logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பழனி மாவட்ட அரசு மருத்துவமனையில் நீண்ட காலமாக ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பழனி மாவட்ட அரசு மருத்துவமனையில் நீண்ட காலமாக ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு வேலை வழங்ககிடக் கோரி காத்திருப்பு போராட்டம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றது. பழனி நகர் மன்ற துணைத் தலைவர் கே.கந்தசாமி, #CITU மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாநில குழு உறுப்பினர் மோகனா, மாவட்டத் துணைத் தலைவர் மனோகரன், பால் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், மாற்று திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங், #CITU மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிவகுமார், செந்தில்குமார், மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

4 hrs ago
user_Sudharsan
Sudharsan
Palani, Dindigul•
4 hrs ago
57bd7dcc-d658-45ac-9ed2-7accb0d42a43

பழனி மாவட்ட அரசு மருத்துவமனையில் நீண்ட காலமாக ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பழனி மாவட்ட அரசு மருத்துவமனையில் நீண்ட காலமாக ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு வேலை வழங்ககிடக் கோரி காத்திருப்பு போராட்டம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றது. பழனி நகர் மன்ற துணைத் தலைவர் கே.கந்தசாமி, #CITU மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாநில குழு உறுப்பினர் மோகனா, மாவட்டத் துணைத் தலைவர் மனோகரன், பால் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், மாற்று திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங், #CITU மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிவகுமார், செந்தில்குமார், மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More news from Dindigul and nearby areas
  • திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    17 hrs ago
  • சுந்தரேஸ்வரர்சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடராஜர் பெருமானை தரிசித்துச் சென்றனர்* தேனி அருகே பங்களாமேடு பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி தினத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள் பாலிக்கும் நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தூபம் காட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டிய பின்பு ஷோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நடராஜர் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டை கண்டு தரிசித்துச் சென்றனர்
    1
    சுந்தரேஸ்வரர்சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார 
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை*
*ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடராஜர் பெருமானை தரிசித்துச் சென்றனர்*
தேனி அருகே பங்களாமேடு பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி தினத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது 
முன்னதாக தனி சன்னதியில் அருள் பாலிக்கும் நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது 
அதனைத் தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தூபம் காட்டப்பட்டது 
அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டிய பின்பு ஷோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நடராஜர் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டை கண்டு தரிசித்துச் சென்றனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு தேனி வாசவி மகாலில் 50க்கும் மேற்பட்ட ஆரிய வைசியர்கள் பூணூல் அணிந்தனர் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பிராமணர்கள் வைசியர்கள் ஆசாரியார்கள் உள்ளிட்ட பூணூல் அணிந்து கொள்பவர்கள் வேத மந்திரங்கள் முழங்க பழைய பூணூலை அகற்றி புதிய பூணூல் அணியும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் அதன் அடிப்படையில் ஆவணி அவிட்டம் தினத்தை முன்னிட்டு தேனி பெரியகுளம் சாலையில் உள்ள வாசவி மஹாலில் ஆரிய வைசியர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பழைய பூணூலை அகற்றி ஆச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புதிய பூணூல் அணிந்து கொண்டனர்
    1
    ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு தேனி வாசவி மகாலில் 50க்கும் மேற்பட்ட ஆரிய வைசியர்கள் பூணூல் அணிந்தனர்
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பிராமணர்கள் வைசியர்கள்
