Shuru
Apke Nagar Ki App…
மருந்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! ஆங்கில மருந்து நிறுவனம் ஒன்றில் மாவட்ட வாரியாக மற்றும் தாலுகா வாரியாக பணிபுரிய மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் தேவை. பணியின் அடிப்படை: கமிஷன் / சம்பளம் தகுதி: அறிமுக பயிற்சி வழங்கப்படும் மருத்துவ / விற்பனை அனுபவம் இருந்தால் முன்னிலை பணி பகுதிகள்: மாவட்டம் / தாலுகா வாரியாக தொடர்பு கொள்ளவும்: 98655 11215
Theni Godwin
மருந்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! ஆங்கில மருந்து நிறுவனம் ஒன்றில் மாவட்ட வாரியாக மற்றும் தாலுகா வாரியாக பணிபுரிய மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் தேவை. பணியின் அடிப்படை: கமிஷன் / சம்பளம் தகுதி: அறிமுக பயிற்சி வழங்கப்படும் மருத்துவ / விற்பனை அனுபவம் இருந்தால் முன்னிலை பணி பகுதிகள்: மாவட்டம் / தாலுகா வாரியாக தொடர்பு கொள்ளவும்: 98655 11215
More news from Theni and nearby areas
- "சுடச்சுட வடை & காபி ரெடி! ☕️🍩 வாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து சாப்பிடலாம்! 😋✨ | Evening Snacks Time"1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குட்டம் ஊராட்சி தாசிர் பட்டியில் ஊர் நுழைவாயில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தெருக் குழாயில் தண்ணீர் என்பது ஒரு வருங்களாக பிரச்சனை இருந்து வருகிறது பலமுறை ஊராட்சி செயலாளர் ஜோனல் அவர்களிடம் கூறியும் கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு சின்டெக்ஸ் தனியாக வைத்துக் கொடுத்தால் தான் தண்ணீர் பிரச்சனை தீரும் என ஊராட்சி செயலாளர் தங்கவேல் அவர்கள் கூறினார் இதுவரை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கண்டுகொள்ளவில்லை தற்போது வெயில் காலங்கள் தண்ணீர் இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்த வருகின்றனர் தண்ணீருக்காக பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது தமிழக அரசின் திமுக அரசு இது சம்பந்தமாக அந்தக் கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியபோது அவர்களும் ஏன் அசிங்க படுத்துகிறீர்கள் என்று கூறுகின்றனர் என்று கூறுபவர்கள் யாருக்கு அந்த அசிங்கம் என்று தெரியவில்லையா உங்கள் கட்சிக்கு தானே அந்த அசிங்கம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்து கொடுக்க முடியாத கட்சியாக உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் தற்போது இந்த தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என கூறி வருகின்றனர் ...1
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி பொங்கல் உற்சவம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காரியாபட்டி தெற்காற்றுப் பகுதிகளில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் எடுத்தும், பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இந்த ஊர்வலம் ஐயப்பன் கோவில், பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன் நடைபெற்றது. பின்னர், முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். முக்கிய நிகழ்வாக, நாளை இரவு பாரம்பரிய முறையில் புஷ்ப பல்லாக்கில் முத்தாலம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்க உள்ளார்.1
- குண்டடம் நால்ரோடு அருகே நூல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது — ரூ.24 லட்சம் மதிப்பிலான நூல்கள் நாசம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் நால்ரோடு பிரிவு பகுதியில், நூல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சுமார் ரூ.24 லட்சம் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமானது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் உள்ள சண்முகவேல் மில்லில் இருந்து, கருவராயன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் அங்கமுத்து, அசோக் லேலாண்டு லாரியில் எட்டு டன் நூல்களை ஏற்றி, திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை மில்லிற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். தாராபுரம் வழியாக குண்டடம் நால்ரோடு பிரிவு பகுதிக்கு வந்தபோது, அதிக வெப்பத்தால் லாரியின் சைலன்சர் பகுதியில் இருந்து எழுந்த தீப்பொறி, மேலே ஏற்றியிருந்த நூல் மூட்டைகளின் மீது பட்டு, திடீரென தீப்பிடித்தது. சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் இதை கவனித்து, லாரி ஓட்டுனர் அங்கமுத்துவிடம் தெரிவித்தனர். உடனே அவர் வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ வேகமாகப் பரவி, கரும்புகையுடன் எரியத் தொடங்கியது. தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அங்கமுத்துவுக்கு கை, கால், முகம் போன்ற இடங்களில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீர் பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றும், நூல் மூட்டைகள் அதிகமாக இருந்ததால் தீ நீண்ட நேரம் எரிந்தது. இந்த சம்பவம் குறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேக் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் புறவழிச் சாலை பகுதியில் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.1
- வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்2
- Post by அன்பரசு1
- காதலைப்போய் குப்பையில் போடு #lovestatus #suryamovie #publicintrest #tamil #superscenestamil1
- விருதுநகர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அருப்புக்கோட்டை திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் திருச்சுழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டனர். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியை அமைப்பதற்கான தேர்தல் பணிகள், கள உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, “2026 தேர்தல் தமிழ்நாடு அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையிலான ஜனநாயகப் போர்க்களமாக அமையும். இது மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கும், மதவாத பிற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான போட்டி. மதவாத சக்திகளுடன் இணைந்து செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம்” என்றார். மேலும், “இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக திகழும். அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டு செயல்படுவது நமது முக்கியப் பணி” எனவும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.1
- வேடசந்தூர் திண்டுக்கல் டு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி சோதனை சாவடி அருகில் இரவு சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து யூடேன்னில் இருந்து சுமார் 100 அடிக்கு சாலையின் நடுவே தடுப்பிற்காக வைக்கப்பட்ட அலுமினிய தகடுகளை சேதப்படுத்தி நின்றது விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்1