தேவகோட்டை அருகே சித்தானூர் கோவில் திருவிழா முன்னிட்டு விறுவிறுப்பாக நடைபெற்ற 15-ஆம் ஆண்டு மாட்டு வண்டிப் பந்தயம். 54 ஜோடி மாடுகள் பங்கேற்பு : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சித்தானூரில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மது எடுப்பு உற்சவத்தை முன்னிட்டு, 15-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் கன்னங்குடி சாலையில் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி,திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளும், அவற்றை திறம்பட கையாண்ட வீரர்களும் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். பெரிய மாடு பிரிவில் நீண்ட தூர இலக்கை நோக்கி அனுபவம் வாய்ந்த காளைகள் பலப்பரீட்சை நடத்தின. சின்ன மாடு பிரிவில் இளம் காளைகளின் வேகம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பூஞ்சிட்டு பிரிவில் மிகக் குறுகிய நேரத்தில் இலக்கை எட்ட நடைபெற்ற இந்தப் போட்டி கடும் மல்லுக்கட்டாக அமைந்தது.வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சிறப்பாக வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் கோவில் கமிட்டி மற்றும் கிராமப் பொதுமக்கள் சார்பில் ரொக்கப் பரிசுகளும், கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மது எடுப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த வீர விளையாட்டு, சித்தானூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
தேவகோட்டை அருகே சித்தானூர் கோவில் திருவிழா முன்னிட்டு விறுவிறுப்பாக நடைபெற்ற 15-ஆம் ஆண்டு மாட்டு வண்டிப் பந்தயம். 54 ஜோடி மாடுகள் பங்கேற்பு : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சித்தானூரில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மது எடுப்பு உற்சவத்தை முன்னிட்டு, 15-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் கன்னங்குடி சாலையில் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி,திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளும், அவற்றை திறம்பட கையாண்ட வீரர்களும் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். பெரிய மாடு பிரிவில் நீண்ட தூர இலக்கை நோக்கி அனுபவம் வாய்ந்த காளைகள் பலப்பரீட்சை நடத்தின. சின்ன மாடு பிரிவில் இளம் காளைகளின் வேகம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பூஞ்சிட்டு பிரிவில் மிகக் குறுகிய நேரத்தில் இலக்கை எட்ட நடைபெற்ற இந்தப் போட்டி கடும் மல்லுக்கட்டாக அமைந்தது.வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சிறப்பாக வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் கோவில் கமிட்டி மற்றும் கிராமப் பொதுமக்கள் சார்பில் ரொக்கப் பரிசுகளும், கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மது எடுப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த வீர விளையாட்டு, சித்தானூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லல் ஒன்றியம் கலிப்புலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாயாண்டி அய்யனார் புரவி எடுப்பு விழா மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மது எடுப்பு மற்றும் முளைப்பாரி விழாவை முன்னிட்டு இன்று (29/4/26) புதன்கிழமை கலிப்புலி கிராமத்தில் மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு மாடுகள் களமிறங்கின. ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர்.மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை காண திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.1
- மதுரை சித்திரை திருவிழாவின் புகழ்பெற்ற முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு நேற்று மாலை அழகர் கோவில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். கள்ளழகருக்கு பரம்பரை பாதுகாவலராக இருக்கும் வெள்ளையங்குன்றம் 33 வது ஜமீன்தாருக்கு கள்ளழகர் புறப்படுவதற்கு முன்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இதனை பெற நேற்று (ஏப்.29) மதியம் பாரம்பரியமாக செல்லும் வண்டியில் அழகர் கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். அவருக்குரிய மரியாதை கோவில் நிர்வாகம் சார்பில் செலுத்திய பிறகு கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.1