ஆசாரியார்கள் உள்ளிட்ட பூணூல் அணிந்து கொள்பவர்கள் வேத மந்திரங்கள் முழங்க பழைய பூணூலை அகற்றி புதிய பூணூல் அணியும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் அதன் அடிப்படையில் ஆவணி அவிட்டம் தினத்தை முன்னிட்டு தேனி பெரியகுளம் சாலையில் உள்ள வாசவி மஹாலில் ஆரிய வைசியர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பழைய பூணூலை அகற்றி ஆச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புதிய பூணூல் அணிந்து கொண்டனர்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • *வருசநாடு மலைக்கிராமங்களில் நேரில் களமிறங்கிய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர்... "மக்களை பிரதிவாதியாக சேர்க்காமல் ஒருதலைப்பட்சமாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது... நோட்டீஸ் வினியோகம் மற்றும் நில அளவீடு பணிகளை நிறுத்த வைக்க வேண்டும்... மேகமலை மக்களுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யபடும்... என வழக்கறிஞர்கள் பேட்டி தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக்கிராமப் பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்ட உண்மை கண்டறியும் குழுவினர் வருசநாடு மற்றும் சுற்றுவட்டாரம் மலை கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர். மலை கிராம பொதுமக்கள் விவசாயிகள் தங்கள் தரப்பு வாதங்களை அவர்களிடம் முன் வைத்தனர். விவசாயிகளிடம் விவரங்கள் கேட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் பாரதி கூறியதாவது, "பல தலைமுறைகளாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மலைக்கிராம மக்களை நீதிமன்ற வழக்கில் ஒரு தரப்பாகவோ அல்லது பிரதிவாதியாகவோ சேர்க்காமல், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மட்டும் காரணம் காட்டி ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தி வெளியேற்ற முயற்சிப்பது மாபெரும் அநீதியாகும்; வனவாசிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசமைப்பு விதியை நிலைநிறுத்தாமல் வனத்துறை மக்களை அச்சுறுத்துவது ஏற்க முடியாதது. வனத்தின் முதல் பாதுகாவலர்களே அங்கு வாழும் மக்கள் தான் என்பதை அரசு உணர வேண்டும். எனவே, வனத்துறை மேற்கொண்டு வரும் 15 நாள் வெளியேற்ற நோட்டீஸ் விநியோகம், நில அளவீடு பணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் 118 பேர் மீதான துறை ரீதியான நடவடிக்கை அச்சுறுத்தல்களை மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; மேலும், இப்பகுதி மக்களின் பாரம்பரிய உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மறுஆய்வு மனு (Review Petition) அல்லது இடையீட்டு மனுவை தாக்கல் செய்து மக்கள் தொடர்ந்து அங்கேயே வாழ அரசு உரிய சட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பிலும் மக்களுக்காக நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
    1
    *வருசநாடு மலைக்கிராமங்களில் நேரில் களமிறங்கிய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர்... "மக்களை பிரதிவாதியாக சேர்க்காமல் ஒருதலைப்பட்சமாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது... நோட்டீஸ் வினியோகம் மற்றும் நில அளவீடு பணிகளை நிறுத்த வைக்க வேண்டும்... மேகமலை மக்களுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யபடும்... என வழக்கறிஞர்கள் பேட்டி
தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக்கிராமப் பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்ட உண்மை கண்டறியும் குழுவினர் வருசநாடு மற்றும் சுற்றுவட்டாரம் மலை கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர். மலை கிராம பொதுமக்கள் விவசாயிகள் தங்கள் தரப்பு வாதங்களை அவர்களிடம் முன் வைத்தனர். விவசாயிகளிடம் விவரங்கள் கேட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் பாரதி கூறியதாவது,
"பல தலைமுறைகளாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மலைக்கிராம மக்களை நீதிமன்ற வழக்கில் ஒரு தரப்பாகவோ அல்லது பிரதிவாதியாகவோ சேர்க்காமல், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மட்டும் காரணம் காட்டி ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தி வெளியேற்ற முயற்சிப்பது மாபெரும் அநீதியாகும்; வனவாசிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசமைப்பு விதியை நிலைநிறுத்தாமல் வனத்துறை மக்களை அச்சுறுத்துவது ஏற்க முடியாதது. வனத்தின் முதல் பாதுகாவலர்களே அங்கு வாழும் மக்கள் தான் என்பதை அரசு உணர வேண்டும். எனவே, வனத்துறை மேற்கொண்டு வரும் 15 நாள் வெளியேற்ற நோட்டீஸ் விநியோகம், நில அளவீடு பணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் 118 பேர் மீதான துறை ரீதியான நடவடிக்கை அச்சுறுத்தல்களை மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; மேலும், இப்பகுதி மக்களின் பாரம்பரிய உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மறுஆய்வு மனு (Review Petition) அல்லது இடையீட்டு மனுவை தாக்கல் செய்து மக்கள் தொடர்ந்து அங்கேயே வாழ அரசு உரிய சட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பிலும் மக்களுக்காக நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கோலாகலம்... திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது மேலும் இந்த நிகழ்வில். ஏராளமான, பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    1
    பூமலூர் ஊராட்சி  பள்ளிபாளையம் கிராமத்தில்  கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கோலாகலம்...
