Shuru
Apke Nagar Ki App…
கடையத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அதன் தட்டுப்பாட்டை கண்டித்து ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மகளிர் காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி தலைமையில், சிலிண்டருக்கு மாலை போட்டும், விறகு அடுப்பால் தோசை சுட்டும் நூதன போராட்டம் நடந்தது.
King
கடையத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அதன் தட்டுப்பாட்டை கண்டித்து ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மகளிர் காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி தலைமையில், சிலிண்டருக்கு மாலை போட்டும், விறகு அடுப்பால் தோசை சுட்டும் நூதன போராட்டம் நடந்தது.
More news from தமிழ்நாடு and nearby areas
- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் வேடநத்தம் எனும் கிராமத்தில் பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமியின் பெற்றோரிடம் ராகுல் காந்தி அவர்களின் சார்பாக அதிகாரப்பூர்வ பேச்சாளர் திரு கிரிஷ் சோடங்கர் மற்றும் செல்வப் பெருந்தகை அவர்கள் பெற்றோர்களிடம் வீடியோ கால் மூலம் டெல்லியில் இருந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மேலும் திரு ராகுல் காந்தி அவர்கள் கூடிய விரைவில் இந்த பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதாக தெரிவித்தார் உடன் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு பெருமாள் சாமி கதிர்வேல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் திரு ஜெயக்கொடி திரு பெத்துராஜ் திரு ராகன் திரு ராஜாராம் திரு கணேசன், திரு A.X.ஜேம்ஸ் லாரன்ஸ் திரு ஜான் பிரிட்டோ திரு அரி திரு மாரியப்பன் திரு ரமேஷ் திரு முத்து மற்றும் பல தேசிய நெஞ்சங்கள் இருந்தனர்1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- தேனி மாவட்டம் வருசநாடு சமூக சேவை சங்கம் நடத்திய மகளிர் தின விழாவில் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்டத் தலைவர் செல்வலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட செயலாளர் தினேஷ், மகளிர் அணி சார்ந்த கஸ்தூரி, இளைஞர் அணியைச் சேர்ந்த சொக்கர்ராம் துரை மற்றும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.2
- தேனி மாவட்டம் கம்பத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் அத்துமீறல்களைக் கண்டித்தும், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சர்வதேச அளவில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் அதிகார அத்துமீறல்களைக் கண்டித்தும், உள்நாட்டில் சமையல் எரிவாயு விலையைத் தொடர்ந்து உயர்த்தி வரும் இந்திய ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கம்பம் காவல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசின் விலைவாசி உயர்வு மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் நாடுகளின் செயல்பாடுகளுக்கு எதிராகக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.1
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தெற்கு வாசல் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையினர் இணைந்து நடத்திய போலீஸ் கொடி அணிவகுப்பு இன்று (மார்ச் .14) காலை தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் நடைபெற்றது. இந்த பேரணி உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.1
- கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் கண்டன ஊர்வலம் – மதுரையில் பரபரப்பு மதுரை, மார்.14- சுதந்திரமான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்தும், அதனால் உருவான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமை மாலை கண்டன ஊர்வலம் நடைபெற்றது. முனிச்சாலை தினமணி டாக்கீஸ் அருகில் தொடங்கிய இந்த போராட்டத்தில், “MODI – Where is LPG?”, “No Stock” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தப்பட்டன. மேலும் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ‘இறுதி ஊர்வலம்’ போல எடுத்துச் செல்லும் விதத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. மாநில துணைத் தலைவர் டி. செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். வேல் தேவா, மாநிலகுழு உறுப்பினர் சுகஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முனிச்சாலை பகுதி குழு செயலாளர் லெனின் உட்பட பலர் இதில் பங்கேற்றனர். பேரணி தொடங்கிய இடத்தில், தன்னை பாஜக ஆதரவாளர் என்றும், ஒரு அமைப்புசாரா குழுவைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொண்ட ஒருவர், கேஸ் தட்டுப்பாடு இல்லை இவர்கள் முட்டாள்தனமாக போராட்டம் நடத்துகின்றனர் என்று காவல்துறையிடம் தெரிவித்தளார் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி எடுத்துச் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டர். தொடர்ந்து வாலிபர் சங்கத் தோழர்களுடன் வாக்குவாதம் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபரை கண்டித்து அங்கிருந்து அனுப்பினர். ஆரம்பத்தில் பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததாக கூறப்படுகின்ற நிலையில், பின்னர் கீரைத்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலையிட்டு பேரணியை நடத்த அனுமதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து செயின்ட் மேரிஸ் தேவாலயம் பகுதியில் இருந்து தினமணி திரையரங்கம் வரை பேரணி நடைபெற்றது. போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.3
- சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை பாத்தியப்பட்ட காமராஜர் காய்கறி வணிக வளாகம் 42வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது1
- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் வேடநத்தம் எனும் கிராமத்தில் பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமியின் பெற்றோரிடம் ராகுல் காந்தி அவர்களின் சார்பாக அதிகாரப்பூர்வ பேச்சாளர் திரு கிரிஷ் சோடங்கர் மற்றும் செல்வப் பெருந்தகை அவர்கள் பெற்றோர்களிடம் வீடியோ கால் மூலம் டெல்லியில் இருந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மேலும் திரு ராகுல் காந்தி அவர்கள் கூடிய விரைவில் இந்த பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதாக தெரிவித்தார் உடன் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு பெருமாள் சாமி கதிர்வேல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் திரு ஜெயக்கொடி திரு பெத்துராஜ் திரு ராகன் திரு ராஜாராம் திரு கணேசன், திரு A.X.ஜேம்ஸ் லாரன்ஸ் திரு ஜான் பிரிட்டோ திரு அரி திரு மாரியப்பன் திரு ரமேஷ் திரு முத்து மற்றும் பல தேசிய நெஞ்சங்கள் இருந்தனர்1
- Post by தமிழ்நாடுஅரசியல்1