- விருதுநகரில் உள்ள TailorBroஎன்ற தையல்கலைபயிற்சி ஆன்லைனில் இருபாலாருக்கும் இலவசமாக சொல்லிக்கொடுக்கிறார்கள். இதுவரை 15000க்கும் மேற்பட்ட ஆண் பெண் தையல் கலைஞர்களை உருவாக்கி இன்று அவர்கள் தொழில் முனைவோர்களாக நன்றாக சம்பாதித்து தங்கள் குடும்பத்தை தரம் உயர்த்தி வாழ்கிறார்கள் நீங்களும் இந்த அரிய வாய்ப்பை கோடைகாலத்தில் நழுவ விடாதீர்கள அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை தட்டும். பயிற்சி 3மாதங்கள், நேரம் தினமும் 2 மணிநேரம் இரவு 7மணிமுதல் 9மணிவரை.இது முற்றிலும் இலவச சேவையே! பெண்களும் தனது சொந்தக்காலில் நிற்கணும் என்ற உயரிய நோக்கத்தில் தையல்பயிற்சி அளிக்கப்படுகிறது பயிற்சி முடிந்ததும் சான்றிதழும் உண்டு மேலும் தகவலுக்கு டெய்லர்ப்ரோ யூடூப் சேனலையும் 8220688805 என்ற எண்ணையும் அணுகவும்.1
- நம்நாட்டில் விந்தையிலும் விந்தையாக வாக்குக்கு பணம் தரவில்லை என்று தாராபுரம் அருகே பஸ் மறியல் (27.4.26) அன்று தருமபுரி அருகே பென்னநகரத்தில் கள்ளமதுகடையை அடித்து நொறுக்கி விற்பனை செய்த நபரை ஒட ஒடவிரட்டிய வீரமங்கையர்களின்இந்த கிளர்ச்சி தன் வீட்டை பாதுகாக்க என்றாலும் பாராட்டப்பட வேண்டிய விசயம் 1996 தேர்தலில் மக்களின் எழுச்சி மந்திரிகள் தனது தொகுதிக்ககே போகமுடியாத சூழல் இன்று வாக்குக்கு பணம் வேண்டும் என்ற சூழல் நாம் பாதிக்கபடும்போது கோபம் கிளர்ச்சியாக மாறும் போது இந்த நிலையும் மாறும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம்...1
- திண்டுக்கல், திருச்சி ரோடு, என்ஜின் காலனியில் அமைந்துள்ள நாகா மில்லை அடுத்த பெட்ரோல் பங்க் அருகே உயர் நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலை துறையினர் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் குறும்பபட்டியைச் சேர்ந்த பாண்டி -42 சொந்த ஊரான செந்துறைக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை செல்வதற்கு அரசு கிராம பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கேசவன் 30 மற்றும் நடத்துனர் முருகேசன் 45 இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலய 5 வது ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் விமர்சையாக நடைபெற்றது. திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் குடியிருப்பு வளாகத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது இந்த கோவிலின் ஐந்தாவது ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சனையாக 1024 கலச பூஜைகளுடன் நடந்தது. முன்னதாக கடந்த 23ஆம் தேதி மாலை கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து பலி வாஸ்து கலசம் தொடங்கி 24ஆம் தேதி காலை கணபதி ஹோமம் மூல பூஜையும் 25ஆம் தேதி சாந்தி ஹோமம், பகவதி சேவை என நாள்தோறும் பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 7:15 மணியிலிருந்து 8 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது அதனை தொடர்ந்து 1008 கலசம் அபிஷேகமும் நடந்தது. இந்த விழாவில் பெல் ஊரகப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஐயப்ப சேவா சங்கத்தினர் உட்பட சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.2
- தேவகோட்டை அருகே சித்தானூர் கோவில் திருவிழா முன்னிட்டு விறுவிறுப்பாக நடைபெற்ற 15-ஆம் ஆண்டு மாட்டு வண்டிப் பந்தயம். 54 ஜோடி மாடுகள் பங்கேற்பு : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சித்தானூரில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மது எடுப்பு உற்சவத்தை முன்னிட்டு, 15-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் கன்னங்குடி சாலையில் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி,திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளும், அவற்றை திறம்பட கையாண்ட வீரர்களும் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். பெரிய மாடு பிரிவில் நீண்ட தூர இலக்கை நோக்கி அனுபவம் வாய்ந்த காளைகள் பலப்பரீட்சை நடத்தின. சின்ன மாடு பிரிவில் இளம் காளைகளின் வேகம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பூஞ்சிட்டு பிரிவில் மிகக் குறுகிய நேரத்தில் இலக்கை எட்ட நடைபெற்ற இந்தப் போட்டி கடும் மல்லுக்கட்டாக அமைந்தது.வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சிறப்பாக வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் கோவில் கமிட்டி மற்றும் கிராமப் பொதுமக்கள் சார்பில் ரொக்கப் பரிசுகளும், கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மது எடுப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த வீர விளையாட்டு, சித்தானூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.1