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி  பள்ளிபாளையம் கிராமத்தில்  கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது
மேலும் இந்த நிகழ்வில். ஏராளமான, பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
    முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
    பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.* *மதுரை :* *மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.* *வட்டாட்சியரை மிரட்டியவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடகரை கண்மாயில் வண்டல் மண் எடுத்திட அனுமதி பெற்று விவசாய பணிக்கு பயன்படுத்தாமல், அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்தப்படுவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேலுக்கு புகார் வந்ததையடுத்து, இன்று காலை அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அந்த வழியாக கட்சகட்டி பகுதியில் செயல்படும் குவாரயிலிருந்து TN-65 AR 9048 வாகனத்தில் எவ்வித அனுமதியும் இன்றி குவாரி மண் கடத்தி கொண்டுவரப்பட்டதாக தெரியவந்தது. அந்த லாரியை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறிய நிலையில், லாரி ஓட்டுநர் நிறுத்தாமல் அதிவேகமாக அப்பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றார். சினிமா பாணியில் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேல் தலைமையிலான வருவாய்த்துறையினர், மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை விரட்டிச் சென்று பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வர முயன்றனர். அப்போது வாடிப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திய ஓட்டுநர், டிப்பரில் இருந்த மண்ணை அங்கேயே கொட்டி தடயத்தை அழித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். மேலும், வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் தாசில்தாரிடம் "பார்த்துக்கொள்ளலாம்" என்னை விட்டு விடுங்கள் என மிரட்டும் தோணியில் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமயநல்லூர் டி.எஸ்.பி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தல், அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பல வருடங்களாக மணல் மற்றும் கனிம வளம் உள்ளிட்டவை திருடப்படுவதாக புகார் வந்தாலும் கண்டும் காணாமல் இருப்பது போல் உள்ள காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் இதுபோல் நேர்மையாக ஆய்வு மேற்கொண்டு கனிம வளத்திருட்டை தடுக்க முயலும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
    1
    மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.*

*மதுரை :*
*மதுரையில் சினிமா பாணியில் மண் கடத்தல் மாஃபியா விரட்டிப் பிடிப்பு - பெட்ரோல் பங்க் அருகே மண்ணை கொட்டி தப்பிக்க முயன்ற டிரைவர் - தாசில்தாரை மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.*
*வட்டாட்சியரை மிரட்டியவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.*
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடகரை  கண்மாயில் வண்டல் மண் எடுத்திட அனுமதி பெற்று விவசாய பணிக்கு பயன்படுத்தாமல், அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளி கடத்தப்படுவதாக வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேலுக்கு புகார் வந்ததையடுத்து, இன்று காலை அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அந்த வழியாக கட்சகட்டி பகுதியில் செயல்படும் குவாரயிலிருந்து TN-65 AR 9048 வாகனத்தில் எவ்வித அனுமதியும் இன்றி குவாரி மண் கடத்தி கொண்டுவரப்பட்டதாக தெரியவந்தது. அந்த லாரியை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறிய நிலையில், லாரி ஓட்டுநர் நிறுத்தாமல் அதிவேகமாக அப்பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றார்.
சினிமா பாணியில் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேல் தலைமையிலான வருவாய்த்துறையினர், மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை விரட்டிச் சென்று பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வர முயன்றனர். அப்போது வாடிப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திய ஓட்டுநர், டிப்பரில் இருந்த மண்ணை அங்கேயே கொட்டி தடயத்தை அழித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றார்.
