி போல் இல்லாமல் ரௌடி போல் அப்பகுதி எளிய மக்களை அச்சுறுத்தி வருகிறார். மேகமலை வனப்பகுதியில் பல தலைமுறைகளாக தொழு அமைத்து மேய்ச்சல் செய்து வரும் மக்களின் பாரம்பரிய உரிமைகளை Forest Rights Act, 2006 அங்கீகரிக்கிறது. இருப்பினும், அந்த உரிமைகள் நடைமுறையில் பாதுகாக்கப்படாமல், மேய்ச்சல் சமூக மக்கள் மீது தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் நடைபெற்று வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், மேகமலை பகுதியில் மேய்ச்சல் சமூக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. மேற்கண்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், ஜனநாயக முறையில் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வனத்துறை அத்துமீறல்; நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல் மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வனத்துறை அத்துமீறல் – தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல். தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பின் செயலாளர் கென்னடி மற்றும் தலைவர் இராஜீவ் காந்தி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது தேனி மாவட்டம் மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வாழ்ந்து வரும் மேய்ச்சல் சமூக மக்கள் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.கடந்த சில நாட்காளாக Acf புவனேஸ்வரன் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். இச்சிக்கல்கள் தொடர்பாக பேசுவதற்காக, (19-04-2026) தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பின் செயலாளர் கென்னடி மற்றும் தலைவர் இராஜீவ் காந்தி ஆகியோர், சில மேய்ச்சல்காரர்களுடன் கடமலைக்குண்டு வனச்சரக அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு மேகமலை புலிகள் காப்பக உதவி வனப் பாதுகாவலர் (ACF) புவனேஸ்வரன் அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டு, பல்வேறு பகுதிகளில் உள்ள வனத்துறை ஊழியர்களை திரட்டி வைத்து, வந்திருந்த மேய்ச்சல்காரர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டார். தொடர்ச்சியாக Ifs படித்த ஓரு அதிகாரி போல் இல்லாமல் ரௌடி போல் அப்பகுதி எளிய மக்களை அச்சுறுத்தி வருகிறார். மேகமலை வனப்பகுதியில் பல தலைமுறைகளாக தொழு அமைத்து மேய்ச்சல் செய்து வரும் மக்களின் பாரம்பரிய உரிமைகளை Forest Rights Act, 2006 அங்கீகரிக்கிறது. இருப்பினும், அந்த உரிமைகள் நடைமுறையில் பாதுகாக்கப்படாமல், மேய்ச்சல் சமூக மக்கள் மீது தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் நடைபெற்று வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், மேகமலை பகுதியில் மேய்ச்சல் சமூக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. மேற்கண்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், ஜனநாயக முறையில் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
- தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழகம் சார்பாக சபரி என்பவர் போட்டியிடுகிறார் இவர் தற்போது சட்டமன்ற தொகுதி முழுவதும் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் இன்று பெரியகுளம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கையில் கொடிகளை கொடுத்து சாலையில் நிக்க வச்சு தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து இவர் பள்ளி சிறுவர்களை பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் இதனால் பள்ளி மாணவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் சாலைகளில் வேட்பாளரை வரவேற்பதற்காக நிர்வாகிகள் கலர் பேப்பர்களை தூவி வரவேற்பதால் சாலை முழுவதும் குப்பை காடாக மாறி உள்ளது தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக்காக நிர்வாகியின் மீது ஏன் தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறேன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்1
- ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாச்சியார் புரம் கிராமத்தில் இன்று ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மேளதாளம் முழங்க கிரேன் மூலம் மாலை அணிவித்தும் வால் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்1
- திண்டுக்கல் மாவட்டம் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்து கட்சி சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக ஆத்தூர் வடக்கு ஒன்றியம் தமிழக வெற்றிக்கழக வெற்றி வேட்பாளர் நா. கலைச்செல்வியை ஆதரித்து தவெக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர்ML. வாசுதேவன் மற்றும் ஆத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லலித் குமார், தலைமையிலும், ஒன்றிய இணைச் செயலாளர் ராகுல்,ஒன்றிய துணைச் செயலாளர் பிரவீன், நாட்சாயி, கிளைச் செயலாளர்கள், சவேரியார், அலெக்ஸ் பாண்டியன், கில்பர்ட், சம்பத், ராஜபாண்டி, ராகேஷ், குமரேசன், கருப்பையா, நாகராஜ், அவர்கள் முன்னிலையில் பிள்ளையார் நத்தம், பாளையங்கோட்டை காம்பட்டி, கூலம்பட்டி செட்டியபட்டி, முன்னிலை கோட்டை, அரிய நல்லூர், ஆலமரத்துப்பட்டி, வக்கம் பட்டி, பித்தளை பட்டி. பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் வேட்பாளர் நா. கலைச்செல்விக்கு பூர்ண கும்பம் மரியாதை செய்தும் ஆராத்தி எடுத்தும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடி வரவேற்றனர். குறிப்பாக பித்தளைப்பட்டி பகுதியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பாக பித்தளைப்பட்டி பிரிவில் இருந்து காளியம்மன் கோவில் வரை மிகப் பிரம்மாண்டமான வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஒயிலாட்டம் மயிலாட்டம் குரங்காட்டம், மலர் தூவி 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் உலா வந்து விழா மேடைக்கு அழைத்து வந்தனர் . இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். தொடர்ந்து கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நா. கலைச்செல்வி அவர்கள் பேசியதாவது... மாண்புமிகு தமிழக வெற்றி கழக நிறுவனர் அண்ணன் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க,பொதுச் செயலாளர் ஐயா புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுத்திறன் படியும்,திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் ML. வாசுதேவன் அவர்கள் தலைமையில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் எனக்கு இந்த ஆத்தூர் சட்டமன்ற வேட்பாளராக உங்கள் முன் நிற்க உதவி புரிந்த அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்தூர் சட்டமன்றத்தை பொறுத்தவரை பொதுவாக பொதுமக்களிடையே பேசப்படுவது என்னவென்றால் அடிப்படை வசதிகள் இதுவரை ஆட்சியில் இருந்தவர்களும் சரி இதற்கு முன்னர் இருந்தவர்களும் சரி வர செய்து தராமல் பொதுமக்களை அழக்களிப்பு செய்து வந்ததாக நான் கல ஆய்வு மேற்கொள்வது அறிந்து கொண்டேன். எனவே பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் கண்டிப்பாக எங்கள் தளபதியாரின் ஆணைக்கிணங்க அதை நாங்கள் செய்து தருவோம். பொதுமக்களாகிய நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. அது என்னவென்றால் வருகின்ற 23/04/2026 வியாழக்கிழமை அன்று தமிழக மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி விட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டு சாவடிக்கு சென்று ஐந்தாம் எண்ணில் நமது விசில் சின்னம் உள்ளது அதை ஒரு அழுத்தம் அழுத்தி சரியாக நாம் விசில் சின்னத்துக்கு தான் ஓட்டு அளித்துள்ளோமா என்பதை தொலைக்காட்சியில் நேரில் நீங்கள் பார்த்துவிட்டு வந்தால் மட்டும் போதும் அதன்பின் தளபதி விஜய் அவர்கள் அரிய அணையில் முதல்வராக பொறுப்பேற்ற அடுத்த நொடியே உங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தான் அவருடைய முதல் கையெழுத்தாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டில் போதை, கொலை, கொள்ளை போன்ற கலாச்சாரம் தலை விரித்து ஆடுகிறது அதனைக் கட்டுப்படுத்தி பொதுமக்களை காப்பதே நமது தளபதியின் கடமையாக இருக்கிறது எனவே நீங்கள் எல்லாம் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அவர் முதல்வராக வலம் வருவார் என்பதை தெரிவித்துக் கொண்டு நீங்கள் அனைவரும் விசில் சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் என கூறினார்... இந்நிகழ்வில் உடன் தமிழக வெற்றிக்கழக மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்... திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் அழகர்சாமி..1
- வரும் நாள் 23/ 04/2026/அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காகவும், இடையூறின்றி தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறவும், திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பகுதியில் மின்பாதையில் மின் வயர்களுக்கு இடையூறாகவும் உராய்வு ஏற்படும் வகையிலும் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.1
- திண்டுகல் மாவட்டம் ஆண்டி நகர் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆரம்பம் இன்று பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (ஏப்.20) காலை அவர் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது தள்ளுவண்டி கடையில் வடை சுட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குகளை கேட்டார். உடன் திமுக பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்டசெயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் இந்த ஆண்டு வருகிற மே 1 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கொடியேற்றும் நிகழ்வு ஆண்டுதோறும் கண்ணகி கோவில் மலை அடிவாரத்தில் தமிழகப் பகுதியான கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் நடைபெறுவது வழக்கம். இதனை அடுத்து கடந்த ஆண்டு கண்ணகி கோவில் கொடியேற்றம் இரண்டு இடங்களில் நடைபெற்றது. லோயர் கேம்ப் பளியன் குடி மலையடி வார பகுதியில் தனியார் தோட்டத்தில் ஒரு தரப்பினர் கொடியேற்றினார் அதேபோன்று கம்பம் மங்களதேவி அறக்கட்டளை சார்பில் அவர்களது அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த ஆண்டும் லோயர் கேம்ப் பளியன் குடி வனப்பகுதிக்குள் கொடியேற்றம் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா நடைபெற உள்ளது இதனை அடுத்து கம்பம் மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கான கொடியேற்றும் விழா நடைபெற்றது கண்ணகி உருவம் பொறித்த கொடியுடைய கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதனை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சுமந்து வந்து கொடிமரத்தினை நட்டு மங்களதேவி கண்ணகி புகைப்படம் பதிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது கொடியேற்றத்திற்கு பின்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இந்த நிகழ்வில் ஏராளமான மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1