தூத்துக்குடியில் வீட்டின் சுவர் ஏறி குதித்து, பெண்ணை கத்தி முனையில் மிரட்டி 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வாலிபரை 5 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி தூத்துக்குடியில் வீட்டின் சுவர் ஏறி குதித்து, பெண்ணை கத்தி முனையில் மிரட்டி 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வாலிபரை 5 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். நேற்று தூத்துக்குடி கதிர்வேல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துச் சென்று தப்பியோடியுள்ளார்.இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு எதிரியை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, எதிரியை அடையாளம் கண்டு தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது தூத்துக்குடி P&T காலனி பகுதியில் மேற்படி அடையாளங்களுடன் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சசிகுமார் (30) என்பதும் மேற்படி வீடு புகுந்து பெண்மணியிடம் தங்கச் செயினை பறித்து சென்றதும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த தங்கச் செயினையும் மீட்டனர்.மேலும் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். துரிதமாக செயல்பட்டு எதிரியை கைது செய்து தங்க தங்கச்செயினை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் பாராட்டினார்.
தூத்துக்குடியில் வீட்டின் சுவர் ஏறி குதித்து, பெண்ணை கத்தி முனையில் மிரட்டி 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வாலிபரை 5 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி தூத்துக்குடியில் வீட்டின் சுவர் ஏறி குதித்து, பெண்ணை கத்தி முனையில் மிரட்டி 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வாலிபரை 5 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். நேற்று தூத்துக்குடி கதிர்வேல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துச் சென்று தப்பியோடியுள்ளார்.இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு எதிரியை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, எதிரியை அடையாளம் கண்டு தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது தூத்துக்குடி P&T காலனி பகுதியில் மேற்படி அடையாளங்களுடன் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சசிகுமார் (30) என்பதும் மேற்படி வீடு புகுந்து பெண்மணியிடம் தங்கச் செயினை பறித்து சென்றதும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த தங்கச் செயினையும் மீட்டனர்.மேலும் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். துரிதமாக செயல்பட்டு எதிரியை கைது செய்து தங்க தங்கச்செயினை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் பாராட்டினார்.
- கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பார்த்திபன் அதிரடி பேட்டி1
- முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக குமரியில் இருந்து நாகர்கோவில் வந்து கொண்டிருந்தார்.அப்போது பறக்கை விளக்கு பகுதியில் அவர் வந்து கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். வாகனத்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.3வது முறையாக அவரது வாகனத்தை அதிகாரிகளால் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- மதுரை மாவட்டம், திருமங்கலம்.1
- சிவகங்கையில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, விஜய் தனியாக போட்டியிடவில்லை. தனித்து விடப்பட்டுள்ளார் என்றவர், விஜய் பிரச்சாரத்தின் போது காரில் மீது பாய்ந்தது தொண்டர்கள் அல்ல ரசிகர்கள். ரசிகர்களின் நடவடிக்கை அப்படித்தான் இருக்கும் என்றார். விஜய் வரவால் அரசியலில் தாக்கம் ஏற்படும் என கூறிய டி டி வி கூறியதற்கு, டிடிவி அரசியலுக்கு வரும்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவேன் என கூறினார். தொடர்ந்து மோடி மற்றும் பாஜகவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய டிடிவி, இப்போது தாமரை இலையில் படுத்து உறங்குகிறார். அதுபோலத்தான் என விமர்சனம் செய்தார். வாஜ்பாயின் பாஜகவிற்கும் நரேந்திர மோடியின் பாஜகவிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உள்ளன. வாஜ்பாய் மதத்தை வைத்து மக்களை பிரிக்கின்ற செயலை செய்யவில்லை. ஆதலால் கலைஞர் கருணாநிதியும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் வாஜ்பாய்க்கு ஆதரவளித்தனர் . அதிமுகவின் அடிப்படை விதியினை எடப்பாடி பழனிச்சாமி பின்பற்றவில்லை. தான் செய்த ஊழலை மறைப்பதற்காக அதிமுக கட்சியை பாஜகவுடன் எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்துவிட்டார் என குற்றம் சாட்டியவர், எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தலில் அதிமுக தொண்டர்கள் விடை கொடுப்பார்கள் என உறுதிப்பட தெரிவித்தார். தொடர்ந்து, எல்லா ஆட்சியிலும் போதை பொருள் பழக்கங்கள் உள்ளன