மேலும், வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் தாசில்தாரிடம் "பார்த்துக்கொள்ளலாம்" என்னை விட்டு விடுங்கள் என மிரட்டும் தோணியில் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து சமயநல்லூர் டி.எஸ்.பி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தல், அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பல வருடங்களாக மணல் மற்றும் கனிம வளம் உள்ளிட்டவை திருடப்படுவதாக புகார் வந்தாலும் கண்டும் காணாமல் இருப்பது போல் உள்ள காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் இதுபோல் நேர்மையாக ஆய்வு மேற்கொண்டு கனிம வளத்திருட்டை தடுக்க முயலும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    52 min ago
  • வாடகை உயர்வு கேட்டு ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் தேனி மாவட்டத்தில் வாடகை உயர்வு கேட்டு ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் 3 நாள் அடையாள வேலை நிறுத்தம். தேனி மாவட்ட ஹைட்ராலிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வாடகை உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி 3 நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள் விலை உயர்வால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, குறைந்தபட்ச வாடகை 1 மணி நேரத்திற்கு ரூ.1,500 வழங்க வேண்டும், 2 மணி நேரத்திற்குள்ளான வாடகையாக ரூ.4,500/ மற்றும் டிரைவர் படி ரூ. 800 சேர்த்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் இந்த வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர். ஆகஸ்ட் 26, 27 மற்றும் 28 என தேனி மாவட்டத்தில் நடைபெறும் இந்த 3 நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஜேசிபி, ஹிட்டாச்சி, கிரேன் உள்ளிட்ட ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் வாகன உரிமையாளர் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் தேனி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களுடன் கருவேல்நாயக்கன்பட்டியில் ஒன்றினைந்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் கூறுகையில், தேனி மாவட்டத்தில் மாவட்டத்தில் மட்டும் ஹைட்ராலிக் இயந்திரங்களான ஜேசிபி, கிரேன், ஹிட்டாச்சி என பல வகைகளில் 9 ஆயிரம் வாகனங்கள் உள்ளதாகவும், பாலம், கட்டிடங்கள் கட்டுவதற்கும் மட்டுமல்லாமல் விவசாய தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதனால், வாகன உரிமையாளர் மட்டுமல்லாமல் ஆப்பரேட்டர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த விலை உயர்வை அரசு உட்பட அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கோடு மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். பேட்டி - காந்திராஜன் ( மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - ஹைட்ராலிக் உரிமையாளர்கள் கூட்டமைப்பு)
    1
    வாடகை உயர்வு கேட்டு ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்
தேனி மாவட்டத்தில் வாடகை உயர்வு கேட்டு ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் 3 நாள் அடையாள வேலை நிறுத்தம். 
தேனி மாவட்ட ஹைட்ராலிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வாடகை உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி 3 நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள் விலை உயர்வால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, குறைந்தபட்ச வாடகை 1 மணி நேரத்திற்கு ரூ.1,500 வழங்க வேண்டும், 
2 மணி நேரத்திற்குள்ளான வாடகையாக ரூ.4,500/ மற்றும் டிரைவர் படி ரூ. 800 சேர்த்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் இந்த வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர்.
ஆகஸ்ட் 26, 27 மற்றும் 28 என தேனி மாவட்டத்தில் நடைபெறும் இந்த 3 நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஜேசிபி, ஹிட்டாச்சி, கிரேன் உள்ளிட்ட ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் வாகன உரிமையாளர் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் தேனி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களுடன் கருவேல்நாயக்கன்பட்டியில் ஒன்றினைந்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இது குறித்து ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் கூறுகையில், தேனி மாவட்டத்தில் மாவட்டத்தில் மட்டும் ஹைட்ராலிக் இயந்திரங்களான ஜேசிபி, கிரேன், ஹிட்டாச்சி என பல வகைகளில் 9 ஆயிரம் வாகனங்கள் உள்ளதாகவும், பாலம், கட்டிடங்கள் கட்டுவதற்கும் மட்டுமல்லாமல் விவசாய தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதனால், வாகன உரிமையாளர் மட்டுமல்லாமல் ஆப்பரேட்டர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த விலை உயர்வை அரசு உட்பட அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கோடு மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பேட்டி -  காந்திராஜன் ( மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - ஹைட்ராலிக் உரிமையாளர்கள் கூட்டமைப்பு)
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி
கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் 
பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து  குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Dr A. SUBETHAR
    Dr A. SUBETHAR
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    1 day ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.