மதுரை கிழக்கு= மேற்குத் தொகுதிகளில் முனைப்பு காட்டும் திமுக மதுரை.. மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் 19-வது வார்டில் 117 பயனாளிகளுக்கு புதன்கிழமை மாலை பட்டா வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.மூர்த்தி பட்டா ஆணைகளை வழங்கினார். நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அமைச்சருக்குப் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். இதற்கிடையில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தேர்தல் வந்தால் சாலைகள் பளபளக்கும் எனப் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாப்பாக்குடி தினமணி நகர் பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் அவர் எந்த வசதியும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்ற பின்பே சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜுவால் ஏன் செய்ய முடியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மதுரை கிழக்கு= மேற்குத் தொகுதிகளில் முனைப்பு காட்டும் திமுக மதுரை.. மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் 19-வது வார்டில் 117 பயனாளிகளுக்கு புதன்கிழமை மாலை பட்டா வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.மூர்த்தி பட்டா ஆணைகளை வழங்கினார்.
நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அமைச்சருக்குப் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். இதற்கிடையில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தேர்தல் வந்தால் சாலைகள் பளபளக்கும் எனப் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாப்பாக்குடி தினமணி நகர் பகுதிக்கு கடந்த
4 ஆண்டுகளில் அவர் எந்த வசதியும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்ற பின்பே சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜுவால் ஏன் செய்ய முடியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
- மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2
- இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியினை விரைந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதிலட்சுமிபுரம் அருகே உள்ள பழைய இரும்பு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து ஆத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொழுந்துவிட்டு பற்றி எரிந்த தீயை நீண்ட நேரமாக போராடி தண்ணீரை பீச்சி அடித்து முற்றிலுமாக அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளித்ததுடன் பரபரப்பான சூழல் நிலவியது.1
- Post by Ajithkumar S1
- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என முழக்கமிட்டனர். மேலும், மத்திய அரசு தலையிட்டு போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.1
- வேடசந்தூர் காமராஜர் பேருந்து நிலையம் இன்று4:3:2026 புதன்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது 1.19 கோடி நிதியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது கழிப்பறை இன்றி கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சில சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டதால் 20 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கழிப்பறை கட்டிக் கொண்டுள்ளனர் இந்த பேருந்து நிலையத்தில் முன்பு இருந்ததைப் போல் 15 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது அது தற்போது இல்லை தற்போது ஐந்து ஆறு கடைகள் மட்டுமே உள்ளது ? கட்டண கழிப்பறை மற்றும் பொதுக்களிப்பறை இரண்டு செயல்பட்டது பொதுக்களிப்பறை கட்டுமான பணி நடைபெறுகிறது? தாய்மார்கள் பாலூட்டும் அரை முன்பு இருந்தது தற்போது இல்லை? குடிதண்ணீர் வசதி முன்பு இருந்தது தற்போது இல்லை? மழை வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழல் கூடை போல் இருந்தது தற்போது இல்லை ? பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசு உள்ளது அதை செய்யாமல் கடமைக்காக செயல்படுவது என்பது வருத்தத்துக்குரியது .. இவன்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் )(CPI-ML) வேடசந்தூர் ஒன்றிய குழு.1
- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் வருவாய் அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், வருவாய்த் துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை அலுவலர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் தேனி - மதுரை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது1
- மதுரை.. மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் 19-வது வார்டில் 117 பயனாளிகளுக்கு புதன்கிழமை மாலை பட்டா வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.மூர்த்தி பட்டா ஆணைகளை வழங்கினார். நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அமைச்சருக்குப் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். இதற்கிடையில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தேர்தல் வந்தால் சாலைகள் பளபளக்கும் எனப் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாப்பாக்குடி தினமணி நகர் பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் அவர் எந்த வசதியும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்ற பின்பே சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜுவால் ஏன் செய்ய முடியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.3