என்றவர், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் வரும்போது சோம பானம் என அதனை கொண்டு வந்தாக கூறினார். சிவகங்கைத் தொகுதியை காரைக்குடியை விட அனைத்து நிலைகளிலும் உயர்த்தி காட்டுவேன். மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவேன் உள்ளிட்ட திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்துக்குப் பிறகு இரட்டை இலை போய்விட்டது. தற்போது ஒத்த இலை மட்டுமே உள்ளது. அதுவும் பிஜேபியின் தாமரையில் முடங்கிப் போய் கிடக்கிறது. எனவே தமிழக மக்கள் இரட்டை இலையும் பிஜேபியும் நிராகரித்து விட்டார்கள். இந்த தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஸ்டாலின் இரண்டாவது முறையாக பதவியேற்பார் என கருணாஸ் தெரிவித்தார்.1
- தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அண்ணாவின் அறிவுறுத்தலின்படி நட்சத்திர பேச்சாளராக தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் தென் மாவட்டங்கள் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட போறேன். நட்சத்திர வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் நெருக்கடி குறித்த கேள்விக்கு: எல்லா இடத்திலும் நடக்காது ஏதோ ஒரு சில இடங்களில் நடக்கும் தேர்தல் கமிஷனரிடம் நிர்மல் குமார் புகார் அளித்துள்ளார் அவங்க நடவடிக்கை எடுப்பார்கள். அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது திமுக தேர்தல் அறிக்கை கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு: ஒருமுறை தேர்தல் வரும் போது இந்த மாதிரி அட்ராக்டிவ் வாக்குறுதிகள் கொடுப்பார்கள் ஆனால் முழுமையாக நிறைவேற்றினார்கள் என்பது ஒரு கேள்வி. ஊழல் அதிகமாக செய்வதால் நான் எங்களின் தலைவர் போல் தமிழக வெற்றி கழகம் போன்ற புதிய கட்சிகள் அரசியலுக்கு வரும் சூழல் உள்ளது. மக்களுக்கு இந்த முறை தெரியும், என்னென்ன செய்தார்கள் என்னென்ன செய்யவில்லை என்று. நான் என்ன சொல்லி வாக்கு சேகரிக்க போறேன் என்றால் கடந்த 70 வருடங்களாக நான்கு லட்சம் (sorry) ஐந்து லட்சம் கோடி கடந்த நான்கு வருடங்களில் மட்டும் ஐந்து லட்சத்து 60 (sorry) 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடன் உள்ளது. 70 வருடங்களில் 5 லட்சம் கடன் ஐந்து வருடத்திற்கு 6 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த ஒரு பாயிண்ட் போதும் நாட்டோட முன்னேற்றம் எந்த வகையில் உள்ளது என்று சொல்லி வாக்கு சேகரிக்க போறோம் அதனால் களம் எங்களுக்கு எளிமையாக இருக்க போகிறது. நாங்கள் அறிவித்த வாக்குறுதிக்கு எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் அரசியல் பணம் சம்பாதிக்கும் இடமாக மாறியதால் தான் நடிகர் விஜய் என்னை போன்ற நபர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். TN 2026 படம் தமிழக வெற்றி கழகத்தை தாக்கி கதைக்களம் இருப்பதாக பரவி வரும் கருத்து குறித்த கேள்விக்கு: சினிமா ஒரு கலை அதற்கு ஜாதி மதம் கிடையாது. தனிமனித தாக்குதல் அதில் இருக்கா என்பது முழுமையாக படம் வெளியே வந்தால் தான் தெரியும். நட்டியும் விஜய் சார் பிரண்டு தான் அதனால் தவறாக இருக்காது. விர்ச்சுவல் வாரியர்ஸ் சமூக வலைத்தளங்களில் கருத்து பரப்புவது குறித்த கேள்விக்கு: அனுமானத்தில் எது வேண்டுமானாலும் பேசலாம் முழு படம் பார்த்ததுக்கு பிறகு தான் தெரியும் அதனால் பார்த்து விட்டு சொல்லுங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ் எல்லாத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன் படம் வந்ததற்கு பிறகு நம் தலைவரையோ தமிழக வெற்றி கழகத்தையோ தவறாக பேசியிருந்தால் நடவடிக்கை எடுக்க முடியுமா நடவடிக்கை எடுப்போம் தலைவர் சொன்னதைப் போல் டீசண்டா அப்ரோச் பண்ணுவோம் என்பது தான் என்னோட கருத்து. பிரதான கட்சிகள் தங்களுக்குள் தான் போட்டியென மாறி மாறி சொல்வது குறித்த கேள்விக்கு: எல்லா கட்சியும் அவங்களை முன்னிலைப்படுத்தி தான் பேசுவார்கள் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது என்று தெரிய வேண்டும். எங்களுக்கும் திமுகவுக்கு தான் போட்டியான எங்கள் தலைவர் சொல்வதில் ஆணித்தனமான உண்மை உள்ளது.1
- இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் கருப்பையா ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) நகர வீதிகளில் மேளதாளத்துடன் விசில்( சின்னம்) சத்தத்துடன் மனுதாக்கல் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற காட்சி இன்று வாடிப்பட்டியில் வெயிலின் தாக்கம் குறைந்து மேக் மூட்டம் இருந்ததால் கட்சியினர் சற்று நிம்மதி1
- Post by மா.கணேஷ்1
- கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். இதையடுத்து இன்று காலை அவர் கன்னியாகுமரி கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களிடம் அவர் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளும் அவருடன் சென்றனர்.1
- சுரண்டை அருள்மிகு வெயிலாயி அம்மன் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கும்மி பாட்டு நிகழ்ச்சி நடந்தது1